Tuesday 31 August 2010

மகாவித்துவான்.வி.சி.கந்தையா

பாலுமகேந்திரா

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா ( Balu mahendra ), திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர்,இலங்கையில், மட்டக்களப்பில் பிறந்தவர்; இயற்பெயர், பெஞ்சமின் மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலை கல்வி படிப்பினை முடித்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவினைப் பயின்றார். அங்கு தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டவர், பாலு. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.
பல் வேறு கருப்பொருள் கொண்ட கதைகளை யதார்த்தமாக உலகத் தரத்திற்கு இணையாக இயக்கியுள்ளார். "மூன்றாம் பிறை", "அழியாத கோலங்கள்", "வீடு", "சந்தியா ராகம்", "மறுபடியும்", "மூடு பனி" முதலியன இவருடைய புகழ் பெற்ற படங்களில் சில.
பாலுவின் பட்டறையிலிருந்து வெளிவந்த பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக திகழ்கின்றனர். "சேது","நந்தா","பிதாமகன்" போன்ற தனித்துவமான படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

 இயக்கிய திரைப்படங்கள்

  1. கோகிலா
  2. அழியாத கோலங்கள்
  3. மூடுபனி
  4. மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
  5. ஓலங்கள் (மலையாளம்)
  6. நீரக்ஷ்னா (தெலுங்கு)
  7. சத்மா (ஹிந்தி)
  8. ஊமை குயில்
  9. மூன்றாம் பிறை
  10. நீங்கள் கேட்டவை
  11. உன் கண்ணில் நீர் வழிந்தால்
  12. யாத்ரா
  13. ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
  14. இரட்டை வால் குருவி
  15. வீடு
  16. சந்தியாராகம்
  17. வண்ண வண்ண பூக்கள்
  18. பூந்தேன் அருவி சுவன்னு
  19. சக்ர வியூகம்
  20. மறுபடியும்
  21. சதி லீலாவதி
  22. அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
  23. ராமன் அப்துல்லா
  24. ஜூலி கணபதி
  25. அது ஒரு கனாக்காலம்


  • பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.
இவர் பூனேயில் திரைப்படக்கல்லுரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப்ப்டங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத்திரைபடத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார். தென்னிந்தியச் சினிமாத்துறையின் அதிஷ்டம்

Balu Mahendra

Balu Mahendra
Born Balanathan Mahendra
May 20, 1939 (1939-05-20) (age 71)
Batticaloa, Sri Lanka
Occupation Film director, producer, cinematographer
Years active 1976-present
Spouse(s) Sobha - passed away.
Ahila Balu Mahendra
Balanathan "Balu" Mahendran (Tamil: பாலநாதன் மகேந்திரா) (born 20 May 1939 in Batticaloa, Sri Lanka) is an Indian filmmaker, screenwriter, and cinematographer widely regarded as part of the first in a wave of directors and screenwriters from the Chennai film industry who revitalised Tamil cinema. He initially developed an early interest in photography.
A cinematography graduate and a gold medalist from the FTII in Pune. He started his film career as a cameraman for the Malayalam film Nellu in 1974, which earned him the best cinematographer award from the Government of India. He has been chosen as the best cinematographer for as many as ten films. He pioneered innovative camera style for colour in South Indi

Film career

His first film as a director was Kokila, a Kannada film, which earned him a National Film Award. Azhiyatha Kolanagl (1979) was his first directorial venture in Tamil. He is considered as one of the few film makers in Tamil who can tell a story visually. He writes the script for his films, handles the camera and edits the film himself, thus retaining a firm control over his creative output.
He worked mainly in Malayalam for directors like K. S. Sethumadhavan and P. N. Menon, before making his first film in Kannada, and then moving on to direct films in Tamil and Malayalam languages.
He made his first Hindi Film Sadma,which is a remake of his own Tamil film Moondram Pirai with Kamal Hasan and Sridevi. This film is supposed to be one of the finest films made by him. The film superbly captures the emotions involved in the relationship between the two main characters. He made another Hindi film, Aur Ek Prem Kahani which was about the love affair between a young man and his maid told in a realistic and simple manner. He has directed a malayalam movie Yatra which was remade in Tamil.
Mahendra is said to have witnessed the shooting of David Lean's The Bridge on the River Kwai and was so impressed that he decided to become a filmmaker.
The film director Mani Ratnam approached Mahendra to work on the cinematography of his first Kannada film, Pallavi Anu Pallavi. It has been reported that he almost refused to work with Ratnam whom he perceived as a novice at that time. He has since been quoted as admiring Ratnam for his 'infectious enthusiasm'.He never hesitated to work with Ratnam when Ratnam approached him. Instead he agreed to do the film enthusiastically when Ratnam met him and narrated the story to him.
Mahendra's strength as a cinematographer has helped him use visuals as an effective vehicle to carry the story forward.he has revolutionized cinematography in Tamil cinema, He has handled social issues like red tapism, corruption and old age in films like Sandhya Raagam. The women in his films come out strongly as can be seen in Veedu (Tamilzh).
Oflate, his films have not clicked at the box office and his financial status too wasn't going great, which he had mentioned in an interview.


Notable films

 External links

sombal
Balumahendra Assistants :
Bala (Sethu, Nandha, Pithaamahan, Naan Kadavul)
Ram Subbu (Kattradhu Tamizh a.k.a Tamizh MA, Thanga meengal - filming)
Vetrimaran (Pollathavan, Aadukalam)
l.Suresh Kanna (Kalavar King)
B.Ravikumar (Desam Thaandi, Never Comes Again)
Lyricist Naa.Muthukumar has also assisted Balumahendra.
Seemaan (Paanjalankurichi, Thambi) - though he has not worked as an assistant to Balumahendra, he is said to be very close to Balumahendra. His is very much inspired by him

Master Sivalingam

This Master's Voice

For the children of Batticaloa living amidst mine blasts and gun shots, the voice of this story teller seems to be the only means to keep them vibrant and alive to their culture. MurugaverlMahasenan speaks to "master" Sivalingam:
Master Sivalingam

As Ratnam Sivalingam and I walked along the eerie streets of Batticaloa town, everyone literally everyone who passed by, especially children, smiled and waved at him.


