Tuesday 2 November 2010

சாருமதி என்றொரு மானுடன்
- லெனின் மதிவானம்
நமது காலத்தைய மகத்தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.1998 அன்று இறந்தார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகினையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணீர் சிந்தாத இலக்கிய நெஞ்சங்களே இல்லை. ஆனால் வருட காலங்கள் உருண்டோடி விட்டன சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக்கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியது சமகால தேவையாகும்.

ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம் மனிதன் வாழ்க்கை ஏதோ ஒருவகையிலும் அளவிலும் சமூக பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்ச்சிகிறார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகின்றது. கவிஞர் சாருமதி அவர்களும் இவ்வாறுதான் இன்றைய நிகழ்வாகின்றார்.

இறந்த மனிதனின் வாழ்வும் நினைவுகளும் இன்றைய பிரச்சனைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ்வகையில் சாருமதியின் பங்களிப்பினை புரிந்துக் கொள்வதற்கும் அவர் பொறுத்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவரது கொள்கையை நடைமுறையை பட்டைத் தீட்ட முனைந்த சமூக பின்புலம் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகும். இப்பின்புலத்தில் க. யோகநாதன், சாருமதியாக பரிணாமம் அடைந்த கதை வரலாற்றினை நோக்குவோம்.

யோகநாதன் சாருமதியான சமூக பின்புலம்:-

70 களின் இறுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் தோழர் கிருஷ்ண குட்டி, சுபத்திரன் முதலானோர் தலைமையிலான மக்கள் இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளை பரப்பிய போது பல்வேறு ஆளுமைகளை - புத்திஜீவிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் விவசாயிகள் என தன் நோக்கி வேகமாக ஆகிர்ஷித்திருந்தது. அவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆளுமை சுவடுகளில் ஒருவர் தான் கவிஞர் சாருமதி.

தானுண்டு, தனது குடும்பமுண்டு என்ற நிலையில் வாழ்த்து அந்திம காலத்தில் தமது குடும்ப பெருமைகளை முன்னெடுக்கும் வாரிசாகவும் வளர வேண்டும் என்ற தமது குடும்பத்தாரின் எதிர்ப்பர்ப்புகளுக்கும் முழக்கு போட்டு விட்டு, அவர்களின் எதிர்ப்பினையும் கடந்து ஓர் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியவர் சாருமதி. இந்தியாவில் தோன்றி வளர்ந்த நகசல் பாரி இயக்கத்தின் தலைவரான சாருமஜிம்த்தாரானால் ஆதரிக்கப்பட்ட யோகநாதன் சாருமதி என தமது பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். இந்திய நக்கல் பாரி இயக்கத்தின் போக்கினையும் நோக்கினையும் எந்தளவு உணர்ந்திருந்தார் என்பதோ அல்லது அத்தகைய சிந்தனை போர்களை எந்தளவு தமது சூழலில் பிரயோகித்தார் என்பதும் வினாவிற்குரியதாகும். அவரது எழுத்துக்களில் அத்தகைய சிந்தனை வெளிப்படாது என்பதை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.

1970 களில் மட்டகளப்பு பிரதேசத்தில் முகிழ்ந்த புதிய அரசியல் முனைப்புகிளின் பின்னணியில் தனது பாத்திரத்தைத் தீர்க்கமாய் தெளிவாய் வகுத்துக் கொண்டவர். சாருமதி வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு சிதைந்த சிதைவுறுகின்ற மனித குலத்தின் கம்பீரத்தையும் யௌவனத்தையும் தேக்கி தர முற்பட்டது இவரது வாழ்வு. காலப்போக்கில் பல தோழர்களின் பிரிவு குறிப்பாக தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் மறைவு, இலங்கையில் மட்டுமன்று உலகலாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, வடகிழக்கில் ஏற்பட்ட மிதவாத அரசியலின் மேலாதிக்கம், ஆயுத அச்சுறுத்தல் இவற்றுடன் தனக்கு கிடைத்த அரசின்

சம்பளம் என்பனவற்றுடன் தமது நடவடிக்கைகளுக்கு முழக்கு போட்டிருக்கலாம். மக்கள் இயக்க நடவடிக்கைகளையும் தத்துவார்த்த போராட்டங்களையும் முன்னெடுத்த பலர் இம்மாற்றங்களோடு தடம்புரண்டு போக சாருமதி சற்றே அந்நியப்பட்டு மக்கள் நலன் சார்ந்த பதாகையை அவ்வவ் காலக்கட்டங்களில் முன்னெடுத்து வந்துள்ளார்.

இ;வ்விடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் குறித்ததோர் காலகட்ட ஆர்பரிப்பில் மக்கள் இயக்கங்களுடன் தன்னை இணைத்திருந்த கவிஞர் அத்தகைய சூழல் இல்லாத காலக்கட்டங்களிலும் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளார். என்பது அவரது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும். அந்தவகையில் ஓர் காலக்கட்டத்தின் இடைவெளியை நிரப்பியவர் சாருமதி என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை

இத்தகைய பின்ணனியில் தான் சாருமதியின் இலக்கிய சிந்தனைகளும் கோட்பாடுகளும் செழுமைப்படுத்தப்பட்டன. சாருமதியின் சமூக பங்களிப்பு குறித்த கட்டுரையினை ஆய்வு வசதி கருதி பின்வருமாறு வகுத்துக் கூற விழைகின்றேன்.

கவிஞர்
சஞ்சிகை ஆசிரியர்
வெளியீட்டாளர்
ஆசிரியர்
பிற முயற்சிகள்.


கவிஞர்

சாருமதி பல கனதியான கவிதைகளை இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். இவரது கவிதைகள் குமரன் தாயகம் தீர்த்திக்கரை, நந்தலாலா, வயல், பூவரசு ஆகிய இதழ்களை அலங்கரிப்பதில் சிறப்பான பங்களிப்பினைச் செய்துள்ளது. “கருத்துக்கள் வானத்திலிருந்து வருகின்றனவையல்ல. அவை மக்கள் மத்தியிலிருந்தே வருகின்றன” என்ற மக்கள் இலக்கிய கோட்பாட்;டை வரித்துக் கொண்ட கவிஞர் மக்களையே வரலாற்றின் பிரமக்களாகக் கொண்டு தமது கவிதைகளை தீட்ட முனைந்துள்ளார். தமது கவிதையின் தார்மிகம் குறித்தும் அதன் பிறப்பு குறித்து அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன.

அடிமைகளாய் நாங்கள
கவிதைக்கு
அடியெடுத்து பாடவில்லை
விடுதலையின் கீதங்களை
விண்ணதிரும் கலைக்கோஷங்களாய்
நிலையெடுத்துப் பாடுகின்றோம்
ஆயிரம் விலைக் கொடுத்தாலும்
நாங்கள்
கவியை விற்று
பிழைக்க மாட்டோம்
அழுகுரலில் பாட மாட்டோம்
ஆழதழுது ஓயமாட்டோம்
மலைபோல் துன்பங்களை
முதுகினில் ராகத்தை
விடாது இசைத்திடுவோம்.

அடிகளுக்கு அஞ்ச மாட்டோம்
அப்பாவித் தனங்களினால்
எடுபிடியாய் ஆனோரும்
எம் வர்க்கம் ஆயிருந்தால்
அவர்களிடையேயும்
பாட்டாளிவர்க்க அரசியலை
கொண்டு செல்வோம்.
துப்பாக்கிக் குண்டுகளால்
துடி துடித்து இறந்தாலும்
உழைக்கும்
வர்க்கத்தின் விடுதலையை
இறுதி மூச்சிலும் கோஷிப்போம்
நடைமுறைக்கே முதலிடம்
தாம் கொடுத்து பாட்டிசைப்போம்
இயந்திரத்தே இல்லாத
சில்லும் பல்லுமாக
இலக்கியங்கள்
படைக்க மாட்டோம்

கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் உலகிலுள்ள படைப்புகிலே மேலான படைப்பு மனிதனாவான். அதனால் தான் மனிதமன் என்ற சொல் அவருக்கு கம்பீரமாக ஒலிக்கின்றது அத்தகைய மனித குலத்தின் கம்பீரத்தை அதன் நாகரிகத்தை மேற்குறித்த வரிகள் எமக்கு அழகுற படம்பிடித்துக் காட்டுகின்றன. சாருமதியில் காணக்கிட்டும் மனித நேயம் என்பது இக்கவிஞனின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட வர்க்கத்தின் போர் முகமாய் எழுகின்ற இவரது கவிதைகள் மிகுந்த நிசர்சனங்களாய் விளங்குகின்றன.



இனம், மதம், மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து புதியதோர் நாகரிகத்திற்க்காய் அவரது வரிகள் இவ்வாறு நகர்கின்றன.

ஒன்றாய் தொழில் புரிந்தோம்
ஓர் அலுவலகமே சென்றோம்
என்றாலும் எம்மிடையே
எத்தொடர்பும் இருந்ததில்லை

பண்டா நீ சிங்களவன்
பரம்பரை இனவெறியன்
என்றாலும் நான் குறைவோ
என் குரலும் தமிழ் ஈழம்
..........
சி}ங்களப் பெருமையில்
சிந்தித்து வாழ்ந்த நீ
நஞ்சுடன் கலந்தாயென
நாளிதழ் சொன்னது
.......
என்றைக்கும் நானும்
உன் போல் நஞ்சிடம்
தஞ்சம் புக வேண்டி வருமோ!
வறுமையும் வாழ்க்கையும்
உனக்கும் எனக்கும்
ஒன்றென்பதை என்னால் இப்போது தான்
இனம் கான முடிகின்றது
......
தனிச் சிங்களப் பெருமைகள்
உனது தற்கொலையை
தடுக்க முடியாமல் போன போதுதான்
எனது “தமிழ் கனவுகள்”
தகரத் தொடங்கின
என்றாவது ஒரு நாளில்
எமது ஆத்மாக்கள்
ஒன்றாகியே தீர வேண்டும்.

இனக்குரோதம், வகுப்புவாத வெறி இவற்றின் மத்தியிலும் ஆங்காங்கு உழைக்கும் மக்களின் உணர்வு வர்க்க அடிப்படையில் தோய்ந்ததாக இருக்க முடியும் என்பதை சாருமதியின் மேற்குறித்த வரிகள் வெளிக்கொணர்கின்றன.

குறித்தோர் காலச் சூழலில் உழைக்கும் மக்களின் போர்குணத்தை தீவிரமாகப் பாடிய கவிஞர் இனவாதம் இனக் குரோதம் என்பன கேவலமானதோர் அரசியலின் பின்னனியில் மோசமானதோர் நிலையினை எட்டியபோது அத்தகைய முரண்பாடுகளிலிருந்து அந்நியப் படாமலும் தெலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கி விடாமலும் அதே சமயம் இயங்கியல் பார்வையிலிருந்து அந்நியப்பட்டாலும் தமது சரித்திர தூரிகையை இவ்வாறு நகர்த்தி செல்கின்றார்.

“தெருவில் பிணங்கள்
தூக்கி வீசப்பட்டிருந்தன
அவைகளின் உதிரத் தொடர்புகள்
துடித்துக் கதறி
ஓர் இனத்தின் கோலத்தை
தம் ஓலத்தில்
உரித்தாக்கி கொண்டன.”

இனவொருக்கு முறை என்பது வர்க்க விடுதலைக்கு அப்பாற்பட்டது என எதிர்க்கொண்டது என எதிர் கொண்ட வரட்டு மார்க்ஸிசவாதிகளிலிருந்தும் அதே சமயம் வர்க்க விடுதலை சாத்தியமற்றது இனவிடுதலைப் போராட்டமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு எனக் கொண்டு தடம் புரண்ட இடதுசாரிகளின் ஊறைகளிலிருந்தும் அந்நியப்பட்டு இனவொருக்கு முறையினை மார்க்ஸிய நிலை நின்று எதிர்கொண்டமை சாருமதியின் இயங்கியல் பார்வைக்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

சாருமதியின் இந்நோக்கும் போக்குமானது காலநகர்வோடு பரந்து விசாலிக்கின்றது. மக்களை ஒட்டியதாய் கிளைப்பரப்புகின்றது. இவரது சுனி ஒரு கலக்காரி எனும் கவிதை லோகாபா பழங்குடியைச் சேர்ந்த சுனில் கொத்தாவின் தற்கொலைக் குறித்து பாடுகின்றது. வங்காளப் பல்கலைக்கழகமொன்றில் ஆ.யு கற்கைநெறியை தொடர்ந்த மாணவியான இவர் இங்கு இடம்பெற்ற சாதி, பால் ரீதியாக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிகழ்வு குறித்து சாருமதியின் வரிகள் இவ்வாறு அமைகின்றன.

மாதவியும்
மனிதப் பிறவிதானே
கானல் வரி பாடி

மேசையென்று செல்லி
விலகி போன
கோவலன் மட்டுமென்ன
கற்புக்கு அரசனா.....?

....... இந்தியாவின்
இந்து சனாதனம்
அசிங்கங்களின் குப்பைத் தொட்டி
சுனி
அதையே கண்டனம் செய்தாள்
தன்னைத் தானே
கொன்று போட்டதாய்...!

ஆயிரம் ஆண்டுகளாய் சொல்லித்தும் போன இந்நிய பண்பாட்டையும் இந்து கடமையான சனாதனத்தின் பயன்பாடுகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கினறார். கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் பொதுவில் சராசரி புத்திஜீவிகளின் அரசியல் கடமையான சமூக முரண்பாடுகளை சமரசம் செய்தல், நியாயப்படுத்தல். அழகுப்படுத்தல் எனும் புண்மைகளைத் தாண்டி இக்கவிஞனின் கவிதைகள் தனக்கே உரித்தான ஒளிப்பிழம்பை ஏற்றி துணிவுடன் நடக்கிறது.

பெண்ணியம் குறித்து கதைத்த போது அதனை வெறுமனே பெண்ணியத்துடன் மட்டும் நிறுத்தி விடுவதாக அவரது வரிகள் அமையவில்லை. அவ்வுணர்வுகள் சமூகவிடுதலையுடன் ஒட்டியதாய் வேர்கொண்டு கிளைப் பரப்புகின்றது.

விண்வெளி
இராச்சியம் வருக
இங்கு வீழ்ந்தோரெல்லாம்
மீண்டு எழுக
எந்த மனிதர்கட்கும்
சிலுவை
இல்லை என்றுதான் மொழிக.
எங்கும் இராமர்கள் திரிக
ஆயின்
எந்த சீதையும் நெருப்பில்
வெந்துபடாது இருக்க
வேண்டிய விளைகளை சொரிக
...........
சிந்திய குருதியில் குளிதது
வானில் சீக்கிரம்
உதயம் நிகழ்க.