Swarming around the storyteller

When we reached the school verandah where he teaches, children swarmed around him demanding a story then and there.
The grown ups in the town respect him and pass by with a smile of recognition. The little ones just love him. They come to him as if they had a right over him, and they also feel, it seemed, that it is his duty to tell them a story.
"Tell us a story," the children demanded, when we went to meet the school principal.
"Finish your exams first," he replied with affection.
"We have finished our exams today," they all shouted in chorus.
"Then I will tell you stories from tomorrow ," he replied.
"When are you going to tell us the next story, uncle?" seemed to be the question that every child asked as we walked towards the Batticaloa public library, where we were to have the interview.
This small-made 65-year-old man dressed in a white national dress popularly known as "master" Sivalingam, doesn't seem to be real. He seems to be a character out of a fairy tale. Known to everybody, loved by everybody, in a small town where everything is not what it seems to be. It is popularity of its own kind, not like that of film stars or cricket stars. It is very personal.
Then we went to the library auditorium where we sat and talked. I didn't ask any questions, I just allowed him to tell me whatever came into his mind.
"I was born into a family where all the members took up teaching. My father N. Ratnam was a famous teacher in Manjaththoduvai.
"So you see it was a family of teachers. Both my brothers are teachers. And teachers commanded a lot of respect those days. So what happened? People started to call me 'Master' (since I came from a family of teachers) even before I had completed my secondary education, when I was still a student," he laughed.
Master Sivalingam is a story teller. He became famous as a story teller for children through the radio programme for children.
Perhaps he must be the only officially appointed story teller in the whole island. Today he tells stories at the Batticaloa Public library in the evenings for kids. He also tells stories at 25 other community centres and primary schools in and around Batticaloa town. Above all he was famous for his stories on radio and now on Rupavahini.
He still gratefully remembers the former Batticaloa GA Benedict Thasisius who had encouraged him and appointed him as Story Teller at the Batticaloa public library. He also teaches literature in schools.
He says he enjoys the job.
I asked him how much he is paid for all the teaching and "story telling".
"About Rs. 2500 a month," he said.
Born in 1933 Mr. Sivalingam had his education at Sivananda Vidyalayam in Batticaloa. After his secondary education he joined Chinthamani-Thinapathi as a sub editor in the late 60s and worked there for 17 years till the 1983 pogrom. He was also in charge of the childrenÕs page of Chinthamani .
Working at the newspaper also gave him the opportunity to write. He became very popular among the little readers in no time.
It was during this period that he got his real break, when he was introduced to the ChildrenÕs weekly Magazine programme of the Tamil Service of the SLBC.
"I was known for my mimicry well before that, even during my school days, in the locality," Mr. Sivalingam said.
"There was this school function where Kundrakkudy Adihal came from India. This was when I was only about 14 years old and I imitated his speech. He was delighted and blessed me."
"I was involved in Villuppaddu and drama too. Started in 1960 and by 1967 I had staged about 100 of them and during the last 30 years I have staged more than 125."
"I was honoured by the Batticaloa community which conferred on me the title Villisai Mannan."
He has been honoured everywhere he went. No wonder his honorary titles seem to be endless. Because he is a multi talented artiste-Bow songster (villisai), actor, story narrator, writer and orator and a real master in all of them.
"But I consider above all these the real happiness that appears on the children's faces when they see me and when they listen to my stories as the most valuable," he said.
He entertains kids in an area where electricity is irregular, life is precarious and anything can happen to anybody at anytime, where people live in constant fear. His voice seems to be the only solace for children. His stories are loud and clear amidst the shell blasts and gunfire.
His entrance to the mass media too was an interesting incident. When he went for the audition at the SLBC the Director gave him a sarcastic look as if to say what can this fragile looking little man do?
"But the moment he heard my mimicry he wanted me to sign a contract," he reminisced.
But he is not just a mimicry artiste. I think he is probably the most loved radio host as well as the most loved and famous story teller we ever had. His talent for narrating stories to children with all the sound effects-all made with his voice and sometimes with the aid of discarded coconut shells-is unsurpassable.
When TV was introduced to the country he was invited to tell stories for children.
"Television is not like other media Its power is tremendous and it gives you room for facial expressions too. I really enjoy it," he says.
Up till now he has presented more than 25 programmes on Rupavahini. "Even now every month I go to Colombo for recording," he says.
"You know I realised the power of this medium when this incident took place," he continued with another anecdote.
"When the Government forces recaptured the Batticaloa area we were issued with a special identity card. While I was waiting in the queue to register my name-my son too was with me- suddenly an officer-a Sinhalese-who was also engaged in issuing the cards came running to me. He seemed to be highly excited. In broken Tamil he said:
"Sir, I see you on Rupavahini. You tell stories to children no. I no understand Tamil but I love to watch it. I understand the story. We in our family all watch it. You not stand here. Come."
"And he took me bypassing all the others to the counter."
Mr. Sivalingam is also a children's writer. Last year his book Anbu Thantha Parisu won the Sahithya Academy prize for children's literature. Another book Payankara Iravukal is due this month.
A journalist, former Editor of Chinthamani/Thinapathi and Editor of Chudamani S. Sivanayagam said Mr. Sivalingam was a genius.
He has been telling stories for three generations. In Batticaloa people of all ages can be seen listening to his narrations spellbound. Children, mothers and grandparents. They all love his stories.
Another point is that he takes stories from great epics like Ramayanam and Mahabaratham. "Personally he is also a great friend to everybody," Mr. Sivanayakam concluded.
Before I left for Batticaloa I met another senior journalist who had worked with him at Independent Newspapers.
"He himself becomes a small child when he starts to tell a story," he recollected.
It seemed to become true. Towards the end of our little chat he offered to do some of his old performances exclusively for me, all alone in the library auditorium. What astonished me is that he still remembers word to word all that he had memorised in the 60s
"All this talent is God's gift, I personally believe that He gave me this skill," he said winding up our chat.
As we walked out of the library it was noon and the kindergartens were just over. And it was a pleasant sight to see the children swarming around him for stories because he is one of the rare people who keep alive this ancient Eastern tradition

Thursday 26 August 2010

வரகவி க.உ.சின்னவப் புலவர்:

வரகவி க.உ.சின்னவப் புலவர்:

பெயர்: கணபதிப்பிள்ளை சின்னவர்
பிறந்த இடம்: செட்டிபாளையம் (1877 – 1962)
படைப்புக்களில் சில:

    * பரிசத்த பாத்திமா பவனி
    * கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல்
    * ஏறாவூர் பத்திர காளியம்மன் காவியம்
    * மகாத்மா காந்தி அடிகள் இரங்கற் பா
    * ஈச்சந்தீவு கண்ணகையம்மன் காவியம்
    * செங்கற்படை மீனாட்சியம்மன் காவியம்
    * மதுவிலக்குப் பாட்டு
    * கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பதிகம்
    * கோரா வெளியம்மன் காவியம்
    * கந்தசாமி பேரில் மழைவேண்டும் காவடிப் பாட்டு
    * வேளாண்மைச் செய்கைப் பாட்டு
    * பெருமழை பெரு வெள்ளப் பாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 345 கிராமசேவகர் பிரிவுகளையும் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது
மட்டக்களப்பு
மாங்கேணி
காயாங்கேணி
புனானை
பனிச்சங்கேணி
வட்டவான்
வாகரை
கதிரவெளி
பால்சேனை
கட்டுமுறிவு
மீராவோடை
மாஞ்சோலை
ஓட்டமாவடி
கறுவாக்கேணி
கும்புறுமூலை
கல்குடா
கல்மடு
வாழைச்சேனை
புதுக்குடியிருப்பு
கண்ணகிபுரம்
பெரியபுல்லுமலை
றூகம்
கரடியனாறு
மரப்பாலம்
வேப்பவட்டுவான்
ஆறுமுகத்தான் குடியிருப்பு
செங்கலடி
கொடுவாமடு
கொம்மாதுறை
வந்தாறுமூலை
மாவடிவேம்பு
களுவன்கேணி
சித்தாண்டி
ஈரலைக்குளம்
ஏறாவூர்
மஞ்சந்தொடுவாய்
நாவற்குடா
நொச்சிமுனை
கல்லடி
அமிர்தகழி
இருதயபுரம்
பாலமீன்மடு
புன்னைச்சோலை
சத்துருக்கொண்டான்
கருவேப்பங்கேணி
பெரிய ஊரணி
சின்ன ஊரணி
தாண்டவன்வெளி
தாமரைக்கேணி
கோட்டைமுனை
பெரிய உப்போடை
புளியந்தீவு
திமிலதீவு
வீச்சுக்கல்முனை
சேதுக்குடா
காத்தான்குடி
ஆரையம்பதி
காங்கேயனோடை
தாழங்குடா
கோவில்குளம்
மண்முனை
கிரான்குளம்
வேடர் குடியிருப்பு
அம்பிலாந்துறை
கற்சேனை
அரசடித்தீவு
கடுக்காமுனை
பட்டிப்பளை
மகிழடித்தீவு
முதலைக்குடா
முனைக்காடு
கொக்கட்டிச்சோலை
தந்தாமலை
மண்டூர்
கணேசபுரம்
வெல்லாவெளி
காக்காச்சிவட்டை
பாலையடிவட்டை
விளாந்தோட்டம்
ஆனைகட்டியவெளி
நெல்லிக்காடு
பழச்சோலை
கண்ணபுரம்
பழுகாமம்
திக்கோடை
வீரன்சேனை
தும்பன்கேணி
வன்னிநகர்
பெரியபோரதீவு
கோவில்போரதீவு
குருக்கள்மடம்
செட்டிமாளையம்
மாங்காடு
தேத்தாத்தீவு
களுதாவளை
களுவாஞ்சிக்குடி
பட்டிருப்பு
எருவில்
மகிழூர்
குருமண்வெளி
ஒந்தாச்சிமடம்
கோட்டைக்கல்லாறு
பெரியகல்லாறு
துறைநீலாவணை
செம்மான் ஓடை
முறக்கொட்டாஞ்சேனை
சந்திவெளி
கிரான்
குடும்பிமலை
வாகனேரி
புனானை
இலுப்படிச்சேனை
பாவற்கொடிச்சேனை
காஞ்சிரங்குடா
கரயாக்கந்தீவு
குறிஞ்சாமுனை
பருத்திச்சேனை
ஈச்சந்தீவு
வவுணதீவு
நாவற்காடு
விளாவெட்டுவான்
மகிழவெட்டுவான்
உன்னிச்சை
நரிப்புல்தோட்டம்
நெடியமடு
ஆயித்தியமலை

Wednesday 25 August 2010

எழுத்தாளரும் தொழிலதிபருமான – கல்லாறு சதீஸ்

 
ஈழத்தில், கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது சுவிஸில் வாழ்ந்துவரும் திரு. கல்லாறு சதீஸ் அவர்கள் வித்தியாசமான சிந்தனையாளர்! தனது எழுத்துக்களின் பதிவுகளாக ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன” சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். இவைதவிர ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் வெளிவரும் பிரப‌ல்யமான பத்திரிகைகளிலெல்லாம் எழுதி வருகின்றார்.
சிறுகதைகள்தான் இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது என்றாலும்! உருவகக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல திசைகளிலும் இவரது பேனா பரந்து நிற்கின்றது. இது மாத்திரமல்ல நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவுவதிலும், தாயகத்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும்கூட தன்னால் இயன்றவரை பங்காற்றுகின்றார்!.
தான் பதினேழு வருடங்களாக பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விருப்பு ஓய்வு பெற்றுவிட்டு இப்பொழுது ‘இலாபமையம்” என்னும் தொழில் நிறுவனத்தை தானே உருவாக்கி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்.
அந்த வகையிலின்று இலக்கியத்துறையில் இளம் வயதிலேயே பலதரப்பட்ட வாசகர்களாலும் உற்று நோக்கப்படும் படைப்பாளியான திரு.கல்லாறு சதீஸ் அவர்களை சந்திக்கின்றோம். பலருக்கும் தெரியாத அவரின் உட்பக்கத்தை இன்றைய நேர்காணல் மூலமாக அனைவரும் தெரிந்துகொள்ள முயற்சிப்பதே இந்த நேர்காணலின் நோக்கமாகும்.

கேள்வி : சதீஸ் அவர்களே தங்களின் எழுத்துப் பணிகளின் ஆரம்பம் பற்றி அறிய ஆசைப்படுகின்றோம்?
பதில் : எனது எழுத்துப் பணியின் ஆரம்பமென எடுத்துக்கொண்டால் அது இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வேதனையான கீழ் நிலையில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, முறிக்கப்பட்டு, கிடத்தப்பட்டிருந்ததை, அந்த வேளையிலே எனது உணர்வுகளை வெளியே சொல்வதற்கான ஒரு ஊடகமாகத்தான் நான் எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதுதான் என்னை இன்று உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது.
கேள்வி : தங்களின் முதலாவது சிறுகதை எந்த ஆண்டு? எந்தப் பத்திரிகையில் பிரசுரமானது? பத்திரிகையில் உங்களது எழுத்துக்களைப் பார்த்தபோது உங்களது உணர்வுகள் எப்படி இருந்தது?
பதில் : எங்கிருந்து ஆரம்பமானது என்பதை முதலில் சொன்ன பதிலில் கூறியுள்ளேன்! அது 1987ம் ஆண்டு. எனது வேதனைகளையும், ஏமாற்றங்களையும், ‘ந‌வீன ஏமாற்றம்’ என்னும் தலைப்பில் சிறுகதையாக வடித்தேன். அந்தக கதை மித்திரன் வாரமலரில் வெளியானது. நான் எழுதியதை அச்சுருவில் பத்திரிகையில் வெளிவந்திருந்ததைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசமும் அதைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களும் என்னை மேலும் எழுத‌த் தூண்டியது. காலம் ஒத்துளைத்தது தொடர்ந்து எழுதி வருகின்றேன்.
கேள்வி : தாங்கள் சிறுகதைக்காக எடுத்துக்கொள்ளப்படும் கருக்கள் பலரும் சிந்தித்திருக்காத வகையில் கையாளப்பட்டிருக்கின்றன! உதாரணத்திற்கு பனிப்பாறைகளும் சுடுகின்றன என்னும் கதையில் ஒரு தாய்க்கும் கல்லூரி ஆசிரியைக்குமான சம்பாசனையும் சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” என்னும் சிறுகதைத் தொகுப்பில் வரும் ‘மிச்சம்” என்ற சிறுகதையின் கரு! இப்படியாக அனேகமாக எல்லாக் கதைகளையும் குறிப்பிடலாம். இந்தக் கருக்கள் எல்லாம் உண்மைச் சம்பவங்களா? அல்லது உருவாக்கப்பட்ட‌னவா?
பதில் : இதில் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்து, நிஜமும் ‍கற்பனையுமான கலவைகள்தான் அனேகமான கதைகள்! நான் எழுதுவதற்கு ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும் ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன’ என்ற கதைதான் என்னை இலக்கிய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கதையாகும்.! தமிழ் இலக்கியப் படைப்பியல்த் துறையில் கண்டு கொள்ள முடியாத பல பிரச்சனையை! எங்கள் கலாச்சாரத்திற்கு மாறுபாடான அந்தக் கருத்தை! ஜரோப்பியர்களின் வாழ்வு முறையில் நடைமுறையில் இருக்கின்றது! அவை இரண்டையும் சந்திக்க வைத்து ஒரு தமிழ்த் தாய்க்கும் ஒரு வெள்ளைக்கார ஆசிரியைக்குமான உரையாடலாக உருவாக்கினேன்! கதையின் முற்பகுதியைப் படிக்கின்றபோது வாசகர்கள் சற்று அதிர்ச்சியடைகின்றார்கள்! சுற்றுலாவிற்குச் செல்லும் உங்கள் மகளிடம் கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்து அனுப்புங்கள்” என அந்தத் தாய்க்கு அந்த ஆசிரியை அறிவுறுத்துகின்றார்!. இந்தக் கருத்தை எங்கள் கலாச்சாரத்தை பண்பாட்டை மீறாமலும், அவர்களின் கருத்துக்களைச் சிதைக்காமலும், பக்குவமாகச் சொல்லியிருக்கின்றேன். நான் சொல்லிய விதத்தைப் படித்தவர் ‘இப்படியும் நடக்குமா? என என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அதன் பின்னர் அது அனேகமான வாசகர்களால் தேடிப் படிக்கப்பட்டது! இது எனது எழுத்துப்பணிக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.
கேள்வி : ஒரு எழுத்தாளனின் கற்பனை அவனையும் அறியாமல் எங்கோ நடந்த உண்மைச் சம்பவங்களாகக்கூட இருந்துவிடுவதுண்டு! அல்லது பின்னால் நடந்துவிடுவதுமுண்டு! அப்படியாக நீங்கள் கதைக்காக உருவாக்கிய பாத்திரங்களை எங்காவது சந்தித்திருக்கின்றீர்களா? அல்லது யாராவது இது என் வாழ்வில் நடந்த கதை என்று உங்களிற்குக் கூறியிருக்கின்றார்களா?

பதில் : இப்படியாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன! எனது கற்பனையில் எங்காவது ஒரு பொறி தட்டும் அதை நான் கதையாக உருவாக்கிவிடுவேன். பின்நாட்களில் என்னைச் சந்திக்கின்ற முன் பின் தெரியாதவர்கள் அப்படியான ஒரு சம்பவம் எனது வாழ்க்கையில் நடந்திருக்கின்றது அல்லது எனக்குத் தெரிந்தவர்களின் வாழ்க்கையில் நடிந்திருப்பாதாகக் கூறியிருக்கின்றார்கள் ‘மிச்சம்” என்ற கதையைப்பற்றிக் கேட்டிருந்தீர்கள் அந்தக் கதையின் கருவை உங்களுடைய சிறுகதை ஒன்றில் இருந்துதான் எடுத்தேன்! ஆனால் நீங்கள் கதை சொல்லிய பாணியை மட்டுமல்ல கதையின் முடிவைக்கூட எனது கற்பனைக்கு மாற்றினேன். நீங்கள் மிச்சமாவதை வீணடிக்கின்றார்கள் என முடித்திருந்தீர்கள். நானோ மிச்சமாவதை மிச்சம் பிடிக்கிறார்களென முடித்திருந்தேன்! இப்படியாக கதைக்காக எடுக்கும் கருக்கள் எங்காவது சிறு பொறியாகக் கிடைக்கும் பின்பு கதையாக்குவது எனது கற்பனையே!

கேள்வி : தங்களுடைய இரண்டு புத்தகங்களின் பெயர்கள்கூட ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன! “சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” ஒரே பாணியில் வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டிருக்கின்றதே? இது எப்படி?

பதில் : இதன் அடிப்படை என்னவென்றால் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளியில் ஏற்படுத்திக்கொள்கின்றோம்! ஆனால் நாங்கள் அனுபவிக்கின்ற வாழ்க்கை அப்படியானதல்ல.அண்மையில் நீங்கள் வீரகேசரியில் எழுதிய ‘ஜரோப்பாவில் வாழ்ந்தாலும் நாங்களும் கடன்காரர்களே!” என்ற கட்டுரையைப் படித்தேன், அது எல்லோருக்கும் பொதுவானதுதான்! நாங்கள் பணம் கொட்டுகின்ற தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் கூட எங்களுக்கும் பணப் பற்றாக்குறை இருக்கின்றது! எங்களால் எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்க முடியவில்லை! எங்கள் மனதிற்குள்ளும் ஏராளம் மனக் கவலைகள் இருக்கின்றன! அப்படியான மகிழ்ச்சிக்கும் துயரத்திற்குமிடையில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்த்தும் விதமாகத்தான் ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன” சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” போன்ற தலைப்புகள் வைக்கப்பட்டன. எங்களின் இந்த வாழ்க்கை வெளியே சொர்க்கமாகப் பார்க்கப்பட்டாலும் நாங்கள் சில தண்டனைகளையும் அனுபவிக்கின்றோம் என்பதுதானே உண்மை!
கேள்வி : ஒரு படைப்பாளியின் முதல் நூலை அநேகமாக ஏனைய படைப்பாளிகள் அங்கீகரித்து விடுவதில்லை! அப்படி அங்கீகரித்தாலும் எழிதாகப் பாராட்டுவதில்லை! தங்களுடைய இரண்டு நூல்களுக்கும் தமிழ்நாட்டின் பிரபலமான கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கின்றார். அதுமாத்திரமல்ல சுனாமி நிதிக்காக தாங்கள் தயாரித்த குறும் தட்டு ஒன்றிற்கு பாடல்கள் முழுவதையும் இலவசமாக எழுதித் தந்திருந்ததுடன் அதன் வெளியீட்டு விழாவிற்கு சுவிஸிற்கும் வருகை தந்து சிறப்பித்திருக்கின்றார். அவருடைய அறிமுகம் பற்றிக் கூறமுடியுமா?