இவ்வரிகளில் கலைத்துவம் சற்றே குறைப்பட்டிருப்பினும் பெண்ணியம் கூறும் பலரும் வாழ்விலிருந்து அந்நியப்பட்ட வழியினைக் காட்டி நிற்க, இவர் வாழ்வை நிராகரிக்காமல் விரக்தியில் மூழ்காமல் அதேசமயம் பெண்னை எந்த சமரசத்திற்கும் உட்படுத்தாமல் தமது சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் சித்திரத்தை இவ்வாறு தீட்ட முனைந்துள்ளார்.

பெண்விடுதலை சமூக விடுதலையுடன் ஒட்டிப்பார்க்கின்ற கவிஞர் அதனை மரபு, பண்பாடு என்பவற்றுடன் கூடிய வடிவத்தினை கொண்டே ஆக்கியிருப்பது கவிதைக்கு மேலும் வலிமை சேர்க்கின்றது. சமூகத்தின் பன்மைகளைச் சாடுகின்றபோது ஆந்தைக் கூட்டங்களுக்கும் இருளின் ஆத்மாக்களுக்கும் எதிராய் இவர் கவித்தீ உமிழ்வது அதியமானதொன்றல்ல.

மக்களின் நளனிலிரு அந்நியமுறாமல் தீட்டப்பட்டிருக்கும் இவரது கவிதைகளில் காணக்கிட்டும் வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கை, நேர்மை என்பன திடுக்கிட்டவைக்கும் அளவிற்கு வளம் சேர்;ப்பதாக அமைகின்றது. சித்தாந்த தெளிவும், சிருஷ்டிகர திறனும் ஒருங்கிணைந்துள்ளமையே இதற்கான அடிப்படை எனலாம். இவையனைத்தும் சமூக மாற்றங்களின் வரலாற்று ரீதியான நியதியை குறித்து நிற்கின்றன. சாருமதியின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இவை இலங்கை தமிழ் கவிதை வளர்ச்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும். முயற்சியாக அமையும்.

சஞ்சிகை ஆசிரியர்

சாருமதி 90 களின் ஆரம்பத்தில் ‘ வயல்’ என்ற இதழை நடத்தி வந்தார். மக்கள் இலக்கிய செல்நெறியை சிதையாதவகையில் முன்னெடுப்பதிலும் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுகின்ற பணியினை இச் சஞ்சிகை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளது.6 இதழ்களே வெளிவந்த போதும் மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது. சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இலக்கிய கர்த்தாக்களின் படங்களைக் கொண்டு அலங்கரிக்கின்ற மரபினை தமிழகத்தில் ‘சாந்தி’ சரவஸ்தி போன்ற இதழ்கள் தோற்றுவித்தன. சாருமதியை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வயல் சஞ்சிகையும் இப்போக்கினை பின்பற்றியிருந்தன.

குறிப்பிட்ட ஓர் காலம் வெம்மை சூழ் கொண்டபோது குறிப்பிட்டவர்க்கத்தின் போர் முகமாய் அர்ப்பரித்து நின்ற தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் படங்களை அட்டைப்படங்களாக வெளிக்கொணர்வதில் முனைப்புக் காட்டிய வயல் சஞ்சிகை தமது இலக்கிய தளத்தினையும் தெளிவாக இனம் காட்டி நின்றது. பூவரசு போன்ற இலக்கிய வட்டங்களுடன் இணைந்து பூவரசு சஞ்சிகையை வெளியிடுவதிலும் சாருமதியின் பங்களிப்பு முக்கியமானது. பூவரசின் தாரக மந்திரம் இவ்வாறு அமைந்திருந்தது. “கோடையினை வென்றே குடையாகிப் பூமிக்கு பாலூட்டும் பூவரசுகள்” 2 வது இதழின் அட்டைப்படம் இத்தாரகமந்திரத்தை நிறைவூட்டுவதாக அமைந்துள்ளது. மட்டகளப்பு பிரதேசம் சார்ந்த கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்ததில் பூவரசிற்கு முக்கிய இடமுண்டு.

ஆசிரியர்

சாருமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றியமையால் அமர்ந்த கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் கூடிய கரிசனைக் காட்டினார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று பழமை பேணுவதே இலக்கிய கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிடையே சாருமதியின் சமூகம் சார்ந்த பார்வை மாணவர்களிடையே புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்களுக்கு கலை இலக்கியம் சம்பந்தமான குறிப்புகள் புத்தகங்கள் என்பவற்றினை கொடுத்து உதவியதுடன் பின்னேரங்களில் மாணவர்கள் நண்பர்களுடன் கூடி கலந்துரையாடலை மேற்கொள்வதும் இவரது முக்கிய செயற்பாடுகளின் ஒன்றாக அமைந்திருந்தது. தாம் ஏற்றுக் கொண்ட கொள்கையினை வெறும் கல்வி நாகரிக போக்காக கொண்டு தலைவீங்கி திரிகின்ற உளநோயாளராக அல்லாமல் அவற்றினை மாறிவருகின்ற உலக சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கவும் அதனை புதிய தலைமுறைக்கு தேக்கி தரவும் முனைகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்ததில் சாருமதிக்கு முக்கிய இடமுண்டு.

வெளியீட்டாளர்:-

ஒரு தொகுப்பு பெருமளவுக்குக் கவிதை எழுதிய சாருமதி தனக்கு ஒரு தொகுப்பை போட்டுக் கொள்ளாமல் சுபத்திரன் கவிதைகளை தொகுத்து வெளியிட்டமை அவரது தன்முனைப்பற்ற நாகரிகத்தினைக் காட்டுவதுடன் இன்றைய மக்கள் இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பாகவும் அமைந்துள்ளது. 1960 களில் வடக்கில் இடம்பெற்ற தீண்டாமையை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது அதன் அடுத்தக்கட்ட பரிணாமமான இனவிடுதலை போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்தியிருக்குமாயின் ஆனால் இப்போராட்டத்திற்கு சேரன் போன்ற தவறான கவிஞர்கள் கிடைத்தமையினால் இன்று மஹாகவி உரித்திரமூர்த்தி போன்றோர் மறுக்கண்டு பிடிப்பு செய்யப்படுகின்றார். இன்று மஹாகவி உருத்திரமூர்த்தியை அளவுக்கு மீறி தூக்கி பிடிப்பதன் நோக்கம் பசுபதி சுபத்திரன் போன் மக்கள் இலக்கிய கவிஞர்களை இருட்டியடிப்பு செய்வதாகவே அமைந்துள்ளது. மக்கள் இலக்கிய கோட்பாட்டை தகர்த்துவவதில் பல நண்பர்களும் எதிரிகளாக மாறியுள்ள இன்றைய சூழலில் சுபாத்திரனின் கவிதைகளை தொகுத்து வெளியீட்டமை காலத்தின் தேவையை நாகரிமானதோர் தளத்தில் நின்று பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தது.

பிற முயற்சிகள்:-

சாருமதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவுகள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்பன தொகுக்கப்பட்டு வெளியிடப்படல் அவசியமான ஒன்றாகும். இவை சாருமதி குறித்து முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு உதவும்.

சாருமதியின் கட்டுரைகள் அவ்வப்போது வயல்பூவரசு சஞ்சிகைகளில் தலைக்காட்டும். பழந்தமிழ் இலக்கிய பரிட்சயமும் நவீன இலக்கிய நோக்கும் சாருமதியில் ஆழமாகவே வேரூண்றியிருந்தது.

1990 களின் ஆரம்பத்தில் மட்டகளப்பிலே இலக்கிய மேதினம் ஒன்றினை நடத்தினார். திருமதி சித்திரலேகா மௌனகுரு பெண்னியம் தொடர்பாகவும் ந. இரவிந்திரன் அவர்கள் சமகால இலக்கிய செல்நெறி தொடர்பாகவும் உரையாற்றினார்கள் இலக்கிய மே தினம் குறித்து சாருமதியின் கூற்று இவ்வாறு வெளியீட்டிருந்தது

“மேதினம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்குரிய நாளாகும். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை இலக்கிய ரீதியாக முன்னெடுக்கும் எம் போன்றோராலும் இத்தினத்தை மறந்து நிற்க முடியாது.

இவ்வாறு சிறப்புமிக்கதோர் இலக்கிய மேதினத்தை இலங்கை இலக்கிய வரலாற்றில் அறிமுகப்படுத்தியமை பெருமை சாருமதியை சாரும்

சாருமதி மக்கள் ஐக்கிய முன்னஸிக் கோட்பாட்டினை வலியுறுத்தியதுடன் அதனையே நடைமுறையிலும் கடைப்பிடித்து வந்தார். இவர் யாழ் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த கால முதல் இறக்கும் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்தார். என்பதற்கொருவர் தேசம் தழுவியவகையில் இலக்கிய நண்பர்களை கொண்டிருந்தமை இதற்குதக்க எடுத்துக்காட்டாகும். குறிப்பாக தேசிய கலை இலக்கிய பேரவை, நந்தாலா இலக்கிய வட்டம், புதிய சிந்தனைக் கலை இலக்கிய பேரவை முதலிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார்.

சமூக செயற்பாட்டுத்தளத்திலான பலவீனங்கள்:-

கவிஞர் என்றவகையில் சமூக மாற்ற போராட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கிய சாருமதி சமூக செயற்பாட்டு தளங்களில் பல தவறுகளுக்கு உள்ளானவராகவும் காணப்படுகின்றார். சஞ்சிகையாளர் பதிப்பாளர் என்கின்றவகையில் அச்சகத்துறையின்; பால் எத்தகைய சக்திகளை சாருமதி அணித்திரட்டியிருந்தார் என்பது குறித்த ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தல் இவ்விடத்தில் அவசியமானதாகின்றது. ஒரு இலக்கிய அமைப்பையோ சமூக - பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த தக்க அணியையோ காத்திரமான வகையில் அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை என்பதே உண்மையாகும்.

சரியான கோட்பாட்டுத் தெளிவும் உறுதியான அமைப்பாக்க நடைமுறைகளில்லாமையும் இதற்கான அடிப்படை காரணமாகும். அவர் இறுதிவரை இயங்கிய அமைப்புகள் என்பவை உதிரிகளின் கூட்டு என்கின்ற அளவில் செயற்பட்டனவேயன்றிச் சமூகமாற்ற சக்திக்கான ஸ்தாபனக் கட்டமைப்புகளாகத் துலங்கவில்லை.

அவர் சுபத்திரனுடன் செயற்பட்ட அவரது ஆரம்பக்காலங்கள் சுபத்திரன் சண்முகதாசன் தலைமையிலான கம்பூனிஸ்ட் கட்சி மீது விரக்திப்பட்டுக் கவிதைகள் படைத்துக் கொண்டிருந்த துரதிஷடமானதொரு காலமாகும். உட்கட்சி போராட்டத்தைச் சரியான முறையில் முன்வைக்கவும் முடியாமல் வெளியேறி சுதந்திரமாக கட்சி கட்டமைப்பை உருவாக்கவும் முடியாமல் விரக்தியின் ஓலங்களாக அந்தக் கவிதைள் அமைந்தன. சுபத்திரன் கவிதைகளை அற்புதமாக தொகுத்தளித்த சாருமதி இக் கவிதைகளை தனிப்பகுதியாக வகைப்படுத்தியிருந்தமையையும் அவதானிக்க முடியும். அதன் மீது தீர்க்கமான சமூகவியல் அணுகுமுறையுடனான விமர்சனத்தை சாருமதியால் முன்வைக்க முடியவில்லை.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதலும் முக்கியமானதொன்றாகும். சாருமதி உருவாகிய தமது செயற்பாடுகளை முன்னெடுத்த மட்டகளப்பு சமூக அமைப்பினை ஏனைய யாழ்ப்பாண மலையக சமூக அமைப்புகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது சமூக முரண்பாடுகள் கூர்மையாடைந்த ஒன்றாக காணப்படவில்லை. அத்துடன் சாருமதியின் காலம் என்பதும் உழைக்கும் மக்கள் சார்பான இயக்கங்கள் தளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும். சுபத்திரன் அவர்களின் தற்கொலை சம்பவம் கூட இந்த பின்னணியில் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும். இக்காலத்துச் சூழலில் வைத்துதான் சாருமதியின் தவறுகளும் நோக்கப்பட வேண்டும். சாருமதியின் பலவீனத்தை விட அவரது சமூக பங்களிப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிபெற்று நிற்கின்றன என்பதே இங்கு பிரதானமான அம்சமாகும்.

வரலாற்றில் சமூகமாற்றத்திற்காக செயற்பட்ட இயக்கங்கள் தனிமனிதர்கள் இத்தகைய பலவீனங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் உட்பட்ட வந்துள்ளனர் என்பதையும் அவை காலத்தால் களையப்பட்டு பலமாக மாற்றப்பட்டு வெற்றிகளாக்கப்பட்டவையும் வரலாற்றை நேர்மையுடன் அணுகுபவர்களால் உணரமுடியும்.

முடிவுரை:-

கவிஞனாக ஆசிரியனாக சஞ்சிகையாளராக பரிணமித்த சாருமதியின் பங்களிப்பு மகத்தானது சாருமதி தன் காலக்கட்டத்தில் எதிர் நோக்க முரண்பாடுகளை கண்டு அதற்கு அடங்கி போகாமலும் அம்முரண்பாடுகளிலிருந்து விலகி நின்ற தத்துவ ஞானியாகவும் இல்லாமல் அவர் அம் முரண்பாடுகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்க முனைந்த சமூக விஞ்ஞானியாகவும் காணப்படுகின்றார். சாருமதியை பொறுத்த கனதியான ஆழமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியமானதாகும். அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும்.

இறுதியாக ஐம்பத்தொரு வயதினை ஒருவரின் இறப்பு வயதாக கொள்வது துயரகரமானது அதிலும் உழைக்கும் மக்களின் பதாகையை உயர்த்திப் பிடித்த இம்மனிதனின் இறப்பு மிக மிக துயரமானது. சாருமதியின் பதாகையை தடம் புரளாது முன்னெடுத்து செல்வதே மாணவர்கள், நண்பர்களின் மிக முக்கியமான பணியாகும். இதுவே மறைந்த கவிஞருக்காய் நாம் ஆற்றும் அஞ்சலி. குறிப்பு: காலத்தின் தேவையை நன்கறிந்து சாருமதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளை தொகுத்து நந்தலாலா இலக்கிய வட்டத்தினர் அறியப்படாத மூங்கில் சோலை என்ற கவிதை தொகுப்பினை ஆழகான முறையில் வெளியிட்டுள்ளனர்.(விலை.200 ரூபா இலங்கை விலை). வணிக நோக்கிற்கு அப்பால் வாசகர்களின் நலனையொட்டி மலிவு விலையில் தரமான பதிப்பாக வெளிவந்துள்ளமை இந்நூலின் இன்னொரு சிறப்பம்சமாகும். இதனையொட்டி சாருமதியின் கவிதை மற்றும் அவரது பங்களிப்பு குறித்த விமர்சன கூட்டங்கள் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் நடைப்பெற்றுள்ளன. விரைவல் ஹட்டனில் விமர்சன நிகழ்வொன்றினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

Sunday 24 October 2010

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்

கதவோரம் தாழ்வாரம் அடுப்படிச் சாம்பல் மேடு.. என

சுருண்டு கிடந்த நாய்கள்

ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன



ஒன்றைச் சினைப்படுத்த..



தமக்குள் தாமே தம்மை முறைத்தும்

தமக்குள்ளே தம்மையே கடித்தும்

ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்

முதன்மைப்படவும் முதலில் ஏறவும்



போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்

தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்

அதற்காய்



முழுவதையும் இழந்தாயினும் புணர்வது

எனவும் போல

தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்

குறிகள் விறைத்து குமையும்

ஒன்றையே புணர.



சினைக்குள் சாத்தியம்

நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ

குரைக்கக் கூடியதாகவோ

உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ

வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ

சில நாய்கள்.



நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.



இனியவை விரும்புவதும் ஏற்பதுவும்

எவரும்

பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்

எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.



ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்

எலும்பு மீதமாக இருக்கலாம்.



இந்த நாய்கள் காத்திருக்கும்.



சொச்சமாகவேனும் எதை வீசினாலும்

கவ்விக் கொள்ளும்.

விருந்தெனச் சண்டையிட்டு

அதையும் சகதியில் வீசும்.



பின்வீராப்போடு வெறுங்குடலைக் கழியும்.



கடைசியில் எச்சிலூறி

எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.



நாய்கள்.



வேட்டைப் பற்களிருந்தாலும்

விரல் நகம் நீண்டிருந்தாலும்

அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்

எலும்புகள் தானென்றில்லை

எது கிடைத்தாலும்



நாக்கொழுகித் தின்னும்.



தமக்குள் தாமே முந்தும்..கடிக்கும்..

இவை

நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்.



இனி நாய்கள் மட்டுமே.


Sampur Vathanaruban

Millennium old Tamil inscription found in Trincomalee

Millennium old Tamil inscription found in Trincomalee


A stone slab having a Tamil inscription, clearly in the alphabet of the Chola times, was found in Trincomalee while digging for cricket stadium construction work recently. The land where it was found is a part of the esplanade, on the right side of the Koa’neasvaram Road leading to the Siva temple inside Fort Frederick and is adjacent to the bay where the temple’s Theerththam (water cutting) ritual is held. Sometimes back, a Buddhist Vihara and another structure called Sanghamitta Buddhist Rest were constructed at this place. The inscribed slab was taken into possession by the Trincomalee police and was sent to the Department of Archaeology in Colombo.

Trinco Chola inscription
The inscribed stone slab having a perforation in the middle


The construction work for a modern cricket stadium in the esplanade was financed by the Provincial Governor’s Fund.

Trinco Chola inscription
The Tamil script of Chola times seem clearly in the inscription
The construction work in the land has been suspended by the Department of Archaeology.

The inscribed stone slab has a large perforation at the centre reminding of anchors and sluice-gates.

Academics are concerned about the safe custody of the inscription with the Department of Archaeology.

As there are no Tamil officials or no Tamil epigraphists in the Department of Archaeology, academic circles expect estampages of the inscription to be sent to relevant scholars as early as possible by the Department of Archaeology of Sri Lanka, for speedy dissemination of knowledge about the inscription.

Trinco Chola inscription
Details of the left-side of the stone slab

Friday 15 October 2010

மறுபடியும்

ஆண்டு ஒன்று
ஆகவில்லை.

இன்று
நியாயம் பற்றி
பேசுவதற்கு
ஏது இடம்?

நியாயங்கள் புதைக்கப்பட்ட
குழியில்
நிமிர்ந்து வளர்ந்திருக்கு
அநியாய மரங்கள்.

விருட்சமாகி
வேரூன்றி
விழுதுகளுமல்லவா விட்டுள்ளன.

சொந்தங்கள் என்று
சொல்வதற்கும்
உறவுகள் என
உணர்த்துவதற்கும்
காலம் நேரம் பார்த்து
இராகு காலம் விடுத்து
மரண யோகம் தவிர்த்து
சுபநேரம் தேடி
சொல்லவேண்டியுள்ளதே?

தவறுதலாகவேனும்
பஞ்சாங்கம் பார்க்காது தொடங்கினால்
எடுத்த காரியம் எதுவென்றாலும்
நொடிப்பொழுதில்
முடிந்துவிடும்.

வீட்டு வாசலில் நின்று
உள்ளே செல்லாதே!
என மறுக்கப்படும்.
நம் ஊர்க் காற்றைக் கூடஅருகில் நிற்பவருக்குத்
தெரியாமல்  சுவாசித்துக்கொள்.

அறிந்தால்

உள்ளே இழுத்த காற்று
வெளியே வருவது சந்தேகம்.

காரணம்,
 சுபநேரத்தில்
நீ சுவாசிக்கவில்லை.

நீ வளர்த்த
பசுக்களைப்பார்.
ஆனால்
அத்தோடு திரும்பிவிடு.
மீண்டுமொரு தடைவ
பார்க்காதே.
பார்த்ததால்
உனக்குச் சகுனம்
பிழைத்துவிடும்.

ஓடித்திரிந்த
உன்
விளையாட்டு முற்றம்
புல் பூண்டுகளால்
மூடியுள்ளது
பி;ச்சைக்காரனின்
முகத்தை மூடிய
தாடியைப்போல.

சவரம்செய்ய
நினைக்காதே.
சகுனம் பிழைத்தால்
சவரக் கத்தி உன் உதட்டை
வெட்டிவிடும்.

இப்போதெல்லாம்
இருட்டுக்கள் என்பதே
மறந்தவிட்டது.

வானத்தில் நட்சத்திரங்கள்
பார்த்து
        நித்திரைக்குமுன்
நிலாவைக் காட்டி
உணவூட்டும்
அன்னையின்
எண்ணங்களெல்லாம்
மறுக்கப்பட்டுவிட்டன.

சேவல்
அதிகாலையில் கூவுகின்றது.
ஆனால்
கோழியின் கூவலாகத் தெரிகிறது.

உயர் கல்விக்காய்
வாழ்வில்
கால் நூற்றாண்டு
கரைந்தபோது
வெட்டுப்புள்ளி
வீழ்த்திவிடுகிறது.

எழுந்துநின்று
இனியென்ன செய்வது?
வேலைக்காவது
போவோம் என்றால்
நீண்ட வரிசை நெடுநாளாய்க்
காய்ந்த நிலையில் நிற்கிறது.

தலையில் கறுப்புத் தொப்பி
கையில் பட்டச் சுருள்.

சரி

மண்வெட்டியைத் தூக்கி
வயலுக்குச் செல்வோம் என்றால்…
கௌரவம் கலைக்கிறது.

ஓடியபோது
உனக்கேது காணி

அது…… அது….

அந்தப் பக்கமல்லவா?
திரும்பிப்போ.
என்கிறது மனசாட்சி.

இனிமேல்
கிளிக்கூடுகளும்
மைனாக் கூடுகளும்
செய்பவர்கள் வேண்டாம்.

அவற்றை
அடைத்துவைத்ததால்
அவை போட்ட
சாபங்கள்
பலிக்கத்  தொடங்கிவிட்டனவோ?

மாடுகளை
வண்டிலுக்காகவேனும்
அடிமைப்படுத்தாதே.

அவைகளும் சொல்லியிருக்கும்
தங்கள் வேதனைகளை.

கடற்காற்று  வேண்டாம்.
ஆற்றுக்காற்றே போதும்.
அதில் சுவாசிப்போம்.

சுறா மீன்களும் பாரை மீன்களும்
வேண்டாம்
யப்பானும், செல்வனும் இருக்கட்டும்.

தென்னங் கன்றுகள் நடவேண்டாம்.
பாதியில் பன்றிகள்
பதம் பார்த்துவிடும்.

கடி வெடி  வைத்தால்
முள்ளம்பன்றிகள்
பொறுக்கி மூலையில்
குவித்துவிடும்.
கழனியை ஊற்றாதே
கறி சமைக்க உதவும்.

வாழ்வில்,
கல்வியில்,
தொழிலில்,
உணவில்,
பேசுவதில்,
நடப்பதில்,
சிரிப்பதில்,
கதைப்பதில்,
நியாயங்களைக்
கேட்க நினைக்காதே.

இலவசமாக
எயாடெல் சிம் மட்டும்
ஏராளம் வாங்கலாம்.
இங்கு மட்டும்
அவை
மறுக்கப்படாது,      உனக்கு
தேசிய அடையாள அட்டை
இருந்தால்மட்டும்.

அட்டை இல்லையெனில்
அங்கு உன் நியாயங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாதவைகளல்லவா?

சளைத்துவிடாதே.

விழுவதெல்லாம்
மீண்டும் எழுவதற்கே
அன்றேல்
மரத்திலிருந்து விழுந்த
ஆலம்வித்து
மீண்டும் விருட்சமாகுமா?

எழுந்திரு

நியாயங்கள் என்றும் அழியாதவை.
கிடைக்கும்வரை சோராதே.


தூக்கணாங்குருவிக் கூட்டை
ஒருமுறை
சிந்தித்துப்பார்.
அதனால் முடியுமென்றால்
ஏன்
உன்னால்………

குரங்குகள் சிதைத்துவிடுமென்று
அவை
கூடுகட்டவில்லையா?
சிக்கலை விடுவித்துப்பார்.

திருப்தி தோன்றும்.

உன்னால் முடியாதது
ஏதுமிருக்காது.
இது நெப்போலியன் கூற்று.

“தர்மத்தின் வாழ்வுதனை
சூது கௌவும்     மறுபடியும்
தர்மமே வெல்லும்”



சேனையூர்.இரா.இரத்னசிங்கம்
2010-10-11

கவியல்ல நிஜம்

கவியல்ல  நிஜம்

பிரிவு……
உன்னையும்,  என்னையும்  விட்டு
உலகையும்,  உடலையும்  விட்டு
மற்றெல்லாம்   பிரிவல்லவே.

ஆடைபிரிந்து அம்மணமானதும்,
அந்தரங்கம் பிரிந்து அவமானம் சுமந்ததும்
பிரிவென்றாகுமோ?

முன்னம் பள்ளி பிரிந்தே
முதநிலைப் பள்ளியாகி
அது பிரிந்தே உயர் பள்ளி ஏகி
அழகிய பிரிவு வந்தே
பல்கலைக் கழகமாக…
பட்டங்களும், பதவிகளும்
பாராட்டுதல்களும் பலவும்
ஒன்றன் பிரிதலும் ஒன்றன் வருதலுமே
உலக இயல்பென்றாகும்.

நீ உலகைக் காணலாம்
உடலைப் புழுவாய் நெளித்தே ஊரலாம்
மெதுவாய் நிமிர்த்தி நழுவலாம்
இருந்தும் நின்றும்
விழுந்தும் எழுந்தும்
நடந்தே அடி பிரிக்கலாம்.
பின்னே கால்
பிடரி பட ஓடலாம்
நீ………
கருவுலகை விட்டு
பிரிந்த பின்னாலே.

மங்கையாய்ப்  பூத்தால்
ஓர் மாலையாகிடும்   பூ
மணமாகிடவும்  இரு
மாலையாகிடும்   பூ
மடியினில்  கிடத்தியே
மாரடித்து  மண்ணில்
மறைத்திடும்  உடலை
மூடிடும் மாலை   பூ

மரத்திலும்  செடியிலும்
கொடியிலும்  காம்பறுந்து
கைப்பிரிந்தே
நூலேறி பிணைந்ததாலல்லவா?

புதிதாயோர்  பூமி  காண்பாய்
புத்தகமாய்ச்  சரிதமும் காண்பாய்
கனமாய்க்  கோடி  கொள்வாய்
உன் பாதச்  சுவடுகள்
யாரைத்  தொடர்ந்தோ
பச்சை  மண்ணைப்  பெயர்த்தடி
பிரிந்ததாலே.
இழுத்து  விடும்  மூச்சும்
நில்லாமல்  ஓடும்  காற்றும்
இல்லாது  நீ  இருந்ததுண்டா?
சொல்லாற்  பறிதலும்
சொல்லும்  பொருளும்
பாட்டுமென்றாகியே
பின்னெல்லாம்
கடலும்  காடும்   வானும் வரைந்திடவும்
வளியதன்   பிரிதலாலேயாம்.

உன்னைப்  பார் - உன்
உருவம்  பார்
ஒரு  நொடி  உன்
கண்ணைக்  கடந்துமே
கருவி பிரிந்து
ஒளி பிடித்த புகைப்படமே அது.

பாடு  பேசு  பலமாய்த்  திட்டு
ஓ… என்றே அழு
ஆ… என்றே விளி
ஈ… என்றே சிரி
ம்… என்றே நீ ஊமையாய்க் கிடக்க
இவை  பெறுமா?
உன்
உதடுகளின்
உண்மைப்  பிரிவில்
உதிப்பவைதான்  இவை.

ஆயிரம்  பக்கமாகலாம்
அற்புதக்  கதையுமாகலாம்
ஆக்கியோன் படைத்து
அழுக்குப் படாது
அட்டைக்குப் பூட்டிட்டு
அடுக்கி வைத்திருக்கும்வரை அது
அசையாத உன்
அனுங்காத உள்ளம்போன்றதுதான்.
பக்கம் பிரித்துப் படிக்கையில்
சொற்கள் பிர்த்தே அறிகையில்
வரிகள் பிரித்தே தெளிகையில்
ஆயிரம் பக்கங்களும்
அற்புதக் கதையாகலாம் நாளை
உன் உள்ளங் கவர்ந்த
அதிசயக் காவியமாகலாம்.