பதில் : புலம் பெயர்ந்து நான் சுவிஸிற்கு வந்த பின்பும் என்னால் வழமையைப்போல இயங்காமல் இருக்க முடியவில்லை! அந்த வகையில் 1990களின் ஆரம்பத்தில் குறும்படம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்தேன். அந்தப் படத்திற்கான பாடலை சினிமாப் பாடல்களைப் போல அமைக்க எண்ணி அது தொடர்பான ஆலோசனையைப் பெறுவதற்காகத்தான் நான் முதன் முதலில் 1992ல் கவிப்பேரரசு அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அந்தக் குறும்படத்தை என்னால் முழுமையாக தயாரித்து முடிக்க முடியவில்லை. அதற்காக நான் கவலைப்படவில்லை! காரணம். நான் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியில் தோல்வியடைந்தாலும் ஒரு நல்ல நண்பரை தேடிக்கொண்டதில் வெற்றி அடைந்திருக்கின்றேன் என்னும் சந்தோசமே!
கேள்வி : நான் அறிந்த வரையில் கவிஞர் திரு. வைரமுத்து அவர்கள் பணத்தோடும் கவிதைகளோடும் மட்டுமே நட்பு வைத்துக் கொள்வார் என்றுதான் அநேகமானவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் உங்களுடைய பதில் நான் அறிந்தவற்றுக்கு மாறுபட்டதாக இருக்கின்றதே?
பதில் : கண்டிப்பாக! எல்லா மனிதர்களுக்கும் பணம் வேண்டும். பணத்தை உழைக்கின்ற வழியும் திறமையும் அவரிடம் இருக்கின்றது! தான் கற்ற தமிழின் ஊடாக அந்தப் பணத்தை உழைக்கின்ற வாய்ப்பு அவருக்கும் கிடைத்திருக்கின்றது! உழைக்கின்றார்! அதில் என்ன தவறு காணமுடியும்? ஆனால் அந்தப் பணத்தை அவர் எல்லா இடங்களிலும் பெற்றுக் கொள்வதில்லை. அவருடைய தமிழ் எனக்கு பல வகைகளில் பயன்பட்டிருக்கின்றது. அதற்காக என்னிடத்தில் அவர் ஒரு சதமேனும் பெற்றுக்கொண்டதில்லை! தனக்குக் கிடைத்த பல பரிசுகளைக்கூட எனக்குத் தந்திருக்கின்றார். அவர் என்னிடத்தில் மிகுந்த அன்போடும், நட்போடும், தனது உடன்பிறவா சகோதரன் எனச் சொல்லிக்கொள்கின்ற அழவிற்குப் பழகுகின்றார்! நான் இன்னுமொன்றை இங்கு கூறவேண்டும் அவர் எழுதிய ‘ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்” என்ற நூல் உருவாகுவதற்குக் காரணமே கல்லாறு சதீஸ்தான் என தனது மகன் கபிலனிடம் என்னைப்பற்றி உயர்வாக சொல்லியிருக்கின்றார்.
கேள்வி : தாங்கள் எழுதிய கதை ஒன்று ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாகவும். சுவிசில் தாயாராகிக் கொண்டிருக்கும் சுவிஸ் மொழியிலான திரைப்படம் ஒன்றிற்கு தாங்கள் பாடல் எழுதியிருப்பதாகவும் அறிந்தேன். அதுபற்றிக் கூறுங்கள்.

பதில் : ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கின்ற மிகப்பெரிய ஆசை தன்னுடைய படைப்பு ஒன்று பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாக ஆக்கப்படமாட்டாதா? என்பதாகும். எனக்கும் அப்படியான ஆசை இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்கள் ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் என்னுடைய கதை ஒன்று மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் ஆய்விற்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது! அது புலம்பெயர் மாணவர்களுக்குரிய வெளிநாட்டுப் பாடத்திட்டத்தில் அடங்குகின்றது. அதைப் படிக்கின்ற மாணவர்கள் பலர் என்னோடு தொடர்பு கொள்கின்றார்கள்! என்னைச் சந்திக்கின்றார்கள்! என்னோடு நட்பைப் பேணிக்கொள்கின்றார்கள்! இது எனக்குப் பெருமையாக இருக்கின்றது.
கேள்வி : பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டப் புத்தகம் எப்படியானது? இணைக்கப்பட்ட உங்களின் அந்த கதையின் பெயர் என்ன? என்பதை நாம் அறியலாமா?

பதில் : முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களைப்பற்றி மட்டுமே எழுதப்பட்டு 500 பக்கங்களைக்கொண்ட அந்த நூலின் தலைப்பு ‘ஆலயங்களும் தமிழர்களும் அவர்களது தாயகமும்” என்பதாகும். இதில் ஜேர்மன், சுவீஸ் பேராசிரியர்கள் இலங்கைத் தமிழர்களைப்பற்றி மட்டுமே எழுதியிருக்கின்றார்கள். அந்தப் புத்தகத்தில் என்னுடைய சொர்க்கங்களும் தண்டிக்கின்றன!” என்னும் நூலில் வரும் ‘எதிரி யார்?” என்னும் சிறுகதையே பதிவாகி இருக்கின்றது.இப்படியான தொடர்புகளே சுவிஸில் திரைப்படம் எடுப்பவர்களில் சிலரை என்னை நாடிவர வைத்தது. அவர்கள் தயாரிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்திற்கான பாடல்களை எழுதியிருக்கின்றேன். படம் எப்பொழுது திரைக்கு வரும் என்பது தெரியாது. ஆனால் பாடல் எழுதியதற்கான ஊதியத்தைத் தந்துவிட்டார்கள்.
கேள்வி : தங்களது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இரண்டு பதிப்புகள் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன! இது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா?
பதில் : இரண்டு பதிப்புக்கள் மட்டுமல்ல. மிக அதிகமான எண்ணிக்கையில் பதிவானதென்றும் அதன் பிதிப்பாசிரியர் நண்பர் ரவி-தமிழ்வாணன் அவர்கள் அநேகமான செவ்விகளிலெல்லாம் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி : தங்களுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன” என்னும் நூலுக்கு தமிழ்நாடு ‘லில்லி தேவசிகாமணி” நினைவான இலக்கியப்பரிசு கிடைத்திருக்கின்றது. அதற்கான பரிசுத்தொகையை தமிழ்நாட்டின் ஒரு நலிந்த எழுத்தாளருக்கே நன்கொடையாக வழங்கியிருந்தீர்கள்! அவரை எப்படி அறிந்திருந்தீர்கள்? அவ‌ரது எழுத்துக்கள் மூலமாகவா? அல்லது நேர்முக அறிமுகமா?
பதில் : பரிசு கிடைத்ததும் அந்தப் பணத்தை சுவிஸ் நாட்டுக்கு வரவைப்தா? அல்லது தமிழ்நாட்டிலேயே ஏதாவது நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துவதா? எனச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, படுதலம் சுகுமாரன் என்னும் நலிந்த படைப்பாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார் என்பதனை பத்திரிகைகள் மூலமாகத்தான் அறிந்தேன். அவர் கறுப்பா? சிவப்பா? என்பதுகூட எனக்குத் தெரியாது! உடனேயே என்னுடைய பரிசுப்பணத்தை படுதலம் சுகுமாரன் அவர்களுக்கு அனுப்பிவைக்கும்படி பரிசு வழங்கிய அறக்கட்டளையினருக்கு கடிதம் எழுதியதோடு நில்லாது மேலும் நானும் எனது நண்பர்களுமாக கொஞ்சப் பணத்தைச் சேகரித்து அவருக்கு அனுப்பிவைத்தோம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் உயிர் பிழைக்கவே மாட்டார் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்ட சுகுமாரன் பிழைத்துவிட்டார். பின்பு நான் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாடியிருக்கின்றேன்.
கேள்வி : ச்தீஸ் ஈழத்து எழுத்தாளர்களில் தங்களுக்கு பிடித்தமான ஏழத்தாளர் யார்? ஏன்?
ப‌தில் : நான் ஆரம்பத்திலேயே கூறியிருக்கின்றேன். நான் இருந்த இடம் பற்றி! அங்கு இருந்த காலத்தில் செ.கணேசலிங்கனின் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகனுக்குத் தந்தை எழுதுவது போல நம்பிக்கை ஊட்டும் விதமாக அவர் எழுதிய ‘குமரனுக்குக் கடிதங்கள்” போன்ற பல நூல்களுடன் செ.யோகநாதன் போன்றவர்களுடைய நூல்களையெல்லாம் படித்ததில் அவர்களுடைய எழுத்தின்மீது எனக்கு ஒரு காதல் ஏற்பட்டது என்றுகூடச் சொல்ல‌லாம்! இப்படியாக இன்னும் சிலரைக் குறிப்பிட முடியும்.
கேள்வி : தாங்கள் தற்பொழுது தனியாக ஒரு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்! அது பற்றிக் கூறமுடியுமா?
பதில் : இலக்கியத்துறைதான் என்னை இந்த தொழில்த் துறைக்கும் தள்ளிவிட்டிருக்கின்றது என்று கூடச் சொல்ல‌லாம்! ஒரு முறை கவிப்பேரரசு அவர்கள் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அன்போடு கேட்டார் சதீஸ் நீங்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? என்று நான் எனது சம்பளத்தைச் சொன்னேன். இவ்வளவுதானா? என திரும்பக்கேட்டார். இங்கு இதுவே ரொம்ப அதிகம் என்றேன். அவர் சொன்னார் சதீஸ் நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். நீங்கள் வாழ்கின்ற நாடு இலங்கையோ, இந்தியாவோ, சோமாலியாவோ அல்ல? சுவிற்சிலாந்தில் வாழ்கின்றீர்கள்! இது பணத்தைச் சொரிகின்ற நாடு. நீங்கள் இன்னும் உழைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எனக்கூறி நான் முயற்சிக்காமல் இருப்பதற்கான சில காரணங்களையும் விளக்கினார். அவர் கூறியது எனக்குச் சரியாகப் பட்டது. அந்த நேரத்தில் எனக்கு சுவிஸ் நாட்டின் குடியுரிமையும் கிடைத்ததால் நான் மேலும் படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்தது. இத்தோடு அவர் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சதீஸ் ‘தர்ம வழியில் பொருள் ஈட்டுங்கள்’ என அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். அந்த நேரத்தில் எனது சிந்தனையில் உருவாகியதுதான் இப்பொழுது நான் ஆரம்பித்திருக்கும் இந்த‌ ‘இலாப மையம்” என்னும் தொழில் நிறுவனம்.
கேள்வி : இந்தத் தொழில் தாங்கள் எதிர்பார்த்தபடி போதிய வருவாயைத் தருகின்றதா? மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா?