முகிலைப் பிரிந்து மழையாவதும்
மூச்சைப் பிரிந்து உயிராவதும்
நீரைப் பிரிந்து அலையாவதும்
நிலத்தைப் பிரிந்து சிலையாவதும்
உன்னை நீ பிரிந்தே ஓர்
உயர்வாவதும்
உலக நியதி.

செயலற்றநிலை பிரிவல்ல. பிரிந்தே  இருப்பதும் செயலல்ல.
சேர்ந்தே இருப்பதும் செயலல்ல.
செயலற்ற நிலை சேர்க்கையுமல்ல.

பிரிந்தே கிடப்பது
செத்த நிலை.
சேர்ந்தே இருப்படுது அதே நிலை.

ஆக…
சேர்வதும், பிரிவதுமே
வாழ்க்கையில்
தத்துவமும்
நிஜமும்.

பிரிவோம்,
பின்னர் சேர்வதற்காய்.

பிரிகின்றீர் பிரிகின்றீர்.
பின்வந்து சேருங்கள்

பூக்களாய் பிரியுங்கள்
மாலையாய் சேருங்கள்
பக்கமாய்ப் பிரியுங்கள்
பாடமாய் ஆகுங்கள்.
கருவாய் பிரியுங்கள்
உயிராய்  உலவுங்கள்.
காற்றாய்ப் பிரியுங்கள்
மூச்சாய்  சேருங்கள்.
கல்லாய்ப் பிரியுங்கள்
சிலையாய் மிளிருங்கள்.
கலையாய்ப் பிரியுங்கள்
நிலையாய் ஆகுங்கள்
நிஜமாய்  வருவீர்கள்  என்றே
நானும் பிரிகின்றேன்…
மீண்டும் வருவதற்காய்.



கட்டைபறிச்சான் மதுரன்
2010.10.11

இலவங் கிளியும் நாங்களும்

இலவங் கிளியும் நாங்களும்

by Pathiniyan Sujanthan on 07 அக்டோபர் 2010, 17:24 க்கு
முற்றத்தில் பெருத்து வளர்ந்த
இலவை மரத்தில்
காலங்காலமாய்க் கிளிகள்
இலவம் பழம் தின்ன……!

அன்று
தாய்க்கிளி காத்திருந்து
ஏமாந்த போக
நேற்று மகள் கிளியும் ஏமாந்து போனது
அசட்டுத்தனமான நம்பிக்கையில்
 இன்று
மகள் கிளி பொரித்த குஞ்சுக்கிளி கிளையில்
நாளைக்காய்
கூட்டில்குஞ்சிக் கிளி பொரித்த முட்டை
இப்படியே தெடர்கிறது
கிளிச் சந்ததியின் இலவை காத்தல்………

நேற்றுத்தான் அறிந்தேன்
முப்பாட்டனும் பாட்டனும்
ஏன் அப்பாவும்
குந்தியிருந்த இலவை மரத்தின் கீழ்
நானும் இருப்பதாய்

நாளை
என் பிள்ளையும் குந்தியிருக்க முன்
இப்போதே சொல்லி வைக்க வேண்டும்
என் பாட்டன் முப்பாட்டன் கதையை அவனிடம்……

காணமல் போன கடவுள்கள்

காணமல் போன கடவுள்கள்

by Pathiniyan Sujanthan on 15 அக்டோபர் 2010, 17:20 க்கு


அமைதி உறைந்து கிடந்த
அன்றைய பின்னிரவில்
கடவுளைத்க் காலம் முழுக்கத் தேடி
தோற்றுப் போன களைப்பில்
வேருத்து விருவிருக்க
பிரமாவும் திருமாலும் என் கனவில் தோன்றினர்………


கடவுள் இல்லாத உலகில்
தேடுதல் பொய்த்துப் போனதால்…?
இருவரும் நிறையக்கதைத்து
இறுதியாய் ஒரு முடிவெடுத்தனர்.
இலங்கையில் காணாமல் போனோரை
பன்றியாயும் பறவையாயும் மாறித்தேடுவதென்று…!


மகிழ்ச்சியில்
அழகுத் தூக்கம் கலைத்து
விழித்துப் பார்த்தேன்
இருவரையும் காணவில்லை…..! 

Wednesday 15 September 2010

உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்

உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்
அன்பாதவன்

வாழ்க்கை சில நேரங்களில் மிகக் கொடுமையானது. வாழ்வின் நியதிகளோ மிகக் கடுமையானது. தம் சொந்த மண்ணை உறவுகளை பழகியப் பிரதேசங்களை விட்டு விலகி புலம்பெயர்ந்து வாடும் வாழ்க்கை துயரங்களிலும் சோகமானது.

ஈழ மக்களோ சாபத்தையே வரமாய் வாங்கி வந்தவர்கள். உறவுகளை, ஊரை, எல்லாவற்றையும் உதறி, உயிர்வாழ்தல் எனும் நோக்கத்தோடு இதயத்தை ஈழத்திலும் உடலை மட்டுமே உலக நாடுகளில் ஏதாவதொன்றிலுமாய் வாழும் வாழ்வு வாழ்வாகாது.

இத்தகைய சூழலிலும் உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்களை உருவாக்குவதில், ஈழத் தமிழ் படைப்பாளிகளே முன் நிற்பதை மறுக்க வியலாது எவராலும்.

ஆழியாள் அப்படி ஒரு படைப்பாளி! வேற்று வெளியில் வாழ்ந்தாலும் (!) தனது பூர்வீகம் குறித்த பதிவுகளையும், சமகால வாழ்வியல் சூழலையும் கவிதைகளாய்ப் படைப்பதில் சமர்த்தர் என்பதை நிரூபிப்பதாய் துவிதம் கவிதைத் தொகுதி துவிதம் என்ற சொல்லுக்கு இரண்டு, இருமை எனப் பொருள் தருகிறது அகராதி. தனது இரண்டாவது தொகுப்பென்பதால் துவிதம் எனப் பெயரிட்டிருப்பாரோ ஆழியாள்!

“துவிதம் தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியா, வாழ்புலத்தில் உருவானவை. இருப்புக்கும் வாழ்வுக்கும் இடையில் எதிர்வினை புரியும் எழுத்து தன்னளவில் தனக்கேயுரிய தர்க்க முறை அறிதல் முறைகள் மொழியைக் கண்டமையும் அனுபவங்களை அணுகும் கோணமும் தனித்துவமாக வெளிப்படும். இந்த நீதியில் ஆழியாள் கவிதைகள் புதியத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன” என முன்னுரைக்கும் மது சூதனனின் வார்த்தைக் கவனங்களோடு துவிதம் தொகுதிக்குள் நுழைபவருக்கு காத்திருக்கின்றன புதிய கவியனுபவங்கள்!

‘கலங்கரை விளக்கத்து / இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள் / மௌனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும் / தனித்தே
மிகத் தனித்தே இருக்கின்றேன்’

என தன்னிலை விளக்கம் அளிக்கும் கவிஞரின் மனநிலையை வாசகன் எளிதாய்ப் புரிந்து கொள்ளவியலும்! எத்தனை பெரிய தேசத்திலும் நம்மைப் பகிர ஆளில்லாவிடில் தனிமை! கொடுமையான தனிமை!

‘அந்த யாரோ யாராயிருக்கும்
ஆணா பெண்ணா அடுத்தபாலா
யாரோவை யார்
வேலை ஏவியது
யாரோவுக்கு சம்பளம் கொடுப்பது யார்?
அது எவ்வளவு? போதுமா?’

அந்த யாரோ தான் இத்தகைய பிரசனைகளுக்கும் காரணம்! இணைந்து வாழ விரும்பும் ஈழ சிங்கள இன மக்களை மொழியின் பெயரால் பிரிப்பது யாரோ! ஷெல் வீச்சுகளினால் புகலிடம் தேடி ஓட வைத்தது யாரோ!

சமாதானத்தின் காலத்தில் பூமியைத் தோண்ட எலும்புகளே கிடைக்கும் தேசத்தில் கவிதை அழகியலும் மரணம் சார்ந்ததாகவே இருக்கும்!

‘கடை இரு
வெறும் நூற்றாண்டுகளின் மேல்
அரிதார நிலம் பூசி
நட்சத்திரங்கள் ஓர் ஆறை
அள்ளி அதில் தெளித்து
உச்சிக் கம்பத்தில் பறக்க விட்ட
வெள்ளை விளை நீலம் இது’ என தான் வாழும் கங்காரு தேசத்தை காட்சிப்படுத்தினாலும் ஆழியாளுக்கு தான் யார் .... தன் நிலை என்ன என்பது புரிந்தே இருப்பதை பதிவு செய்யும் வரிகளிவை!

‘பிறந்த வீட்டில் கறுப்பி
அண்டை நாட்டில்
சிலோன் அகதிப் பொண்ணு
இலங்கை மத்தியில்
தெமள
வடக்கில் கிழக்கச்சி
மீன் பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி

மலையில்
மூதூர்க் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்! ’

புலம்பெயர்ந்து புகுந்த தேசத்தின் அரசியல் விளையாட்டுகளையும் விமர்சனம் செய்யும் போது ஆழியாள் உள்ளிருக்கும் கவிஞர் மிக யதார்த்தமாக வெளிப்படுவது சிறப்பு.

உளைச்சலில் தவிக்கும் மனநிலையிலும் ‘அந்தி’யை ‘முன்னிரவுக் குயில் கிட்ட முட்டை பொறிகிறது.’ என அழகியலோடு வெளிப்படுதல் கவியுணர்வு கொண்டவர்களுக்கே சாத்தியம்.

தானறிந்த, தானுணர்ந்தவற்றை கவிதைகளாக செதுக்கியிருக்கும் ஆழியாளின் சிறப்பு சொற்சிக்கனம்! மிகச் செறிவாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு கவிதை நெய்திருக்கும் ஆழியாள் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதையும் பதிவு செய்யத் தான் வேண்டும்.

புலம் பெயர் ‘வாழ்வு என்பது சுயம் குறுக்கி வாழ்வது! வாழ்வது’ என்று சொல்வது கூட நேர்மையாகாது! இருப்பது(ஒதண்t ஆஞுடிணஞ்) அத்தகைய இருப்பில் உணர்வலைகளின் வேகத்தோடு யதார்த்தம் மோதும் போது ‘காமம்’ போன்ற கவிதைகள் பிறக்கத்தான் செய்யும்.

‘உயரும்
மயைடிவார மண் கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின் ஆழப்புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்கலும் உண்டு இங்கு
அவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவனுக்கு .’

உள் நாட்டு யுத்தம், ஈழப் படைப்பாளிகளின் படைப்பாக்கத் திறனை திசைமாற்றி விட்டதை பல்வேறு புலம் பெயர் நூல்கள் பறைசாற்றுகின்றன.

‘சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று,’

துப்பாக்கி முனையில் அதிகாரம் பிறக்கும்! கவிதை பிறக்குமா? அன்றி துவக்குகள் தான் கவிதை ரசிக்குமா? விமான நிலைய சந்திப்பில், உறவுகளைக் கண்டு கவிதை எழுதி ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! வேறென்ன இயலுமிப்போது ...?

துவிதம் (கவிதைகள்),
ஆழியாள்.

ஆழியாள்:

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.

தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்;
அவள் கோணேஸ்வரிக்கும்;
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்

ஆழியாள்:

ஆழியாள்
பெயர்: மதுபாஷினி
புனைபெயர்: ஆழியாள்
பிறப்பிடம்: திருகோணமலை
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி: மதுபாஷினி
20 Dulverton Street,  Amaroo, Canberra ACT2914, Australia
Tel: 61262418183
E.mail: aazhiyaal@hotmail.com
படைப்பாற்றல்: கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

    * உரத்துப் பேசு - 2000
    * துவிதம் - 2006

சிறுகதைத் தொகுப்பு:

    * கொட்டியாரக் கதைகள்

இவர்பற்றி:

    * இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தவர். அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டப் படிப்பைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவருகின்றன.

Tuesday 14 September 2010

திருக்கரைசைப்புராணம்

கரைசைப்புலவர்


இவர் திருக்கரைசைப்புராணம் என்னும் நூலின் ஆசிரியர். திருக்கோணமலைக்கு அருகிலுள்ள மகாவலி கங்கைக் கரையிலே 'கரைசை *என வழங்கும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவது இந்நூல். கரைசையம்பதியானது 'அகத்தியத் தாபனம்' எனவும் அழைக்கப்படும்.

நூலாசிரியரின் இயற்பெயர் தெரியவில்லை. நூற்பாயிரத்துள்ளே குருவணக்கம், புராண வரலாறு என்னும் பகுதிகளுள் வரும் 'ஈசானச்சிவன் மலர்த்தாள் மறவாது', 'கொற்றங்குடிவாழும் பிரான் சரணத் துறுதிகொண்டே' முதலிய குறிப்புக்களினின்றும் இந்நூலாசிரியர் உமாபதி சிவாசாரியரின் சீடர்களுள் ஒருவர் என்பாருளர் எனக் கூறுவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். "சிலர், எமாபதி சிவாசாரியர் பரமபரையிலுள்ளார் ஒருவர் என்பர்" எனக் கூறுவர் திருக்கோணமலை அகிலேசபிள்ளை. அவர் கூற்றின்படி தக்கிண கைலாச புராணத்தின்பின் எழுந்தது இந்நூல்.

உமாபதிசிவாசாரியர் 1304இல் கொடிக்கவி என்னும் நூலை இயற்றினர். எனவே 1380-1414இல் அரசாண்ட சிங்கைச் செகராசசேகர மகாராசாவின் வேண்டுகோளுக்கிணங்கிப் பண்டிதராசர் போன்ற ஒரு புலவராலே திருக்கரைசைப் புராணம் இயற்றப்பட்டது எனக் கோடல் பொருந்தும்.

ஈழத்தில் பெருமையையும் மகாவலிககங்கைச் சிறப்பையும் இந்நூலிற் பரக்கக் காணலாம்.


திருக்கரைசைப் புராணம்

கடவுள் வாழ்த்து

விநாயகர் துதி

பொன்னிரவி தனைவளைத்துப புகுந்துலவு
மொருநேமிப் பொற்றேர் மீது
மன்னிரவி யெனவிளங்கு சுதரிசன
மூவிலைவேல் வயங்கு சங்க
மின்னிரவி னிருள்கடியும் பிறைக்கோடும்
கரத்தேந்தி மேவா ருள்ளக்
கன்னிரவி மதம்பொழியுங் கரைசையில்வாழ்
கரிமுகனைக் கருத்துள் வைப்பாம். 1
_______________________
*கரைசை, கரசை, ஆகிய இரு வழக்குக்களும் நூல்களிற் காணப்படுகின்றன.