பதில் : எனது நிறுவனம் என்பதனால் நேரத்தைப் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கின்றது. அதற்கேற்ப போதிய வருவாயும் கிடைக்கின்றது. எனது வருவாயைவிட மனதிற்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுக்கின்றது. காரணம், மொழிப் பிரச்சனை காரணமாக அரசாங்கத்திற்கு வரியாகவும், வட்டியாகவும் மிக அதிகமான பணத்தை எமது மக்கள் செலுத்துகின்றார்கள். எனது இலாப மையத்தின் சேவை அவர்களை வருடத்திற்கு ஆயிரக்கணக்கான சுவீஸ் பிராங்குகளை மிச்சப்படுத்த வைக்கின்றது. இப்படியாக பல வழிகளிலும் மக்களுக்கு சேவை புரிகின்ற மையமாக இருப்பதனால் அவர்களும் மகிழ்ச்சியடைகின்றார்கள் நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கேள்வி : தங்களுடைய‌ தொழில், இலக்கியப் பணிகளுக்கு தடையாக இருப்பதுண்டா? அல்லது இலக்கியப் பணி தொழிலுக்குத் தடையாக இருப்பதுண்டா? எதில் மன நிறைவு அடைகின்றீர்கள்?

பதில் : இல்லை இரண்டிற்கும் நான் தனித்தனியான நேரங்களை ஒதுக்கிக் கொள்கின்றேன். சில சமயங்களில் முக்கியம் கருதி வேலையை தள்ளிவைப்பதும் உண்டு. இருந்தாலும் வேலைகள் தடைப்பட்டதில்லை. இரண்டும் எனது இரண்டு கண்களைப் போன்றது.
கேள்வி : இலக்கியப் பணியில் தங்களது அடுத்த கட்டம்?

பதில் : ஒரு நாவல் ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றேன். அடுத்த வருடம் அதை எதிர்பார்க்கலாம்!
கேள்வி : தங்களது குடும்பம் பற்றி?

பதில் : எனது துணைவியார் அவர்கள் இங்கு ஜேர்மன், சுவிஸ் ஆகிய இரு மொழிகளையும் கற்று மொழிபெயர்ப்புச் சேவை செய்வதற்குரிய சான்றிதழ்களைப் பெற்றிருக்கின்றார். தனது படிப்பை மக்களுக்கு பயன்பெற வைக்கவேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். தற்சமையம் நாங்கள் ஆரம்பித்திருக்கும் தொழில் மையத்திற்கு நிர்வாக இயக்குந‌ராக இருக்கின்றார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
நல்லது சதீஸ் அவர்களே தங்களது நேரத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாது, பொறுமையாக எங்கள‌து கேள்விகளுக்குப்  பதிலளித்ததற்கு தமிழ்விசை சார்பாக எம‌து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

சு.ஸ்ரீகந்தராசா-களுவாஞ்சிக்குடி

சு.ஸ்ரீகந்தராசா:

பெயர்: சு.ஸ்ரீகந்தராசா
புனைபெயர்கள்: திருமுருகரசன், பாடும்மீன்
பிறந்த இடம்: களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு (1.10.1953)
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி: 1 Petra Court, Eppinga, Victoria – 3076, Australia
Tel: 61 3 9408 4519, 61 0 422 444 132
E.mail: srisuppiah@hotmail.com
படைப்பாற்றல்:  கவிதை, சிறுகதைகள், கட்டுரை, நாடகம், விமர்சனம், ஆய்வுக்கட்டுரை

படைப்புகள்:

    * சந்ததிச் சுவடுகள் - நாடகங்களின் தொகுப்பு
    * மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்
    * தமிழினமே தாயகமே – கவிதைத் தொகுப்பு
    * தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் - ஆய்வுரைகள்
    * ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப் பயணம்

எழுதி, இயக்கி மேடையேற்றிய நாடகங்கள்:

    * கற்பனையில் தேவலோகம்
    * ஆலம்பழம்
    * ஊருக்குத்தாண்டி உபதேசம்
    * பகையிலும் பண்பு
    * உணர்ச்சிகள்
    * பிராயச்சித்தம்
    * தம்பியாடி இது?
    * அளவுக்கு மிஞ்சினால்
    * சிதைந்த கனவுகள்
    * புத்திரபாசம்
    * சந்ததிச் சுவடுகள்
    * கன்னி மனம் (அவுஸ்திரேலியாவில்)

விருதுகள்:

    * சிறந்த நடிகர். சிறந்த நாடக இயக்குனர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் ஆகியவற்றுக்கான பரிசுகள் மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 1970 க்கும் 1982 க்கும் இடையில் பல முறை பெற்றிருக்கிறார்.
    * பேச்சுப் போட்டிகளில் உள்ளூரிலும், மாவட்ட ரீதியிலும் அகில இலங்கை ரீதியிலும் பல பரிசுகள்
    * அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பணிக்காக விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம், விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழகம், மெல்பேண் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்புக்கள் பாராட்டி வழங்கிய விருதுகள்
    * செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டமும் சிறப்பு விருதும் - அவுஸ்திரேலிய பல்லினக் கலாசார அமைச்சு – 2005
    * அயலக முத்தமிழ்ப் பணிக்கான விருது - இந்திய திருச்சிராப்பள்ளி புனிதவளனார் கல்லூரி - 2007
    * இன்னும் கன்னியாக  - ஞானம் சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி -  இரண்டாம் பரிசு - 2009

இவர்பற்றி:

    *

      இவர் ஒரு சட்டத்தரணி, சமாதான நீதவான், அத்தோடு அவுஸ்திரேலிய குடிவரவுச் சட்ட முகவராகவும் உள்ளார்.  இவரது 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சங்ககாலமும் சங்க இலக்கியங்களும், ஐம்பெருங்காப்பியங்கள், மாமன்னன் எல்லாளன் (வலாற்று நாடகம்), திருவெம்பாவைச்சிறப்பு, தமிழ் இன்பம் (வானொலிப்பேச்சுக்கள்) என்பவற்றோடு இவரது சிறுகதைத் தொகுதியொன்றும் விரைவில் வெளிவரவிருக்கின்றன. கடந்த 18 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் சேவை செய்து வருபவர். அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராகவும், விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் அரும்பணிகளை ஆற்றியவர். தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முத்தமிழ்விழாவையும், மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும், சர்வதேச இலக்கியப் போட்டிகளையும் பத்துவருடங்களுக்கு மேலாக நடாத்தியவர். அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக தனித்தமிழ் இசைவிழாவையும், தமிழ் நடனவிழாவையும் நடாத்தியவர். சிறந்த பேச்சாளர், நாடக நடிகர். தனது இனிமையான மேடைப் பேச்சினாலும், கவிதைகளாலும் எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்

சீர்பாதர் குல செப்பேடுகளும் ஆராய்ச்சியும்


ஒரு குறிப்பிட்ட வரலாற்றினை எடுத்து பார்க்கின்ற பொழுது அவ்வரலாறு தொடர்பான சான்றாதாரங்கள் மிகவும் முக்கிமானவையாகும். அவ்வாறான ஆதாரங்களே குறிப்பிட்ட வரலாற்றின் உண்மைத்தன்மைக்க அதாரமாக அமையும். இன்று 21ம் நூற்றாண்டில் வாழந்த கொண்டிருக்கின்றோம். எனினும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த விடயங்களையெல்லாம் இன்று ஆய்வு செய்கின்றோம். ஆரம்ப கால மனித சமுதாயம் எவ்வாறான இயல்பினை கொண்டது, எவ்வாறான சிறப்புக்களை கொண்டது என பலதரப்பட்ட விடயங்களை நாம் இன்று கண்டறிகின்றோம். இவ்வாறன கண்டு பிடிப்புக்களுக்கு சான்றாதாரங்கள் இன்றியமையாதவையாகும். 

அந்த வகையில் சீர்பதகுலம் தொடர்பான விடயங்களும் பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை இவ்வாறான சீர்பாதகுலம் தொடர்பான விடயங்களை அறிவதற்கு சீர்பாதகுலச் செப்பேடுகள் ஆதாரங்களாக விளங்குகின்றன. சீர்பாததேவியினால் வீரர்முனையில் விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஆண்டு தோறும் சீர்பாததேவியும் பாலசிங்கனும் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையாரை வழிபடுவதற்காக வீரர்முனை கிராமத்திற்கு வருவது வழமையாக காணப்பட்டது. இவ்வாறு வருகின்றபோது வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களையும் அவர்கள் தரிசிப்பது வழக்கமாக இருந்தது. இதன்போது அவர்கள் வீரர்முனை தொடர்பான விடயங்களை அவ்வாலயங்களில் செப்பேடுகளில் பொறித்து வைத்தனர். அவ்வாறான செப்பேடுகள் சீர்பாதகுலம் பற்றிய தகவல்களை வழங்குவனவாக உள்ளன. அந்தவகையில் பின்வரும் செப்பேடுகள் சீர்பாதகுலத்திற்குரிய செப்பேடுகளாக விளங்குகின்றன.  

01.வீரர்முனை செப்பேடு
பாலசிங்கனால் வீரர்முனையில் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு அரச குலத்தவர்கள் குடியேற்றப்பட்டதும் பாலசிங்க மன்னனால் அவ்வாலயம் தொடர்பான விடயங்களும் அதற்கு வழங்கப்பட்ட சொத்துக்களையும் மன்னன் செப்பேட்டில் பொறித்து அவ்வாலயத்தில் சேமிக்குமாறு பணித்தான். அவ்வாறு வீரர்முனையில் சேமிக்கப்பட்ட செப்பேடு வீரர்முனைச் செப்பேடு என வழங்கப்படுகின்றது. அது பின்வருமாறு

கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய் 
இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனாம்
உக்கிர சிங்கனின் உறைவிடம் கண்டி
மிக்க புகழ் நின்ற விற்பனை கன்னிகை
மருதப்புர வீக வல்லி என்பாளை 
பேருற மணந்து பெற்றிடும் மகனாம்

வால சிங்கனென வலிவுறு சிங்கம்
வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம்
குலைகள் அறுபத்து நான்கிலும் வலியன்
தோலைவில் விண்ணில் துரிதமாய் செல்லும் 
முந்திர வித்தையும் மாண்புற கற்ற 
சுந்தர ரூபன் சோழநா டேகி


ஆரவா பாணன் அடியினை மறவா
குமராங்குசனென கூறு பெயரினன் 
சுறறந்திடு சோழன் அருந்தவப்புதல்வி

சீர்பாத தேவியை திருமணம் செய்து

ஈழநாடேகி என்னும் கால் 
சோழ மாமன்னன் துணையாட்; களாய்
முன்னர் குலத்து மக்களை அனுப்ப
ஏண்ணம் கொண்டு இன்புடனாய்ந்து

திரு வெற்றியூர் சேர்ந்திடும் அயலிலும்
பெருந்துறையூர் பின்னர் தன் மருங்கிலும்
கட்டுமாவடி கரையிரு புறத்திலும்
மட்டுக்கூங்கிய மறுபுறங்களிலும்

சிந்தன் பழையன் சீர்காங்கேயன் 
சந்திரசேகர சதாசிவச் செட்டி 
காலதேவன் கண்ணப்ப முதலி
ஞாலம் புகழ் முத்து நாயக்கன்
ஆச்சுத ஐயர் அவர்களது
இச்சை மனைவியரும் இன்னும் பலரையும்
சேர்த்துக் கப்பலில் சிவனை நினைத்து
வுhழ்த்துக் கூறி வழியனுப்பியே செல்ல

குப்பலும் கடல்மிசை அப்பனருளால்
சேப்பம் தாகவே தீங்கெதுவும் இன்றி
ஓடிவருங்கால் உயர்ந்தோர் நிதமும்
புhடிப் பரவும் பரமனங் குசனாம்
கோணேசர் வாழும் கோயில் முன்பாக 
நூனாதிக் கொன்றினும் நகராது நிற்க

ஓலம் ஓலமென் றுமையாள் கொஞ்சும்
புhலனவனை பணிவுடன் வேண்டி 
நேர்ததை அறிய நேரிழை நல்லாள்
தேர்ந்தவர் தமக்கும் செப்பவே அன்னார்

ஆழ்கடலில் இறங்கி இலசிப்பார்க்க
நீள்புவி போற்றும் நிமலனைங்கரனின்
திருவின் உருவச் சிலைதனை எடுத்து
உருவிலேற்ற அரசனும் அரசியும்

எங்குதானோடினும் எம்மவரின் கப்பல் 
தங்குதடையின்றி தட்டினால் கரையில்
அவ்விடம் ஆலயம் ஐயனே உனக்கு
செவ்விதாய் அமைத்து சிறப்பொடு பூசனை
நாடொறும் செய்வோம் நலம் புரிவாயென
பாடிப்பரவி மன்றாடி யேநீர்

சிலையைத் தாங்குமத் தெய்வீகக்கப்பல்
அலைகடல் மீதே அல்லலுறாமல்
மட்டுக்களப்பு வாவியை அண்டி 
முட்டுப்படாமல் மோதி நில்லாமல்
ஒரே திசையாயோடி உறைவிடம் இதுவென
வீரர்முனைக்கரை விருப்புடன் நின்றதே

அரசனும் அரசியும் ஆனைமாமுகற்கு
பரிவுடன் ஆலயம் பாங்குடன் அமைத்து
சிந்தர் குலத்திர் தெய்வீகச் சிலையதை
சிந்துயாத்திரைச் சின்னமென்றிருத்தி

மண்டலாபிசேகம் மாண்புறச் செய்து
அண்டர்கள் போற்றும் ஐயனைப் பணிந்து
சித்தி விநாயகர் சிந்து யாத்திரை
பிள்ளையாரென பெயரும் சூட்டி

தக்கபுகழாவ தகுவிழா வமைத்து
எக்காலத்துமிவ்விழா நிலைத்திட
பக்குவம் செய்து பல்வகை வாத்தியம்
தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
தம்மோடு வந்த தமதுறவினரை
செம்மனதுடனே திருக்கோயிற்பணி

புரியச் சொல்லி பூமி பகிர்ந்து
துனித்தனியளித்து தான் வணங்கி வந்த
துங்க வேலினையும் சாமிக்களித்து

முங்கள கீதம் பா மகிழ்வாய்ப் பாடி

ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென
சீர்பாததேவி யென் திருப்பெயர் சூட்டி
சீர்பாத குலம் சிறந்து விளங்கிட
பேராக வென்னாளும் பெருகி வாழ்ந்திட

ஆரவிந்த மலரும் அழகுசெங் கோல்கொடி
துரமாய்ப் பொறித்த தனிவிரு தேந்தி
அரசகுலமென அன்பாய் வாழ்த்திட
வாழ்த்தி நல்லாசி வழங்கவே பாலசிங்கன்
தாழ்த்திச் சிரமது தான் பணிந்தனரே 

சாசணம்
கிண்ணறையன் வெளி கீற்றுத்துண்டு
மல்வத்தை வெளி மல்வத்தை குளம்
தரவை முன்மாரி சரிசம மாகிவிடும்
கரந்தை முன்மாரி கனசிறு நிலங்கள்
நரசிங்க னென நற்பெயர் பெறும்
வால சிங்கனுமே மானியமாக
சாசன மெழுதி சகலருக்குமீந்தான்

02.திருகோணமலைச் செப்பேடு
திருகோணமலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான விடயங ;கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பான பல சிறப்புக்களை திருகோணமலைச் செப்பேடு பின்வருமாறு விளக்குகின்றது.