குருவணக்கம்

அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே. 2

புராண வரலாறு

வண்ணமலி வடகைலைக் கொடுமுடியாந்
தென்கைலை மணியார் தம்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாரா நின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாகியமா
வலிகங்கை யாடும் போதில். 3

ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்த்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மீங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால். 4

அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தன்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறதி கொண்டே. 5

இலங்கைச் சருக்கம்

தனிப்பணி யரசே யுன்றன்
றலையில்வா ழுலக மெல்லாம்
இனிச்சிறு கணத்தி னுள்ளே
யில்லையென் றாகு மந்தோ
மனத்தினி லருள்சு ரந்து
மல்கிய பணத்தி லொன்றைக்
குனித்தினி யொதுக்க வேண்டுங்
குவலயம் பிழைக்க வென்றார். 6

அம்மொழி கேட்ட பின்ன
ரடலராக் குலத்து வேந்துந்
தம்மது பணத்தி லொன்றைச்
சம்றொதுக் கிடவே கண்டு
பொம்மெனப் பலத்தான் மோதிப்
பொற்கிரிச் சிகரத் தொன்றைத்
தெம்மலி பவனன் றள்ளித்
தென்றிசைக் கடலில் வீழ்ந்தான். 7

ஒண்டரு மீரட்டி முப்பான் யோசனை விசால மாகி
அண்டியோ சனைதா னீள மைம்பதிற் றிரட்டி யாகி
மண்டிய புரிசை யேழாய் வாயில்க ளெட்ட தாகி
திண்டரு மொன்பான் கோடி சிவாலயந் திகழ்வ தாகி 8

ஆடகத் தமைத்த பித்தி யகப்புறம் புறப்பு றங்கண்
மேடகத் தெற்றி மாட மிளிர்மணி விமான கூடம்
பாடகப் புறந்தாட் கிள்ளைப் பனிமொழிப் பவள வாயார்
நாடகத் தரங்கந் துன்று நனிநெடு வீதி நண்ணி 9

காண்டகு மிடங்க டோறுங் கலிகைவா யவிழ்ந்த விழ்ந்து
பூண்டதேன் றிவலை சிந்திப் பொன்னிறப் பராகந் தெள்ளும்
நீண்டவான் கற்ப கத்தி னீழலஞ் சூழன் மேவி
ஈண்டரு மிலங்காத் தீப மீழமா யிசைந்த தன்றே. 10

அப்பதி யதனிற் பச்சை யணிமணி யடக தாகத்
துப்புறு முத்தம் வல்சி சொன்னவான் கலத்திற் சேர்த்தி
குப்புற வண்ட லாடுங் கோதையர் குழாங்க ளென்றா
லெப்பதியதற்கொப் பாமென் றியம்பிடுந் தகைமைத் தம்மா. 11

சுத்தவான் கதிரி னோடு தூமணிக் கதிருத் தோய்வுற்
றெத்திசை களினு மேற விரும்பகற் போது மல்கும்
நத்தமு மிந்திர நீல நகையிருட் பிழம்புங் கூடி
வைத்தபே ருலகிற் கேற மல்கிடு மிரவின் போ. 12

காடெலாங் கரிநல் யானை கரையெலாம் பவளக் குப்பை
நாடெலா மிரத்ன ராசி நகரெலாம் நல்லோர் சங்கம்
வீடெலாஞ் செம்பொற் கூரை வெளியெலாஞ் செந்நெற் குன்றங்
கோடெலாம் மஞ்ஞை யீட்டம் குழியெலாங் கழுநீர்ப் போது. 13

காவெலாம் மதன பாணங் கரையெலாஞ் சங்கச்சங்கம்
பூவெலாம் வண்டின் சாலம் புறவெலாம் நிரையி னீட்டம்
மாவெலா மன்னக் கூட்டம் மலையெலாங் காள மேகம்
நாவெலா மமிர்த கீத நதியெலா முதுநீர்த் தீர்த்தம். 14

தண்ணமர் சாலி முத்தும் தடங்கட லிப்பி முத்தும்
வண்ணவொண் பணில முத்தும் வரையறா வோல முத்தும்
கண்ணமர் கரும்பின் முத்துங் ககனமஞ் சீன்ற முத்தும்
வெண்ணில வில்லாப் போது மிகுநிலாக் கொழிக்கு மன்றே. 15

பணிலம்வெண் டிரையி னார்ப்பப் பவளமுந் தவள முத்தும்
மணிகளுஞ் சாந்தும் பூவும் மாலையும் பிறவும் வேய்ந்தும்
திணிமதிக் குடைக வித்துத் திரைக்குழாங் கவரி காட்ட
அணிமணி வீதி தோறு மாழியு முலாவு மாமால். 16

கொஞ்சிய கிள்ளை மென்சொற் கோதையர் சிலம்பி னார்பும்
வஞ்சியின் காஞ்சி யார்ப்பும் வாயறாத் தமிழி னார்ப்பும்
விஞ்சிய மள்ள ரார்ப்பும் விழாவெழு முழாவி னார்ப்பும்
அஞ்சிறை வண்டி னார்ப்பு மன்றியோ ரார்ப்பு மின்றால். 17

தெளிவுறு கிரணக் கற்றைச் செம்மணிப் பத்தி சேர்ந்து
குளிர்புனல் நதிக ளெல்லாங் குருதியி னாறு போலு
மொளிர்தரு மிப்பி யீன்ற வொண்ணிறத் தவள முத்தின்
வெளிநிலா வீங்கி யுப்பு வேலைபா லாழி யொக்கும். 18

ஊட்டு செஞ்சுடர் மணியினைத் தடியென வுகந்து
காட்டுத் தம்மிரு பதங்காளற் கவர்கின்ற கங்கந்
தோட்டுத் துண்டங்கொண் டுண்பதற் காமெனத் துணிந்து
கூட்டில் வைத்தன பறந்தன வாதரங் கூர்ந்து. 19

மடைகி டந்தவொள் வளவயற் றொளியறா வரம்பின்
கிடைகி டந்தசங் குதவிய முத்தெலாங் கண்டு
புடைகி டந்ததம் மண்டங்க டம்மொடு புகட்டி
யடைகி டந்தன சிறையகத் தடக்கியே யன்னம். 20

மாறில் பாளைகண் மலரிளங் கமுகினல் வாளை
யேறு பாய்தர வயலெலா முகுவன விளங்கா
யாறு பாய்வதென் றதிசய மெனக்கரும் பாலைச்
சாறு பாய்தர வளாவன கழனியிற் சாலி. 21

இன்ன லின்றியே யிணர்த்ததா ளிப்பனை யெவைவும்
பொன்னின் வீதியுட் பொலிநிலைத் தேர்க்குழாம் போலுங்
கன்னி மார்குழல் கூந்தலங் கமுகுகள் காட்ட
வன்ன பாளைக ளளிப்பன கமுகுக ளனந்தம். 22

கண்ணி லாவிய நறுந்தொடைக் காளையர் தங்கள்
வண்ண மாதர்கள் வதனமேற் புணர்கின்ற வைரம்
மண்ணி லாவிய வெண்ணிறக் கலைமதி யெழுச்சி
யுண்ணி லாவிய புனலிடைக் கண்டபி னொழிப்பார். 23

மஞ்சின் முத்தமு மரந்தையின் மரகத மணியும்
விஞ்சு செம்பொனும் வலவயிற் செம்மணி வேய்ந்தும்
மஞ்சொற் கம்பலை யாற்றினன் னீலமு மவிர்ந்தும்
பஞ்ச வன்னமே யிரவினும் பகலினும் பயிற்றும்.

சித்திரவேலாயுதர் காதல்

வீரக்கோன் முதலியார்

1686


இவரது ஊர் திருக்கோணமலையைச் சேர்ந்த தம்பலகமம். இவரியற்றிய நூல் 'வெருகல் சித்திரவேலாயுதர் காதல்',இந்நூல் 421 கண்ணிகளைக் கொண்டது; திருககோணமலைக்குத் தெனபாலுள்ள வெருகற் பதியிலெழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமியின் புகழைக் கூறுவது. கண்டியிலிருந்து அரசாண்ட இராசசிங்கன் என்பவன் நூலினுட புகழப்படுகின்றமையின் நூலாசிரியர் வாழ்ந்த காலமும் அவன் காலமேயாம் (1686).


சித்திரவேலாயுதர் காதல்

சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்
ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1

வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்
கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2

தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து

வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்
தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4

செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்
வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5

மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை
ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6

...............................

வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்
சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368

என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்
அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369

இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.

வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371

மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்
சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372

மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்
மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373

மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374

கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்
தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375

சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்
சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376

திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377

பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்
என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378

துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379

சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்
போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380

வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381

எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382

வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி
மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383

கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்
காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை

கண்ணகி வழக்குரை காவியம்'

சகவீரன்

இவராற் பாடப்பட்ட நூல் 'கண்ணகி வழக்குரை காவியம்' என்பதாகும். இந்நூல் வரம்பெறுகாதை முதலாகப் பதினைந்து காதைகள் கொண்டது. கண்ணகி பாண்டியனுக்கு வழக்குரைப்பதோடு நூல் முற்றுப் பெறுகியது. 2219 பாடல்கள் கொண்ட இந்நூல் அகவல், வெண்பா, சிந்து முதலிய யாப்புக்களால் ஆனது. நூற் காதைகள், பாடல்கள் என்பனவற்றின் எண்ணிக்கை பல ஏடுகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

அரங்கேற்று காதையில் உள்ள பின்வருஞ் செய்யுள்களிலிருந்து இந்நூலாசிரியரின் பெயர் சகவீரன் என்பத பெறப்படுகின்றது :


தரங்கேற்றும் வெண்டிரைசூழ் தரளமெறி புவியதனில்
அரங்கேற்றும் கதைபாட அவனியுளோர் கேட்டருள
இரங்கேற்று நல்லோர்முன் யானுரைத்த புன்சொலெனும்
அரங்கேற்றுகதைகள் தன்னை அவனியுள்ளோர்கேளுமெல்லாம்.

அவனிபயில் குடிநயினாப் பணிக்கனெனும் பவமிகுந்த
கவளமதக் களிற்றண்ணல் காங்கேசன் தேவையர்கோன்
தவனெனவி ளங்குபுகழ் சகவீரன் தாரணியில்
சிவனருளா லிக்கதைக்குச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்.


கண்ணகி வழக்குரை

வரம்பெருகாதை

இரவிகுலத் தேயுதித்த எண்ணரிய நரபாலன்
கரைபுரள நதிபெருஞ் காவிரிநன் னாடுடையோன்
வருகலியும் மருவலரும் வாழ்மனையிற் புகுதாமல்
அரசுநெறி தவறாமல் அவனிதனை ஆற்நாளில் 1

நாளவமே போகாமல் நல்லறங்க ளவைமுயன்று
காளைநெறிப் பூங்குழலார் கற்புநெறி யதுகாத்து
ஆளுகின்ற படிபுரக்கும் ஆராய்ச்சி மணிதூக்கிக்
காளமுகில் போலுதளங் கரிகாலன் திருநாட்டில். 2

நாட்டுகின்ற பூம்புகாரில் நற்குடியில் உள்ளவரின்
ஈட்டுகின்ற யால்மிகுந்த இல்வணிகர் மாசாத்தார்
கோட்டுசிலை வாணுதலார் கொடியிடையார் மனைவியுடன்
வாட்டமற வுடன் மகிழ்ந்தே வாழ்ந்திருக்குங் காலையிலே. 3


கப்பல்வைத்தகாதை

திருந்துபுகழ் வளர்வர்பிரான் திண்புயஞ்சேர் துங்கவேடன்
துரந்துசெல்லும் புறவினுக்குத் துணிந்துடலை யரிந்தபிரான்
பரிந்துதான் கன்றிழந்த பசுவினுக்குத் தன்மகனைப்
பொருந்தவுறு மனுவேந்தன் புரக்குமந்தப் புகார்நகரே. 4

புரக்குமந்தப் புகார்நகரிற் புரவலனுக் கொப்பா
இருக்குமந்த வசியர்தம்மில் இயல்புடைய வணிகேசன்
திரக்குலவு மானாகர் திருமங்களாங் கண்ணகையைப்
பரக்குபுகழ் மாசாத்தார் பாலகற்குப் பேசிவந்தார். 5

கப்பல்வைக்க வேணமென்று கட்டுரைக்க மீகாமன்
செப்புநீ பலகையுள்ள திசையைஎன்றார் மாநாகர்
அப்பொழுதே பரதவனும் ஆய்ந்துரைப்பான் தென்னிலங்கை
மெய்ப்படவே கொல்லமீழம் மிகுபலகை உள்ளதென்றான் 6


கடலோட்டுகாதை

வடவேட்டிற் பாரதத்தை மருப்பொன்றால் எழுதிமுன்னர்
அடலோட்டுக் கயமுகனை அமர்க்களத்திற் கொன்றபிரான்
படவோட்டு மீகாமன் பையரவின் மணிகொணர்ந்த
கடலோட்டுக் கதைபாடக் கரிமுகனே காத்தருள்வாய். 7

விடுவதென்றான் மீகாமன் வெகுண்டேது வார்த்தைசொல்வான்
கடலசரசன் என்றென்னைக் காசினியோ ரறியாரோ
கெடுகருமங் கருதிவந்தாய் கிளையோடு முனைவானில்
படமலைவேன் மீகாமா பாயைவிடாய் என்றுரைத்தான். 8


வெண்பா

போகவிடா தந்தப் போரில் வெடியரசை
வாகைபுனை மீகாமன் வாள்வலியால் - ஆகமுற
ஆர்த்துப் பொருமவரை ஆஞ்சவமர் வந்து
சேர்த்துக் கொடுவந்தான் சென்று. 9


கலியாணக்காதை

இட்டமுடன் கண்ணகையார் இனியமணம் முடிப்பதற்க
பட்டணத்தி லுள்ளவர்க்கும் பலதிசையி லுள்ளவர்க்கும்
மட்டவிழும் சீரகத்தார் வணிகேசர் தங்களுக்கும்
ஒட்டமுடன் வெள்ளிலைபாக் கொழுங்குறத்தா மிட்டனரே. 10

தானமிக்க கோவலரைத் தக்கநல்ல மணக்கோலம்
ஆனதிரு வாசியுமீட் டாபரண வகையணிந்து
கானமருஞ் சீரகத்தார் கழுநீர்த்தா மம்புனைந்து
ஈனமில்லா நன்னெறியே இசைந்தவித மிருந்னிரே. 11


மாதவி அரங்கேற்றம்

கதித்தெழுந்த வனைமுலைமேற் கதிர்முத்தின் கச்சணிந்து
பதித்தபொன்னின் நவரெட்ணப்பணிவகைகள் பல பூண்டு
மதித்தகருங் குழல்முடித்து வயிரநெற்றி மாலையிட்டு
எதிர்த்தவரை வெல்லுமணி மேகலையு மிறுக்கினளே. 12

தாளம்வல் லாசிரியன் தண்டமிழ்க்கு மாசிரியன்
மூழுமிய லாசிரியன் முத்தமிழ்க்கு மாசிரியன்
தோளுந் துணையுமென்னத் துடியிடையார் புடைசூ‘ப்
பாளைசெறி குழலிலங்கப் பலகைஉற்ற களரிதன்னில். 13


வேறு

தானே இயலிசை வாரமும் பாடித்
தன்னிசை யின்வழி நின்றுமி யாழே
தேனார் குழல்வழி நின்ற குழலும்
சிறந்து நின்றதோர் தாமந் திரிகை
நானா விதமன்னர் அந்தரங் கொட்ட
நன்னூல் வழியிந்த சீராகம் நிற்கத்
கானார் குழலவள் மாதவி சற்றே
கையோடு மெய்கால் அசைத்துநின் றாளே. 14.

தத்தித் தோம் ததிக்கிண தோம்
தக்குண தக்குண தக்குண தோம்
தத்தித் ததிகுதி செய்கிட தங்கிட
செங்கிட செங்கிட தாகிட தோம்
ஒற்றைச் சுற்றுடன் உய்ப்ப முழாவொடு
உற்ற கிடக்கை உடன் விதமும்
வைத்துச் சித்திர வுற்ற நடிப்பொடு
மாதவி சோழன்முன் னாடி ளே. 15.


இரங்கிய காதல்

கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிறங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்கு
தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார்
தானிரங்க கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமேல்லாம். 16


வயந்தமாலை தூது

இங்கேதான் வந்ததுவும் யானுரைக்க நீர்கேளும்
அங்கேதான் மாதவியை ஆணதனில் வைத்தன்றீர்
சங்கேருங் கைமடவாள் தான்தந்த ஓலையிது
கொங்காருந் தாரானே கோவலரே எனக்கொடுத்தார். 17


வழிநடைக்காதை

போயினரே கோவலரும் பூவைநல்லாள் கண்ணகையும்
வேயனைய தோளசைய மென்காந்தள் விரல்தடிப்பத்
தூயநுதல் வேர்வரும்பத் துணைமுலைகுங் குமமழிப்பத்
தீயிலிடு மெழுகெனவே திருந்திழையார் சென்றனரே. 18


அடைக்கலக்காதை

அடைக்கலங்கா ணுமக்கென்று அருள்வணிகர் உரைத்ததன்பின்
இடைக்குலங்கள் விளங்கவரு மேந்திழையு மேதுரைப்பான்
மடைக்குள்வரால் குதிபாயும் வளம்புகார் வணிகேசா
தொடைக்கிசைந்த தோளாளே செல்லுவதேன் இவைகளெல்லம்.


கொலைக்களக்காதை

சொன்னமொழி எப்படியோ சொல்லாய்நீ தட்டானே
கன்னமிடுங் கள்வனெனிற் கண்காணத் திரிவானோ
இன்னபடி யென்றறியேன் இன்னானென் றறிவதற்கு
அன்னவனை நம்மிடத்தே அழைத்துவர வேணுமென்றார். 20

கொண்டுசென்று கைதொழுத கொலையானைப் பாகர்தமைக்
கண்டுமனம் களிகூர்ந்து காவலனு மேதுசொல்வான்
தண்டரளச் சிலம்பெடுத்துச் சாதித்த கள்வன்மிசை
உண்டிசையும் தான்மதிக்க யானைதனை யேவுமென்றான். 21

குஞ்சரமு மப்பொழுது கொல்லாமல் அவனுடைய
அஞ்சனத்தால் மிகவெருண்ட அணுகாமற் போனதுகாண்
வஞ்சமற்ற பேருடைய மாலகனே மழுவதனால்
விஞ்சைமிகுங் கள்வனுடன் வெட்டிவைக்க வேணுமென்றான். 22

உயிர்மீட்புக்காதை

பார்த்தாள் பயமுற்றாள் பங்கயச்செங் கைநெரித்தாள்
வேர்த்தாள் விழுந்தழுதாள் விதனப்பட் டீரோவென்றாள்
சேர்த்தாள் குறைப்பிணத்தைச் சேறுபடத் திருமுலைமேல்
ஆர்த்தாள் விழுந்தழுதாள் ஆருனக்குத் துணையென்றாள். 23

பண்ணாருந் தமிழ்தெரியும் பட்டினத்தில் வாழாமல்
மண்ணாளும் வாள்மாறன் மாமதுரை தன்னில்வந்து
எண்ணாதா ரியலிடத்தே என்னையுமே தனியிருத்திக்
கண்ணாலும் பாராமற் கைவிட்ட கன்றீரோ. 24

* உறங்கி விழித்தாற்போல் உயர்வணிகன் எழுந்திருந்து
என்னைநீ ரறியிரோ என்னுடைய எம்பெருமான்
உன்னைநா னறியேனோ என்னுடைய ஒண்ணுதலே
கண்ணுங் கறுப்புமெந்தன் காரிகையைப் போலிருப்பீர். 25

(* இப்பாடல் சில ஏடுககளில் இல்லை)

வழக்குரைத்தகாதை

கொடியிடையார் கண்ணகையும் கோவலரை விட்டகன்று
கடிகமழும் குழல்விரித்துக் கையில்ஒற்றைச் சிலம்பேந்தி
படியிலுள்ளோர் மிகவிரங்கப் பங்கயமாம் முகம்வாட
வடிபயிலும் மேல்மாறன் மதுரைமறு கேநடந்தாள். 26

மீனநெடுங் கொடிவிளங்க வெற்றிமன்னர் புடைசூ‘ச்
சோனைமத கரிபரியும் துங்கமணித் தேர்படையும்
தேனமரும் தொடைபுனைந்து செங்கனக முடியிலங்கை
மானபங்கம் பாராத வழுதிதிரு வாசலிலிதோ. 27

ஊரும் மதிக்குல மன்னா உலகா ளஅறியா ததென்னா
தாரு மனக்குவேம் பானாற் தடங்கா வும்வேம் பாய்விடுமோ
காருந் தருவும் நிகர்க்கும் கைக்கோ வலரை யேவதைத்தாய்
பாரி லரசர் கள்முன்னே பழிப டைத்தாய் பாண்டியனே. 28

சோரனென்று சொன்னாய்நீ தொல்வணிகர் பெருமானை
ஏரணியுங் கனகமுடி இரத்தினவித் தாரகனைக்
காரனைய கொடையானைக் காவலனைக் கள்வனென்றாய்
வாரிதலை யாகநின்ற வையகத்தோ ரறியாரோ. 29

மீனவனே என்றுசொல்ல வேல்வேந்தன் முகம்வாடி
மானபங்கம் மிகவாகி மதியழிந்து மன்னவனும்
ஆனபெரும் பழியெமக்கு அறியாமல் வந்ததென்று
தேனமருந் தொடைவழுதி செம்பொன்முடி சாய்ந்திருந்தான். 30


குளிர்ச்சிக்காதை

மாகனலை விலக்கியந்த மாதுநல்லாள் வழிநடந்து
கோபாலர் தெருவில்வரக் கொடியிடையா ரிடைச்சியர்கள்
தாமாகத் திரண்டுவந்து தையல்நல்லார் இடைச்சியர்கள்
வேல்விழியார் முலைதனக்கு வெண்ணெய்கொணர்ந் தப்பினரே.


வேறு

பாராய்நி யென்தாயே பராசக்தி ஆனவளே
ஆராலும் செய்தபிழை யத்தனையும் தான்பொறுப்பாய்
நேராக இவ்வுலகை நீகாத்துக் கொள்ளெனவே
நேராகப் புரமெரித்த நிமலனிட முள்ளவளே. 32

உள்ளவளே ஐவருக்கும் ஊழிமுத லானவளே
வள்ளஇடைப் பாகம்வைத்த வாணுதலே வாள்மாறன்
தெள்ளுதமிழ் மதுரைசுட்ட தேன்மொழியே யென்தாயே (யுன்)
பிள்ளைகள்தான் செய்தபிழை பேருலகில் நீ பொறுப்பாய். 3

Monday 13 September 2010

திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை

திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் பிறந்தார்.இன்று அவரது பிறந்த தினம். யாழ்பாணத்துக்கு ஆறுமுகநாவலர், மட்டக்களப்புக்கு விபுலானந்தர், திருகோணமலைக்கு யார் எனக்கேட்டால் கனகசுந்தரம்பிள்ளை என்பதே பதிலாயமையும். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் மகனான அவர் திருமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார். மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூற்களுக்கு பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆதியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார்.

நல்லோன்;;;;;; கனகசுந்தரன்

என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறைதமிழில் - ஒன்றுதிருக்
கோணா மலைக்கான சுந்தரன் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து.

கற்றுமிக வாய்ந்து கனகசுந்த ரன்திறனில்
உற்ற தமிழ்ச்செய்திப் பெற்றிதனை - நற்றமிழர்
பற்பலர் கொண்டனர்காண் பைந்தமிழ்ச் சீரினுக்கே
பொற்பாய் மிளிர்ந்த தமிழ்.

ஏடுகளிற் ஏறி எழிலாக வீற்றிருந்த
பீடுதமிழ்த் தெய்வத்தைப் புத்தகமாய் - நாடுகளில்
பல்லோர் பகர்ந்தேத்தப் பாங்காய்ப் பரிந்துழைத்தான்
நல்லோன் கனகசுந்தரன்.

எழுத்தியலும் சொல்லியலும் ஏடுகளில் தேர்ந்து
வழுக்களைந்து வான்தமிழை வாரி - வழங்கியதால்
கற்றார்உள் ளத்தில் கனகசுந்தரன் நின்றான்
கொற்றத் தமிழனவன் காண்.

அன்னை தமிழுக்கே ஆய்ந்தழகு தான்செய்தான்
உன்னுந் திருக்கனக சுந்தரன் - முன்னாள்
இவர்போல் தமிழ்ப்பணி ஈழநன் னாட்டார்
தவமாய்த் தழுவல் தகும்.

_புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

தி.த.காவின் பதிப்பு முயற்சிகளை பின் வருமாறு குறிப்பிடலாம்:
1. தொல் - எழுத்ததிகாரம் - நச்சினார்கினியர் உரையுடன்
2. தொல் - சொல்லதிகாரம்
3. கம்பராமாயணம் - பாலகாண்டம்
4. தமிழ் நாவலர் சரிதம்

1.தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை அவர்கள், ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் பிள்ளையார் அவர்களால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிபிக்கப்படுகிறது".

2.தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
தொல் - சொல்லதிகாரம், பிள்ளையவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

3.கம்பராமாயணம் - பாலகாண்டம்
பிள்ளையவர்கள் சுண்ணாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடிய மட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுண்ணாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார். இது வசிட்டர் வாயிலிருந்து வந்த கூற்றல்லவோ!

4.தமிழ் நாவலர் சரிதை -1921-
இந்நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை.எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக்கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து பிள்ளையவர்கள் தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பார் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்

Tuesday 7 September 2010

விடியும்! -நாவல்

விடியும்! -நாவல்- (30)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற போது எல்லாரும் நிக்கிறது சரியில்லை. நான் நிமலராஜனைக் கூட்டிக் கொண்டு வெளிய போய் உங்களுக்குச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு எட்டரை போல வாறன் என்று மூர்த்தி சொல்லிவிட்டுப் போய் பதினைந்து நிமிசமிருக்கும்.

அவர் இருப்பது அரசபடையின் கட்டுப்பாட்டுப்பகுதியில். படிப்பிப்பது விடுதலைப்புலிகளின் பகுதியில். சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்திருவார் என்று மூர்த்தி சொல்லிவிட்டுப் போயிருந்தான். வந்தாத்தான் தெரியும். காத்திருக்கும் பரபரப்பில் கடித்ததால் பெருவிரல் நகத்தின் உள்சதையில் இரத்தம் கசிந்தது. மற்ற விரல்களில் கடிப்பதற்கு நகமில்லை. கால் நகத்தைக் கடித்தும் பழக்கமில்லை. மூக்கு வியர்த்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். தூரத்தில் வீட்டு வெளிச்சமொன்று பொட்டுப் போல் தெரிந்தது. மற்றும்படி இருட்டுக் கிராமம். காடு போல மரங்கள் சூழ்ந்த பச்சைக் கிராமம். அதைத் தழுவி வந்த குளிர்ந்த காற்று உடலில் பட்டும் வியர்வை குறையவில்லை. சீதோஷ்ண மாற்றத்தால் சுரக்கும் வியர்வையல்ல இது.

பரீட்சை முடிவைக் காவிவரும் தபால் பியூனை பார்த்திருக்கும் அந்தரத்துடன் அவன் காத்திருந்தான். புதிய இடம், முன்பின் கண்டு பழகியிராத மனிதர்கள். செல்லத்தம்பி மாஸ்றரும் பழக்கமில்லாதவர்தான். அவர் கொண்டு வரும் செய்தி எப்படியிருக்கப் போகிறதோ!

அரசினால் கவனிக்கப் பெறாத பல அநாதரவான பள்ளிக்கூடங்களில் ஒன்றின் தலைமை வாத்தியார் அவர். அந்தப் பகுதிப் பள்ளிகளின் தேவைகள் சாமான்யத்தில் நிறைவேற்றப்படுவதில்லை -அவரது அதிபர்தர உயர்ச்சி உட்பட. பட்டியலில் பெயர் இருக்கிறது என்று கேள்விப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. அது மெய்யோ பொய்யோவென துருவிப் பார்க்க அவர் விரும்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பள்ளிகளில் அவரோடத்தவர்கள் உயர்ச்சி பெற்று இரண்டாம் கையாக வாங்கிய மோட்டார் சைக்கிள்களில் ஓடித் திரிகிறார்கள். அவருக்கு இன்னமும் கல்யாணத்தின் போது வாங்கிய றலீ சைக்கிள்தான் தஞ்சம். அதற்கும் பொறுமை நிறைய - இன்னும் சினக்காமல் ஓடுகிறது.

கவலைதான். ஏற்கனவே கவனிப்புப் பெறாத அந்தப் பகுதிப் பிள்ளைகளின் படிப்பு புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் தன் சொந்தக் கவலைகளை மறந்து போகவே விரும்பினார். பிறந்தது சம்பூரில், கட்டினது தம்பலகாமத்தில், சீவிப்பது மூதூரில். சுற்றுப்புறக் காடு களணியெல்லாம் தண்ணி பட்ட பாடு. அவரிடத்தில் படித்த பிள்ளைகள் இயக்கத்திலும் இருக்கிறார்கள், சறுக்கிறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அவருடைய சொல்லு புலிகளிடம் எடுபடும். .. .. .. இவைகள் மச்சான் குணரெத்தினம் அவரைப் பற்றி அளித்திருந்த பயோ டேட்டா.

செல்வம் நம்பிக்கையோடு காத்திருந்தான். அதற்குக் காரணமிருந்தது. இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மச்சான் குணரெத்தினம், செல்லத்தம்பி மாஸ்றரின் பெறாமகன். செல்லத்தம்பி மாஸ்றருக்கு இருக்கிற மதிப்பைப் பற்றி ஒரு இரவு முழுக்க கொட்டாவி விட்டுக் கொண்டு குணரெத்தினம் சொல்லியிருக்கிறான். தனக்கென்றால் நூறுக்கு 99.9 வீதம் நம்பிக்கை இருப்பதாகவும் கவலைப் படவேண்டாம் என்றும் கூறியிருந்தான். கணித ஆசிரியரானதால் எதையும் தசக் கணக்காக சொல்லிப் பழக்கம்.

அவன் காத்திருந்தான். நீங்க நம்பிக்கையோடு போங்க என்று குணரெத்தினம் கொடுத்த ஊக்கம் ஒரு புறம். சிலவேளைகளில் தம்பியையும் கையோடு கூட்டி வந்திாலும் வந்திருவார் என்று அவன் காட்டிய ஒளிக்கீற்று மறுபுறம். கூட்டி வந்தால்!

செல்வம் இப்போது அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தான். கனடியன் விசிட் விசாவிற்கு விண்ணப்பம் செய்தால் ஸ்பொன்சர் கேட்பார்கள். சொந்தத் தம்பிக்கு ஸ்பொன்சர் பண்ணினால் அங்கேயே காலூன்றி விடுவான் என்ற சந்தேகம் எழக்கூடும். டானியலை ஸ்பொன்சர் பண்ணச் சொல்லிக் கேட்கலாம்.

விசா விசயத்தில் தூதரகம் இப்போது கெடுபிடி என்ற தகவலும் இருக்கிறது. அப்படியானால் ஸ்டூடன்ற் விசாவிற்கு முயற்சி பண்ணலாம். டானியலுடன் கதைத்து டொறன்டோவிலுள்ள ஒரு கொலிஜ்ஜில் அட்மிசன் எடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். படிப்புச் செலவுக்காக காசு கூடுதலாக காட்ட வேண்டி வரும். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த வழி அநேகமாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. எதற்கும் குறுக்கு வழிகளையும் பார்த்து வைக்க வேனும். ஆளை இந்தியாவுக்கு அனுப்பி பாஸ்போட் முடித்து விசா குத்துவிச்சு அனுப்புவது ஒரு வழி. இல்லாட்டி கொழும்பில் ஏஜன்சியிடம் கதைத்து காசு கட்டி அனுப்பவேனும். இப்ப பத்து லட்சம் போகிறது என்று மூர்த்தி சொன்னான். அது பரவாயில்லை. போகிற வழியில் எங்காவது மாட்டுப்பட்டு நிற்கிற சிக்கலுமிருக்கு. என்ன ஆனாலும் ஒரு நிமிசம் கூட ஆளை இங்க வைச்சிருக்கப்படாது. ஓடித் தப்பிவிட வேனும். காசு பத்தாதென்றால் டானியல் இருக்கிறான்.

எல்லாத் திட்டங்களும் டானியலை நம்பியே வளைய வந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் தனது வாழ்க்கையை அவன் ஆக்கிரமித்திருக்கிற அளவு புரிந்தது. வந்ததுக்கு ஒரு தரமென்றாலும் டெலிபோன் எடுத்துக் கதைக்காதது பற்றி கவலையும் வந்தது. வீட்டுக்கு வந்தபின் கனடாவை மொத்தமாக மறந்து போனது உண்மைதான்.

தெரு நாயொன்று யாரோ இருட்டில் கல்லெறிந்ததில் மிரண்டோடியதைப் போலக் குரைத்தது. நேரம் ஏழு முப்பத்தைந்தாகிவிட்டது. அவனுக்கு விசர் பிடிக்கத் தொடங்கிற்று. அரை மணிக்கொரு தரம் வருகிற பஸ் கொஞ்சம் பிந்தினாலே அவனுக்கு ஒன்றுக்கு முடுக்குவதைப் போலிருக்கும். பொறுமையோடு காத்திருப்பதென்பது முடியாத காரியம். முற்றத்தில் இறங்கினான். வெளிச்சமற்ற முற்றம். வானத்தில் நிலவில்லை. அண்ணாந்து சுற்றிப் பார்த்தான். அமாவாசை இருட்டு.

வாசலில் அசைந்த இருட்டிலிருந்து டிரைவர் சம்சுதீன் வெளிப்பட்டார். சம்சுதீனை வரவேற்கும் மனநிலையில் அவனில்லை. செல்லத்தம்பி மாஸ்டர் வருகிற நேரத்தில் இவர் இருந்தால் தம்பியின் விசயத்தை மனம் விட்டுப் பேச முடியாது, என்ன செய்யலாம் என்ற யோசனையில் வாங்க சம்சுதீன் என்றான்.

இஞ்சினியர் ஐயா இல்லையா என்று கேட்டான் சும்சுதீன்.

“இல்லை சாப்பாடு வாங்கப் போயிற்றாங்க. ஏதும் சொல்ல வேனுமா ? ”

சம்சுதீன் இன்னமும் முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். வீடு பக்கத்திலிருப்பதால் ஒருவித காரணமும் இல்லாமல் சும்மா வந்திருப்பதாகவே தோன்றியது. உள்ளே வந்து இருக்கச் சொன்னால் மாஸ்டர் வருகிற போது ஆளைக் கிளப்புவது கஷ்டமாகிவிடலாம். ஆனால் முற்றத்தில் வைத்து பேசிக்கொண்டிருப்பது அழகில்லையே!

“வாங்க சம்சுதீன் வந்து உள்ள இருங்க”

இல்லை, போக வேனும் சும்மாதான் பாத்துட்டுப் போகலாமின்னு வந்தேன் என்றவன் சொன்னதற்கு மாறாக உள்ளே வந்தான். கதிரையை இழுத்துப் போட்டான் செல்வம்.

“வசதியெல்லாம் எப்படி ?”

“பரவாயில்லை”

வேறு சாதாரண சந்தர்ப்பமாக இருந்தால், இது போன்ற தட்டத் தனியான நேரத்தில் ஆளை இருத்தி வைத்து எவ்வளவோ பேசலாம். இப்போது எதைப் பேசுவது ?

“இந்தப் பக்கம் பொடியன்கள் வர்றதா ? ”

“நான் காணேல்லை, நம்மாக்கள் கண்டிருக்கிறாங்க”

“உங்க ஆக்களோட எப்படி அவங்க நடந்து கொள்ளுவாங்க ? ”

“முந்தி நல்லாத்தான் இருந்தது. காசு கேட்கத் தொடங்கினாப் பிறகு கொஞ்சம் எட்டத்தில நிக்கிற மாதிரித் தெரியுது”

“ஏன் நீங்க அவங்களை நம்பவில்லையா ? ”

“அப்படின்னு சொல்ல முடியாது. ஆனா அடிக்கடி ஏதாவது பிரச்னை நடக்குது. அதனால நம்பிக்கை குறைஞ்சு கொண்டு போகுது”

“எப்பிடி ? ”

“இவங்க வந்தா எங்களுக்கு கஷ்டம் என்று நம்மாக்கள் அபிப்பிராயப்படறாங்க”

ஏனோ தெரியவில்லை சம்சுதீனுக்கு தன் மனதிலிருப்பதை சொல்ல வேண்டுமென்று எண்ணம் வந்தது செல்வத்திற்கு. அவன் சொன்னான்.

“நீங்க பிழையாக விளங்கா விட்டால் நான் ஒன்றைச் சொல்ல விரும்புறன். இன்று நேற்றல்ல திருகோணமலையில பிறந்து வளர்ந்த காலத்திலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பி மாதிரித்தான் இருந்து வந்திருக்கிறம். புட்டுக் குழலில் போடுகிற மாவும் தேங்காய்ப்பூவும் மாதிரி ஒன்றுக்குள் ஒன்றாகத் தான் சீவிச்சுக் கொண்டிருக்கிறம். இனம் மதம் வேறுபட்டாலும் மொழியாலும் பக்கம் பக்கமா ஒன்றாகச் சீவிக்கிற உறவாலும் இணைஞ்சிருக்கிறம். ”

“அதன்டா உண்மைதான்”

“அரசிற்கும் புலிகளுக்கும் இருபது வருசமா போராட்டம் நடந்து கொண்டிருக்கு. தமிழர்களைப் பொறுத்த அளவில் இது ஒரு ஜீவமரணப் போராட்டமாக வந்துவிட்டது. அரசும் புலிகளும் ஒருவரையொருவர் அழிப்பதில் சாத்தியமான அத்தனை வழிகளையும் முயல்கிறார்கள். இந்த உக்கிரமான போரில் இடையில் அகப்படுகிற அப்பாவிப் பொதுமக்கள் கஷ்டப்படுவது தவிர்க்க முடியாதது. இப்படியான ஒரு பயங்கரமான போர்க்காலச் சூழலில், போராட்டத்தில் பங்குபற்றாமல் இடையில் இருக்கிற ஒரு இனத்திற்கு சில இடைஞ்சல்களும் கஷ்டங்களும் உண்டாவது இயற்கை. ஆனால் சமாதானம் என்று வருகிற போது அந்த இடைஞ்சல்கள் எல்லாம் பறந்து போய்விடும்.

சுயகெளரவமுள்ள ஒரு சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மை இனம் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையின் அவதிகளை இரத்தமும் சதையுமாக அனுபவித்தவர்கள் பொடியன்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் அவர்களை நேர்மையான வழியில் அழைத்துச் செல்லும் என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். அவர்கள் அடையத் துடிக்கிற சுதந்திரத்தில் இந்த மண்ணிலிருக்கும் அத்தனை பேரும் யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை என்ற சுயகெளரவம் கட்டாயம் இருக்கும். நான் பெரிசு நீ சிறிசு என்ற பேதமில்லாத பெருந்தன்மை நிச்சயம் இருக்கும். இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நீங்களும் நிச்சயமாக நம்புங்க சம்சுதீன்.”

“அப்படி நடந்தா எல்லாருக்கும் நல்லந்தானே ஐயா என்று சொன்ன சம்சுதீன், ஐயா வந்தா நான் வந்திட்டுப் போனதா சொல்லுங்க, அப்ப வரட்டா என்று எழுந்தான்.

முஸ்லிம் மக்கள் எங்கள் சகோதரர்கள். காலங்காலமாக நட்பு மாறாமல் வாழ்ந்தவர்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு அனுபவிக்கிற எந்த சுதந்திரமும் உண்மையான சுதந்திரமாக இராது. சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்மையாக இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது சகஜம். அதனைப் போக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமை என்று நம்புகிறவன் செல்வம்.

சம்சுதீன் போனபின்னும் செல்லத்தம்பி மாஸ்டர் வரவில்லை. ஒன்றுக்கு வருவது போலிருந்தது. கக்கூசு பின்வளவில் இருக்கிறது, சுற்றி வளைத்து பற்றைகள். இராயிருட்டியில் பாம்பு கீம்பு இருக்கும். முன்முற்றத்து வேலியோரமாக இருட்டின் மறைப்பில் ஒன்றுக்குப் போக நடந்தான். கிடுகுவேலியில் பட்டால் சரசரவெனச் சத்தம் கேட்கும். கொஞ்சம் தள்ளி நின்று சிப்பைக் கழட்டினான். அப்போது பார்த்து ஆரோ வருகிற மாதிரி அசமாத்தம்! மாஸ்றராகத்தான் இருக்கும். வந்ததை டக்கென்று அடக்கிக் கொண்டு திறந்த சிப்பை மேலே இழுத்துவிட்டு வாசலுக்கு வந்தான்.

வந்தவர் லோங்ஸ் போட்டிருந்தார். மாஸ்றராக இருக்க முடியாது. ஒன்றுக்குப் போவதை அந்தரத்தில் நிறுத்தப் பண்ணிய மனிதரை வேண்டாத விருந்தாளியைப் போலப் பார்த்து நீங்க ? என்று கேட்டான்.

“செல்லத்தம்பி”

தலைமை வாத்தியார் வேட்டியில் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன ? வேட்டியென்றால் கட்டுவதும் காபந்து பண்ணுவதும் கஷ்டந்தான். இடுப்பில் ஒன்றுக்கு நாலு சு;றுச் சுற்ற வேண்டும், இருந்து எழும்ப கெதியில் கசிங்கிப் போகும், அடிக்கடி நீலம் போட்டுத் தோய்க்க வேனும், வேட்டித் தலைப்பு இடையிடையே சைக்கிள் செயினுக்குள் கொழுவிக் கொள்ளும், கிழியும், கறை படும். .. .. வசதி கருதி பல தமிழ் வாத்தியார்கள் இப்போது காற்சட்டைகளுக்கு மாறிவிட்டார்கள்.

“வாங்க சேர்”

“செல்வநாயகம் ?”

“ஓம்”

“எங்க மூர்த்தியைக் காணேல்லை ?”

“சாப்பாடு வாங்க வெளிய போயிற்றினம்”

“நேரத்துக்கு வந்திருப்பன், பக்கத்தில ஒரு செத்த வீடு. அதாலதான் ஒரு சாப்பாட்டுக்குக் கூட உங்களை கூப்பிட முடியேல்லை”

அவன் இருக்கச் சொல்லுமுன்பே சம்பிரதாயம் பார்க்காமல் கதிரையில் இருந்தார். இன்னும் நாலைந்து வருசத்தில் இளைப்பாறுகிற வயசு. தலை முற்றிலுமாகப் பழுத்துவிட்டது. கிராமத்துச் சூழலுக்கு பொருத்தமில்லாத நல்ல நிறம். வெய்யிலில் திரிந்து கொஞ்சம் செம்படை அடித்திருந்தார்.

மூர்த்தி வாங்கி வைத்துவிட்டுப் போன சோடாப் போத்தலை உடைத்தான். கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த கிளாசை இன்னொரு முறை கழுவினான். சோடாவை ஊற்றினான். வெளிக் கிளாசில் படிந்து வழிந்த தண்ணீரை தன் கைஇலேஞ்சியால் அவர் பார்க்கும்படியாகத் துடைத்து விட்டுப் பக்குவமாகக் கொடுத்தான்.

“குடியுங்க சேர்”

அவராகத் தொடங்கட்டும் என்று காத்திருந்தான். கண்ணாடி எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“ஓம் ஓம் குடிப்பம்”

“நேற்று இங்க நடந்த விசயம் கேள்விப்பட்டனீங்களோ”

நாடக மேடையில் தொடர்பு விட்டுப் போகும் வசனத்திற்கு பின்னாலிருந்து வரி எடுத்துக் கொடுக்கும் உதவியாளர் போல, வந்த விசயத்தை அவர் தொடங்குவதற்கு ஏதுவாக அந்தக் கேள்வியைச் செருகினான்.

“அங்க போய் தோய்ஞ்சிற்று வரத்தான் கொஞ்சம் செண்டு போச்சு. பாவம் வல்லிபுரம் மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத பிறவி. இந்த அநியாயங்களால தானே எங்கட பிள்ளையள் துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்ள திரியுதுகள்“

“ஆமி அடையாள அணிவகுப்பு நடத்துவாங்களோ ? '

“அணிவகுப்பா ? ஆக்கள் இவ்வளவுக்கும் இடம் மாறாமல் இருந்தாலே பெரிய காரியம்”

அவனே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் சொல்கிற பதில்களில் அவனுக்கு இம்மியளவும் சிரத்தையில்லை. அவனுக்கு தம்பியின் முடிவு தெரிய வேண்டும். வருவானா ? இல்லையா ?

“சேர் தம்பீர விசயம்!”

“ஓமோம். முந்தநாள் சம்பூர் போயிருந்தனான். மகளிர் அணிப் பொறுப்பாளரைச் சந்திச்சனான். என்னட்டைப் படிச்ச பிள்ளைதான். ”

“தம்பியைச் சந்திச்சனீங்களா ? ”

“இல்லை”

“நான் இன்டைக்கு வாற விசயம் தம்பிக்குத் தெரியுமா ? ”

“வருவீங்களென்டு தெரியும். இன்டைக்கென்டு தெரியாது”

“தெரிஞ்சா கட்டாயம் வந்திருப்பான் என்னைப் பார்க்க”

அவர் மெளனமாயிருந்தார். சந்தோசத்தை சிலர் உடனே வெளிக்காட்ட மாட்டார்கள். மெளனமாக இருந்து சஸ்பென்ஸ் உண்டாக்கி ஆளைக் குழப்பி பிறகு வெளியிடும் போது சந்தோசம் இரட்டிப்பாக இருக்கும் என்ற எண்ணமாக இருக்கலாம். துக்கத்தை உடனே சொல்லி ஒரேயடியாக ஆளைக் குழப்பியடிக்காமல் மெளனமாக இருந்து மெதுமெதுவாக அவிழ்த்து விடுவது சிலருடைய வழி. இவருடைய மெளனம் எந்த வழி! அந்தரத்தில் இருந்த அவனுக்கு அந்த மெளனம் ஒத்துக்கொள்ளவில்லை.

“பொதுவாக இயக்கத்தில சேத்திட்டால் கழட்டிக் கொள்ளுறது கஷ்டம் என்று சொல்றாங்கள். உண்மையா சேர் ? ”

“எல்லாரோடும் அப்படி நடப்பார்கள் என்று சொல்ல முடியாது. ”

“அப்ப ? ”

“உங்க குடும்ப நிலைமை, அப்பாவுக்கு சுகமில்லாத விசயம், பொம்பிளைச் சகோதரங்கள், நீங்க கனடாவில, அவர்தான் இங்க ஒரு ஆம்பிளைச் சகோதரம் - எல்லாம் சொன்னனான் ”

“என்ன சொல்லிச்சினம் ? ”

“வந்தா கூட்டாற்றுப் போங்க எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று சொன்னாங்கள்”

“பிறகு ?”

அவன் அவருடைய கண்களையே உற்றுப் பார்த்தான். எவரொருவர் கண்களை நேராகப் பார்க்காமல் முகட்டையோ நிலத்தையோ பார்த்துப் பேசுகிறாரோ அவர் உண்மை பேசவில்லை என்பது அவன் கணிப்பு. நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் இதய சுத்தமான மனிதர்களின் வெளிப்பாடு. போகவிட்டு பின்னுக்கு நின்று பார்ப்பது, தலையை அசைக்காமல் கண்ணை மட்டும் இடது வலதாக அசைத்துப் பார்ப்பது எல்லாமே கள்ளத்தனமானவை. அவர் அவனை நேராகப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தார்.

“இயக்கத்தைப் பொறுத்தவரை, விருப்பமில்லாத ஆக்களை வைத்திருக்க மாட்டார்கள். இது விடுதலைக்கான ஜீவமரணப் போராட்டம். இதில் அரைகுறை ஈடுபாடு சரிராது”

“அப்ப ? ”

“உங்க தம்பியோட கதைக்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கேல்லை,”

“ஏன் ஆள் அங்க இல்லையா ? ”

“அது எனக்குத் தெரியேல்லை. கடிதம் ஒன்று குடுத்து விட்டிருக்கிறார்”

“என்ன கடிதம் ? ”

“உங்களுக்கு எழுதின கடிதம். நான் பார்க்கேல்லை. ”

அவனுக்கு முகம் டக்கென்று கறுத்துப் போயிற்று. கையோடு ஆளைக் கூட்டி வருவார் என்று பார்த்தால் கடிதம் கொண்டு வந்திருக்கிறார். வந்தாக் கூட்டாற்றுப் போங்க என்று அவர்கள் சொன்ன உடனேயே தம்பியை நேர சந்திக்க அவர் முயற்சித்திருக்க வேண்டும். என்னென்றாலும் பிறத்தி பிறத்தி தானே. தன்னுடைய மகனென்றால் விட்டு வந்திருப்பாரா ? குணரெத்தினம் புழுகின அளவிற்கு ஒன்றுமில்லை.

“உலகம் தெரியாத பிள்ளை. ஏதோ ஒரு வேகத்தில எடுபட்டு வந்திற்றான். பெத்த தாய் கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறா. அவன் வராட்டி மனுசிக்கு என்ன நடக்கும் என்டு தெரியாது. எனக்கு தம்பியை ஒருக்கா சந்திக்கக் கிடைச்சாப் போதும் கையோடு கூட்டிக் கொண்டந்திருவன். உங்களால ஒழுங்க பண்ணேலுமா சேர் ? ”

“எனக்கு உங்கட கஷ்டம் விளங்குது. எதுக்கும் அவருடைய கடிதத்தை ஆறுதலாக வாசிச்சுப் பாருங்க. வாசிச்சவுடன கிளிச்சுப் போட்டிருங்க. நாளைக்குக் காலைல வெளிக்கிட முதல் சொல்லி அனுப்பினா நான் முயற்சி பண்ணிப் பாக்கிறன் ”

அவர் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பு நிறக்கவரை எடுத்துக் கொடுத்தார். அதில் திரு. செல்வநாயகம் என்று மட்டும் போட்டிருந்தது, தம்பியின் கையெழுத்துத்தான். கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் சொன்னார்.

“ஒன்றை மட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதில் அக்கறை எடுக்கவில்லை என்று நீங்க நினைக்கக் கூடாது. ஒரு தகப்பனுக்கு இருக்கக்கூடிய கவலை எனக்கும் இருக்கு. பெத்ததுகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும்.”

அவன் கண்கலங்க அவரை உற்றுப் பார்த்தான்.

“தம்பி வயசான எங்களுக்கு இன்னமும் விளங்காத, விளங்கிக் கொள்ள விருப்பமில்லாத சில முக்கிய விசயங்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு தெளிவாக விளங்குது”

அவர் எழுந்தார். “நான் அப்ப வாறன் தம்பி. கலவரப்படாம வாசியுங்க. மூர்த்தியைக் கேட்டதாகச் சொல்லுங்க. ”

அவர் நடந்தார். அவன் எதுவும் சொல்லவில்லை. கூடவே வாசல்வரை போய் அவரை விட்டு வருவதுதான் மரியாதை. அது உறைக்காமல் அவர் போவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கதவடியில் போய் திரும்பி நின்று அவனைப் பார்த்தார். பல் தெரியாமல் சிரித்தார். அடுத்த கணம் இருட்டில் கலந்தார்.

அவன் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவருக்காக கிளாசில் ஊற்றி வைத்த சோடா காஸ் இறங்கிப் போய் அப்படியே இருந்ததை அவர் போன பின்தான் கவனித்தான்

தம்பன் கோட்டை

தம்பன் கோட்டை வரலாறு சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.
கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.
ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.
இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.
தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).

இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.
தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.
(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது

தம்பலகாமம்.

தம்பலகாமம்.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி.
ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம்.
தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும்
தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள்
எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள்
போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள்.

தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின்
பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும்.
திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில்
பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத்
தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என
அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது
குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல
சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள்
சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.

இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு,
கூட்டாம்புளி, கள்ளிமேடு, முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு,
முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும்.
கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு,
குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகிய வற்றினுர்டு
சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும்.
இந்தக் குடியிருப்பினிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும்,
தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.

கோயில்க்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம்.
இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது
திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு. அதன்
வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச்
சற்று நோக்குவோம்.

இந்நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும்
அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென
இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம்
மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க
வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன்
இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ
மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி
விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த
சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச்
செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த
தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப்
பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு
அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு,
சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)

தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நான் கருதுவதற்கு
முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரைக்குள் காணப்படவில்லை.
அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும்,
மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை
ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.

தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது
சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில்
எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம்,
கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என
அழைப்பதே சரியென நிறுவினார்.

அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில்
சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம்
செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

தம்பலகாமத்திற்கான வரைபடம் கிடைக்காத காரணத்தால், என் மனம் நிறைந்த அந்த
மண்ணை நானே வரைந்து இங்கே தந்துள்ளேன். அதிலே தம்பலகாமம் சந்தியிலும்,
கோவிகுடியிருப்பிலும் சிகப்பு வட்ட அடையாளமிட்டபகுதிகளில் மிகப்பெரிய
இராணுவ முகாம்கள் இருப்பதாக அறிகின்றேன். இம்மண்ணிற்கு அண்மையில் சென்று
வந்த என் நண்பனிடம் எனக்கும் ஆசையுண்டு எனச் சொன்னபோது சொன்னான்,
வேண்டாம் தற்போது வேண்டாம். ஏனெனில் உன் மனதில் பதிந்துள்ள அந்தப் பசுமை
மண்ணை நீ இப்போது பார்க்க முடியாது. ஆதலால் அந்நிலம் மீட்சிபெறும்வரை,
அதன் பசுமை நினைவுகளாவது உன்னிடம் அழியாதிருக்கட்டும் என்றான்...

சென்ற பகுதியில் தம்பலேஸ்வரம் எனும் பெயர் வரக்காரணம், தம்பன் எனும்
மன்னன் அல்லது தலைவன் ஆட்சி செய்த பகுதியென்றும், அதனால் அவன் பெயர்
சார்ந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ந்திருந்தோம்.
இப்பகுதியில் இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில் ஆராயவிளைகின்றேன். இந்த
வகையில் ஆய்வு செய்ய உதவிய என் ஆய்வாள நண்பருக்கு நன்றிகள்.

தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை
அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தபோது,
ஆச்சரியப்படத்தக்க உண்மைகள் புலப்பட்டன. அவ்வகராதியிலிருந்து எமக்குப்
பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.

தம்பலகாமத்தின் செந்நெல்வயல்களும், ஆதி கோணைஸ்வரர் கோவில் கோபுரமும்.

தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல்
என்பதாகும்.
இவ்விளக்கம் நுர்றுசதவீதம், தம்பலகாமத்துடன் ஒத்துப்போகும். ஏனெனில்,
வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என நாம் முன்னரே பார்த்திருந்தோம். இந்த
செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில் இப்பெயர் வந்திருக்கக்
கூடும்.

தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையேர்டு பெருமளவு ஒத்துப்போகும்.
ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே.
இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு
இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு,
கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த
சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச்
சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில்
சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும்.

தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே.
( அந்த மருதமரங்களின் நிழல் சுட்டியே இவ்வலைப்பக்கத்திற்கு மருதநிழல்
என்று பெயரிட்டேன்) வயல்நிலங்களின் கரைகளிலும்,
நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே
காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை.

தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச்
சேற்றுத்தன்மைகொண்டதாகும்.

இப்படித் தமிழச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்யிடினும், இப்பிரதேசம்
பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது

Monday 6 September 2010

தம்பலகாமம்



இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.



மிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.



திருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.



ஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-



கரிய குவளைத் தளிர் மேய்ந்து
கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வளநாட்டில்



இப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.



தம்பை நகரின் நகரப் பகுதி எங்கே? என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.



மனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.



தென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறியக் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர்
அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.


இதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.



இந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.



மாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.



வேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.



மருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற
பெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்
வாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.



சினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்தியம் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.



இந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.



தம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது
வழக்கமாகும்.



மேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.

கண்தழையே கந்தளாய் ஆனது


பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.


மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில்
சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.



பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.


இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.


மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.




அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.


கெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து
கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.


அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


நோக்கு கண் விளங்கக் கண்ட
நுவலரும் கயத்துக்கன்பால்
தேக்கு கண்டழையாமென்னச்
சிறந்ததோர் நாமம் நாட்டிக்
கோக்குல திலகனாய குளக்
கோட்டு மன்னன் செய்த
பாக்கியம் விழுமிதென்னா
வியந்தனன் பரிந்து மன்னோ.

(திருக்கோணேஸ்வர புராணம்)



பிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.



இன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.


பழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.


இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.


ஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.


இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.


1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.


கந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.


கந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.



திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.


ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.


அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.





இந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .



இந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.


இந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்