திருமருவு காட்டுமாவடி பெருந்துறை சிந்த
உத்தர தேசமும்
செப்ப முடனேயுறைந் தொப்பித மிலாமலே
செகமீது வரு தீரனாம்
தருமருவு தெரியலவர் கொடி பெருமை தவள நிறத்
தகமிவை தனிவிளக்கு
தகமை பெறு பூனுலுடன் கவச குண்டலஞ்
சரசமலர் முரசாசனம்
அருமைசெறி ஆலாத்தி குடைதோரணமோடரிய
மதில் பாவாடையோன
அரசியின் குலமென அவள் நாமமே பெற்று
அன்று சீர்பாதமானோன்
உருமருவு தரையினில் அரிய புகழ்செறி
உலகுமகிழ் மகிமையுடையோன்
உரை விருது தனையுடைய ஆரியநாடு திரு
வெற்றியூரரசு புவிவீரனே.

03. திருக்கோயிற் செப்பேடு
திருக்கோயிலில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான செய்திகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பாக விளக்கும் திருக்கோயில் செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.

திருவருள் கயிலைச் சிவனரள் புரிய
மருவளர் ரிலங்கை மன்னனாம் வால
சிங்கனென்னும் சிறந்த பேருடையான்
சித்து வித்தையில் செகமெச்சிய தீரன்

கயிலை ஞானம் அறுபத்து நாலும் கற்றுத்தேறினோன்
இருக்கு யசுர் சாமம் அதர்வமெனும்
வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன்
குமண குளிகையின் கார சக்தியால்
நூன தேசவள விகற்பங்களை
நன்றாய் அறிந்தோன் ஈழதேசமெனும்

இலங்கா புரிக்கு இராச தானியென
கண்டிமா நகரை கனம் பெற வகுத்து
செங்கொல் செலுத்தி தேசத்தை யாளுகையில்
மன்னனு மப்பொ மணஞ்செய்யக் கருதி

துன்னு திரைகடல் துரிதமாய் தாண்டி 
மன்னு சோழன் மாதவப் புதல்வியை
மணமாலை சூட்டி மகிழ்ந் திருக்கையில்
இராசனும் தன் பவனாகிய ராணியாம்
அம்மா ளுடன் சனங்களையும் சேர்த்து
சந்தோச மாக தென்னிலங்கா புரி

சேர விரும்பி ஆரியநா ட்டு 
ஆந்தணர் தம்மில் அச்சுதனையங்கார்
ஆவர் மனைவி செந்திரு மாது
தேவியா ருடன் திருவெற்றி யூரின் 
சுpவனடி மாறவ சந்திர சேகர
சுமய தீட்சதர் தையலாள் பார்வதி
குட்ட மாவடி கண்ணப்ப முதலி
முத்து நாயக்கன் முதலியோருடன்

குடி மக்களை கூட்டிச் சேர்த்து
கப்பலோட்டக் கைதேர்ந் தவரில்
சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி
இவர்களை யேற்றி இராசனும் மிராணியுமேறி
தென்னிலங்காபுரி திசை நோக்கி வருகையில்
திருகோணமலை திரைகடல் நடுவில்

கட்டிய தன்மையாய் கப்பலும் நின்றது
நின்றிடும் கப்பலை கண்டது மரசன் 
காரண மேதென கண்டறி வீரென
ஏவ லாளர் இறங்கிப் பார்க்கையில்

ஐந்து கரமும் யானை முகமும்
அங்குச பாசமும் தாங்கிய கையுடன்
எங்கள் பிரான் எழுந்தரளி யிருக்கின்றாரென
அவ்வரை கேட்டு அரசனும் திகைத்து
அந்தணர் தங்களை அன்படன் பார்த்து
ஐயனே நீங்கள் ஆழியில் இருக்கும்
மேய்யனை கப்பலில் விரைவுடன் சேரென
ஆவ்வார்த்தை கேட்டு அந்தண ரானொர்

கண்ணீர் சொரிய கசிந்த மனதுடன்
வெள்ள மதம்பொழி வினாயக பிரானை 
உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று 
கணேசனை வாவென கைகூப்பித் தொழ

அவ்வுரு வாகும் ஐங்கரத் தண்ணல்
திருவடி தன்னை சீக்கிரம் காட்ட 
கடலில் இருந்த கருணாகரனின் 
பாதார விந்தம் பற்றிச் சேர்த்தனர்

பற்றிய பொழுது பாராளு மன்னன்
சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி
ஐந்து கரனே இச்சிந்து யாத்திரையில் 
ஊன்திருவடி காண என்தவம் புரிந்தோம்
எத்தினோம் என்று இறைஞ்சிப் பணிந்து
கருணா கரனே இக்கப்பலானது  

கண்டிமாநகர் கரையை அடைந்தால் 
ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி  
பூசை செய்விப்பேனென பூபதி போற்றினான்
இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க
செவ்வாய் மடலாள் சிரசில் கைகூப்ப 

கணேச னருளால் கப்பலுமோடி 
சம்மாந்துறை சார்ந்திடு நகரம் 
வீரர்முனையென விளம்மிய திக்கரை 
கப்பல் செர கண்டு எல்லோரும் 
கப்பலை விட்டு கரையில் இறங்கி

தச்சர் சித்தர் தட்டார் முதலிய 
குடி மக்களை கோவு மழைத்து
ஐங்கரன் கடவுளுக்கு ஆலய மொன்று
சீக்கிரம் அமையென செலவு கொடுக்க 

அரச னுரைப்படி அலயம் அமைத்தார்
அந்தண ராதியோர் அபிசே கித்து
விநாயகர் பெருமானை வீழ்ந்தடி பணிந்து
கோமா னுரைப்படி கோயிலுள் வைத்தார் 

கண்டி யரசன் கணேசப் பெருமானை
சிந்த யாத்திரையுள் திருவடி கண்டதால் 
சிந்த யாத்திரைப் பிள்ளையார் நாமத்துடன்
நித்திய பூசை நியமமாக செய்து
விநாயகர் ஆலயம் விளங்கிடும் பொருட்டு 
செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும்

தேவால யத்தின் திருப்பணி சாமான் 
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
அந்தணர் தங்களை அரசனழைத்து
பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
சீர்பாத தேவியின் திருப் பெயராற்
சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி

அரசர்க்கும் தேவர்க்கும் அரும் விருந்தான
வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து
வணிகர் தம்மையும் வரும்படி செய்து
இரு சாதியாரும் இசைந்தெக் காலமும்
ஆட்சி புரியுமென்று ஆசீர் வதித்து

எழுந்தைப் பரராசன் இவர்களுக் கீந்து
குடி மக்களால் கோயில் சிறக்க 
சாதிக் காணிகள் சகலருக்கும் கொடுத்து
செங்கோல் வேந்தனும் தேவியுமாக 
கண்டிமா நகரை கனம்பெற வடைந்தார்

04.கொக்கட்டிச்சோலை செப்பேடு
கொக்கட்டிச்சோலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான கொக்கட்டிச்சோலை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.

துறைபோர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன் காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழச்சி குடியேழ்காண்
வரையாக இவர்களையும் வகத்து வைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
திரையகழ் சூழ்புவியரசன் சேர்த்து வதை;து
சீர்பாதமென்று செப்பினானே


05. துறைநீலாவணைச் செப்பேடு
துறைநீலாவணையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (இலங்கை நூதனசாலையில் பணியாற்றிய திரு எம். டி. இராகவன் என்பவர் இச்செப்பேட்டினை நூதனசாலையில் சேமித்ததுடன் 24.10.1953ம் ஆண்டு Spolia Zeylancia Vol.27 Part-I எனும்   நூதனசாலை வெளியீட்டில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் குறிப்பிட்டுள்ளார்) இவ்வாறான துறைநீலாவணை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது. 

பரத கண்டத்தில் பண்புடைய அரசராய்
தரமுட னாண்ட சற்சன சோழன்
தவப்பு தல்வியாக தரையினில் செனித்த
நவமணி நேரும் மாருதப் புரவீக
வல்லிதன் குதிரை வதனம் மாற

எல்லையிற் தீர்த்தம் இந்திய முழுவதும்
படிந்து திரிந்து பயனில தாக 
வடிவேற் பெருமான் வைகிய கதிரை
சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென
மனறலங் குழலி வந்தனழ் லிலங்கை
கந்தன் கழலடி காரிகை வணங்க
விந்தை யாக விரும்பும் நாகநன்
நாடதை கண்ணி நகுலநன் மனைவியின்

மாடே தெற்காய் மல்கும் நதியில்
முழுகிட வுந்தன் முற்பக வினையால்
தழுவிய குதிரை சாயல் தீர்ந்து
விளங்குவா யென்று மெல்லிய கனவில்
உளமதுருக உவப்புடன் கண்;டு

கீரி மலையை கிட்டியே செல்வி
தீரினில் படிய நீத்தது மாமுகம்
அச்செயல் தன்னை அறிந்திடு மாது
மெச்சிட ஒற்றரை விரைவினிற் றான்
உச்சிதமாக உவப்புட னனுப்பினள்

அச்சம தில்லையென அரசன் விருப்புடன்
கந்த னுருவக் கனகச் சிலைதனை
விந்தைய தாக விரைவுட னனுப்ப
கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு
மெச்சிட ஒற்றர் விட்டனர் படகை
அவ்விடந் தனில் ஆயிழை வந்து
செவ்வை சேர் காங்கேயன் திருவு வந்தனை
நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு

தகைமைசேர் கோயில் தையலாள் இயற்றி
கொடித்தம்பம் நட்டு குற்மில் விழாவை
துடியிடை மங்கை சோர்வுறச் செய்து
காரண நாமம் களறின ளப்போ

பாரதி லென்னை பற்றி தீய
மாமுக வடிவம் மாறின தாலே
மாமுக னுறைவத மாவிட்ட புரம்
காங்கேய னுருவது கரைசேர் இடம்
காங்கேயன் துறையென கழறியே மீண்டு
தாய் நாடேக தையலாள் இருந்தாள்


அழகர் படவு அடங்கலும் அம்மை
ஐங்கரக் கடவுட் ஆலயம் அமைத்து
துங்க முடனே சொல்லருள் நிதியும்
கிண்ணற யம்வெளி தரவை முன்மாரி
தண்ணிய மல்வத்தை குளமும் வெளியெனும்
செந்நெல் காணியும் சேயிழை யுதவி
விழாக் கொண்டாடி விருப்புட னங்கு

நாளும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந் தம்கொடி
விருதென வீந்து விருப்படன் தேவியின் 
திருபெய ரென்றும் மறவாது வழங்க 
சீர்பாதத் தோரென சீரிய நாமம் 
போபெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி
கோயி லூழியம் குறைவிலா தியற்ற 
ஆயநான்னு மரபோர் ஆணையிற் படிந்து

தூன்துதி வேலை தரணியிற் துதிக்க 
புhன்மொழி யீந்து பத்தா வுடன்
கண்டியினை அடைந்து கருணை ததும்ப
அண்டிய பொருட்கள் அன்பாய் அனுப்பினாள்
தாய்நாடு சென்று தவமணி யனையாள்
ஆயதன் மாளிகை அமர்ந்தன ளாக
அரசியின் கட்டளைக் கமைந்து நடக்க

வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவ 
தங்க வேலதை தண்ணளி யுடனே 
மங்காச் சிந்தன் வலுவுடன் எடுத்து
வடக்கை நோக்கி வந்தோர் இடத்தில் 
திடமுடன் தில்லை மரத்தில் வைத்து 
அங்குள பதியின் அமர்ந்தேர்க் குரைத்து


துங்கமுட னவர்களை துணைவராய் கொண்டு
கனகவேற் பணியை களிப்புட னெடுத்து 
மனமுடன் கொத்து மண்டப மமைத்து
தில்லைக் கந்தனென திருநம மிட்டு
வல்லை மற்றிடம் வந்தோர் தமையழைத்து
உரிமை உங்கட்கு உளதென் றேதினான்

வரிபடர் வழியாய் வந்தநாள் முதலாய்
கந்தனுக் கினிய கடிமலர் தூவலும்
வந்தவர் பூசையை வழிகொடு நடத்தலும்
திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே

சீர்பாததேவியின் பேரால் திகழு மரபினர்
எல்லிடை யெண்ணி புதுவுயர் மரபோர்
வாழும் போதினில் வகுத்தார் மரபோர்
கேழும் யாரெனக் கிளத்து மிங்கு
சுpந்தாத்திரன் சீரிய காலதேவன் காங்கேயன்
நுரையாகி வெள்ளாகி முடவன் பழைச்சி 
படையன் பரதேசி பாட்டு வாழி 
உடைய னருளினன் உத்தம ஞானி
ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி 
வாகு மருபுடன் வதியச் செய்தனர்

நான்கு வருணமும் நலமுடன் பூனூல் 
தான் மார்பி லணியும் தன்னை யுடையார்
வில்வீர ரன்றி வேறோர் பூனூல் 
இப்புவி தனில் இடாரென மதித்து 
பூனூல் அணிந்த பொற்புறு அரசரை
அந்நூல் அணிந்த அந்தண ரென்று 
கூறுவ தன்றி குவலய மதில்
அரசியின் குலமென் அழைப்பது சாலும்
தரமுறு செங்கோல் தகைமைக் கொடி
அரவிந்த மலரும் அமைந்த மையால்

மங்கலப் பொருளாய் வழங்கிடு மிருகையும்
துங்கமுடன் பெற்று துலங்கவே 
அரசர்க் குரிய அறுதொழில் தவழ
மரபுட னாற்றி வரவ தென்று 
மன்னியே வாழும் சீர்பாதத் தோர்
மனுகுலமென வகுத்தார்.

மட்டக்களப்பிலே வாழ்கின்ற பல் வேறு சாதிகளின் மத்தியில் சீர்பாதகுலமும் சிறப்பானதொரு குலமாக பல்வேறுபட்ட நற்பண்புகளுடன் விளங்குகின்றது. சிறந்த வரலாற்றினையும் அதற்கான தெளிவான ஆதாரங்களையும் கொண்டுள்ள இக்குலமானது பரந்துபட்ட மக்கள் சமுதாயத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாறான சீர்பாதகுலம் தொடர்பான தகவல்களை வழங்குகின்ற வகையில் சீர்பாதகுலச் செப்பேடுகள் காணப்படுகின்றன. இவை இந்நாட்டின் தொல் பொருள் சின்னங்களாக இலங்கை நூதனசாலைகளில் பேணப்பட்டு வருகின்றன. அத்தோடு காலத்துக்கு காலம் அது தொடர்பான நூல்கள், கட்டுரைகளும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீர்பாதகுல ஆராட்சியில் ஈடுபட்டு அதன்புகழை உலகெங்கும் பறை சாற்றிய பெருமை தமிழ் அறிஞர் அருள் செல்வநாயகம் அவர்களுக்குண்டு. சீர்பாதகுலம் பற்றிய கட்டுரை  அருள் செல்வநாயகத்தினால் எழுதப்பட்டு சென்னை மாநகரில் நடந்தேறிய 2வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முதல் நாள் அன்று அவரால் படிக்கப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டையும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பரிசையும் பெற்றுள்ளது. பின்னர் அக்கட்டுரை “சீர்பாதகுலவரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டமை    சீர்பாத மூகத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் அருள் செல்வநாயகத்தின் விருப்பினை நிறைவு செய்யுமுகமாக எம்.கருணைரெத்தினம் அவர்களால் குருமண்வெளியில் சீர்பாததேவி அறநெறிப்பாடசாலையில் சீர்பாததேவிக்கு சிலை வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குருமண்வெளியில் வைக்கப்பட்டுள்ள சீர்பாததேவி சிலை

இவ்வாறான சிறப்புக்கள் பொருந்திய சீர்பாத சமுகத்தினரையும் அதன் புகழையும் மாசுபடுத்தும் நோக்கோடு சில எழுத்தாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் வரலாற்றிலிருந்து முரண்படுவனவாகவும் உள்ளன. சைவப் புலவர் எஸ். தில்லைநாதன் அவர்கள் தன்னுடைய மட்டக்களப்பில் இந்தக் கலாசாரம் என்கின்ற நூலில் சீர்பாதகுலம் பற்றி குறிப்பிடுகின்ற பகுதியிலே சீர்பாதர் தொடர்பான தவறான கருத்துக்களுக்கு மறுப்புக்களை ஆதாதரபூர்வமாக வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது