Sunday 24 October 2010

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்

கதவோரம் தாழ்வாரம் அடுப்படிச் சாம்பல் மேடு.. என

சுருண்டு கிடந்த நாய்கள்

ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன



ஒன்றைச் சினைப்படுத்த..



தமக்குள் தாமே தம்மை முறைத்தும்

தமக்குள்ளே தம்மையே கடித்தும்

ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்

முதன்மைப்படவும் முதலில் ஏறவும்



போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்

தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்

அதற்காய்



முழுவதையும் இழந்தாயினும் புணர்வது

எனவும் போல

தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்

குறிகள் விறைத்து குமையும்

ஒன்றையே புணர.



சினைக்குள் சாத்தியம்

நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ

குரைக்கக் கூடியதாகவோ

உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ

வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ

சில நாய்கள்.



நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.



இனியவை விரும்புவதும் ஏற்பதுவும்

எவரும்

பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்

எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.



ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்

எலும்பு மீதமாக இருக்கலாம்.



இந்த நாய்கள் காத்திருக்கும்.



சொச்சமாகவேனும் எதை வீசினாலும்

கவ்விக் கொள்ளும்.

விருந்தெனச் சண்டையிட்டு

அதையும் சகதியில் வீசும்.



பின்வீராப்போடு வெறுங்குடலைக் கழியும்.



கடைசியில் எச்சிலூறி

எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.



நாய்கள்.



வேட்டைப் பற்களிருந்தாலும்

விரல் நகம் நீண்டிருந்தாலும்

அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்

எலும்புகள் தானென்றில்லை

எது கிடைத்தாலும்



நாக்கொழுகித் தின்னும்.



தமக்குள் தாமே முந்தும்..கடிக்கும்..

இவை

நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்.



இனி நாய்கள் மட்டுமே.


Sampur Vathanaruban

Millennium old Tamil inscription found in Trincomalee

Millennium old Tamil inscription found in Trincomalee


A stone slab having a Tamil inscription, clearly in the alphabet of the Chola times, was found in Trincomalee while digging for cricket stadium construction work recently. The land where it was found is a part of the esplanade, on the right side of the Koa’neasvaram Road leading to the Siva temple inside Fort Frederick and is adjacent to the bay where the temple’s Theerththam (water cutting) ritual is held. Sometimes back, a Buddhist Vihara and another structure called Sanghamitta Buddhist Rest were constructed at this place. The inscribed slab was taken into possession by the Trincomalee police and was sent to the Department of Archaeology in Colombo.

Trinco Chola inscription
The inscribed stone slab having a perforation in the middle


The construction work for a modern cricket stadium in the esplanade was financed by the Provincial Governor’s Fund.

Trinco Chola inscription
The Tamil script of Chola times seem clearly in the inscription
The construction work in the land has been suspended by the Department of Archaeology.

The inscribed stone slab has a large perforation at the centre reminding of anchors and sluice-gates.

Academics are concerned about the safe custody of the inscription with the Department of Archaeology.

As there are no Tamil officials or no Tamil epigraphists in the Department of Archaeology, academic circles expect estampages of the inscription to be sent to relevant scholars as early as possible by the Department of Archaeology of Sri Lanka, for speedy dissemination of knowledge about the inscription.

Trinco Chola inscription
Details of the left-side of the stone slab

Friday 15 October 2010

மறுபடியும்

ஆண்டு ஒன்று
ஆகவில்லை.

இன்று
நியாயம் பற்றி
பேசுவதற்கு
ஏது இடம்?

நியாயங்கள் புதைக்கப்பட்ட
குழியில்
நிமிர்ந்து வளர்ந்திருக்கு
அநியாய மரங்கள்.

விருட்சமாகி
வேரூன்றி
விழுதுகளுமல்லவா விட்டுள்ளன.

சொந்தங்கள் என்று
சொல்வதற்கும்
உறவுகள் என
உணர்த்துவதற்கும்
காலம் நேரம் பார்த்து
இராகு காலம் விடுத்து
மரண யோகம் தவிர்த்து
சுபநேரம் தேடி
சொல்லவேண்டியுள்ளதே?

தவறுதலாகவேனும்
பஞ்சாங்கம் பார்க்காது தொடங்கினால்
எடுத்த காரியம் எதுவென்றாலும்
நொடிப்பொழுதில்
முடிந்துவிடும்.

வீட்டு வாசலில் நின்று
உள்ளே செல்லாதே!
என மறுக்கப்படும்.
நம் ஊர்க் காற்றைக் கூடஅருகில் நிற்பவருக்குத்
தெரியாமல்  சுவாசித்துக்கொள்.

அறிந்தால்

உள்ளே இழுத்த காற்று
வெளியே வருவது சந்தேகம்.

காரணம்,
 சுபநேரத்தில்
நீ சுவாசிக்கவில்லை.

நீ வளர்த்த
பசுக்களைப்பார்.
ஆனால்
அத்தோடு திரும்பிவிடு.
மீண்டுமொரு தடைவ
பார்க்காதே.
பார்த்ததால்
உனக்குச் சகுனம்
பிழைத்துவிடும்.

ஓடித்திரிந்த
உன்
விளையாட்டு முற்றம்
புல் பூண்டுகளால்
மூடியுள்ளது
பி;ச்சைக்காரனின்
முகத்தை மூடிய
தாடியைப்போல.

சவரம்செய்ய
நினைக்காதே.
சகுனம் பிழைத்தால்
சவரக் கத்தி உன் உதட்டை
வெட்டிவிடும்.

இப்போதெல்லாம்
இருட்டுக்கள் என்பதே
மறந்தவிட்டது.

வானத்தில் நட்சத்திரங்கள்
பார்த்து
        நித்திரைக்குமுன்
நிலாவைக் காட்டி
உணவூட்டும்
அன்னையின்
எண்ணங்களெல்லாம்
மறுக்கப்பட்டுவிட்டன.

சேவல்
அதிகாலையில் கூவுகின்றது.
ஆனால்
கோழியின் கூவலாகத் தெரிகிறது.

உயர் கல்விக்காய்
வாழ்வில்
கால் நூற்றாண்டு
கரைந்தபோது
வெட்டுப்புள்ளி
வீழ்த்திவிடுகிறது.

எழுந்துநின்று
இனியென்ன செய்வது?
வேலைக்காவது
போவோம் என்றால்
நீண்ட வரிசை நெடுநாளாய்க்
காய்ந்த நிலையில் நிற்கிறது.

தலையில் கறுப்புத் தொப்பி
கையில் பட்டச் சுருள்.

சரி

மண்வெட்டியைத் தூக்கி
வயலுக்குச் செல்வோம் என்றால்…
கௌரவம் கலைக்கிறது.

ஓடியபோது
உனக்கேது காணி

அது…… அது….

அந்தப் பக்கமல்லவா?
திரும்பிப்போ.
என்கிறது மனசாட்சி.

இனிமேல்
கிளிக்கூடுகளும்
மைனாக் கூடுகளும்
செய்பவர்கள் வேண்டாம்.

அவற்றை
அடைத்துவைத்ததால்
அவை போட்ட
சாபங்கள்
பலிக்கத்  தொடங்கிவிட்டனவோ?

மாடுகளை
வண்டிலுக்காகவேனும்
அடிமைப்படுத்தாதே.

அவைகளும் சொல்லியிருக்கும்
தங்கள் வேதனைகளை.

கடற்காற்று  வேண்டாம்.
ஆற்றுக்காற்றே போதும்.
அதில் சுவாசிப்போம்.

சுறா மீன்களும் பாரை மீன்களும்
வேண்டாம்
யப்பானும், செல்வனும் இருக்கட்டும்.

தென்னங் கன்றுகள் நடவேண்டாம்.
பாதியில் பன்றிகள்
பதம் பார்த்துவிடும்.

கடி வெடி  வைத்தால்
முள்ளம்பன்றிகள்
பொறுக்கி மூலையில்
குவித்துவிடும்.
கழனியை ஊற்றாதே
கறி சமைக்க உதவும்.

வாழ்வில்,
கல்வியில்,
தொழிலில்,
உணவில்,
பேசுவதில்,
நடப்பதில்,
சிரிப்பதில்,
கதைப்பதில்,
நியாயங்களைக்
கேட்க நினைக்காதே.

இலவசமாக
எயாடெல் சிம் மட்டும்
ஏராளம் வாங்கலாம்.
இங்கு மட்டும்
அவை
மறுக்கப்படாது,      உனக்கு
தேசிய அடையாள அட்டை
இருந்தால்மட்டும்.

அட்டை இல்லையெனில்
அங்கு உன் நியாயங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாதவைகளல்லவா?

சளைத்துவிடாதே.

விழுவதெல்லாம்
மீண்டும் எழுவதற்கே
அன்றேல்
மரத்திலிருந்து விழுந்த
ஆலம்வித்து
மீண்டும் விருட்சமாகுமா?

எழுந்திரு

நியாயங்கள் என்றும் அழியாதவை.
கிடைக்கும்வரை சோராதே.


தூக்கணாங்குருவிக் கூட்டை
ஒருமுறை
சிந்தித்துப்பார்.
அதனால் முடியுமென்றால்
ஏன்
உன்னால்………

குரங்குகள் சிதைத்துவிடுமென்று
அவை
கூடுகட்டவில்லையா?
சிக்கலை விடுவித்துப்பார்.

திருப்தி தோன்றும்.

உன்னால் முடியாதது
ஏதுமிருக்காது.
இது நெப்போலியன் கூற்று.

“தர்மத்தின் வாழ்வுதனை
சூது கௌவும்     மறுபடியும்
தர்மமே வெல்லும்”



சேனையூர்.இரா.இரத்னசிங்கம்
2010-10-11

கவியல்ல நிஜம்

கவியல்ல  நிஜம்

பிரிவு……
உன்னையும்,  என்னையும்  விட்டு
உலகையும்,  உடலையும்  விட்டு
மற்றெல்லாம்   பிரிவல்லவே.

ஆடைபிரிந்து அம்மணமானதும்,
அந்தரங்கம் பிரிந்து அவமானம் சுமந்ததும்
பிரிவென்றாகுமோ?

முன்னம் பள்ளி பிரிந்தே
முதநிலைப் பள்ளியாகி
அது பிரிந்தே உயர் பள்ளி ஏகி
அழகிய பிரிவு வந்தே
பல்கலைக் கழகமாக…
பட்டங்களும், பதவிகளும்
பாராட்டுதல்களும் பலவும்
ஒன்றன் பிரிதலும் ஒன்றன் வருதலுமே
உலக இயல்பென்றாகும்.

நீ உலகைக் காணலாம்
உடலைப் புழுவாய் நெளித்தே ஊரலாம்
மெதுவாய் நிமிர்த்தி நழுவலாம்
இருந்தும் நின்றும்
விழுந்தும் எழுந்தும்
நடந்தே அடி பிரிக்கலாம்.
பின்னே கால்
பிடரி பட ஓடலாம்
நீ………
கருவுலகை விட்டு
பிரிந்த பின்னாலே.

மங்கையாய்ப்  பூத்தால்
ஓர் மாலையாகிடும்   பூ
மணமாகிடவும்  இரு
மாலையாகிடும்   பூ
மடியினில்  கிடத்தியே
மாரடித்து  மண்ணில்
மறைத்திடும்  உடலை
மூடிடும் மாலை   பூ

மரத்திலும்  செடியிலும்
கொடியிலும்  காம்பறுந்து
கைப்பிரிந்தே
நூலேறி பிணைந்ததாலல்லவா?

புதிதாயோர்  பூமி  காண்பாய்
புத்தகமாய்ச்  சரிதமும் காண்பாய்
கனமாய்க்  கோடி  கொள்வாய்
உன் பாதச்  சுவடுகள்
யாரைத்  தொடர்ந்தோ
பச்சை  மண்ணைப்  பெயர்த்தடி
பிரிந்ததாலே.
இழுத்து  விடும்  மூச்சும்
நில்லாமல்  ஓடும்  காற்றும்
இல்லாது  நீ  இருந்ததுண்டா?
சொல்லாற்  பறிதலும்
சொல்லும்  பொருளும்
பாட்டுமென்றாகியே
பின்னெல்லாம்
கடலும்  காடும்   வானும் வரைந்திடவும்
வளியதன்   பிரிதலாலேயாம்.

உன்னைப்  பார் - உன்
உருவம்  பார்
ஒரு  நொடி  உன்
கண்ணைக்  கடந்துமே
கருவி பிரிந்து
ஒளி பிடித்த புகைப்படமே அது.

பாடு  பேசு  பலமாய்த்  திட்டு
ஓ… என்றே அழு
ஆ… என்றே விளி
ஈ… என்றே சிரி
ம்… என்றே நீ ஊமையாய்க் கிடக்க
இவை  பெறுமா?
உன்
உதடுகளின்
உண்மைப்  பிரிவில்
உதிப்பவைதான்  இவை.

ஆயிரம்  பக்கமாகலாம்
அற்புதக்  கதையுமாகலாம்
ஆக்கியோன் படைத்து
அழுக்குப் படாது
அட்டைக்குப் பூட்டிட்டு
அடுக்கி வைத்திருக்கும்வரை அது
அசையாத உன்
அனுங்காத உள்ளம்போன்றதுதான்.
பக்கம் பிரித்துப் படிக்கையில்
சொற்கள் பிர்த்தே அறிகையில்
வரிகள் பிரித்தே தெளிகையில்
ஆயிரம் பக்கங்களும்
அற்புதக் கதையாகலாம் நாளை
உன் உள்ளங் கவர்ந்த
அதிசயக் காவியமாகலாம்.

முகிலைப் பிரிந்து மழையாவதும்
மூச்சைப் பிரிந்து உயிராவதும்
நீரைப் பிரிந்து அலையாவதும்
நிலத்தைப் பிரிந்து சிலையாவதும்
உன்னை நீ பிரிந்தே ஓர்
உயர்வாவதும்
உலக நியதி.

செயலற்றநிலை பிரிவல்ல. பிரிந்தே  இருப்பதும் செயலல்ல.
சேர்ந்தே இருப்பதும் செயலல்ல.
செயலற்ற நிலை சேர்க்கையுமல்ல.

பிரிந்தே கிடப்பது
செத்த நிலை.
சேர்ந்தே இருப்படுது அதே நிலை.

ஆக…
சேர்வதும், பிரிவதுமே
வாழ்க்கையில்
தத்துவமும்
நிஜமும்.

பிரிவோம்,
பின்னர் சேர்வதற்காய்.

பிரிகின்றீர் பிரிகின்றீர்.
பின்வந்து சேருங்கள்

பூக்களாய் பிரியுங்கள்
மாலையாய் சேருங்கள்
பக்கமாய்ப் பிரியுங்கள்
பாடமாய் ஆகுங்கள்.
கருவாய் பிரியுங்கள்
உயிராய்  உலவுங்கள்.
காற்றாய்ப் பிரியுங்கள்
மூச்சாய்  சேருங்கள்.
கல்லாய்ப் பிரியுங்கள்
சிலையாய் மிளிருங்கள்.
கலையாய்ப் பிரியுங்கள்
நிலையாய் ஆகுங்கள்
நிஜமாய்  வருவீர்கள்  என்றே
நானும் பிரிகின்றேன்…
மீண்டும் வருவதற்காய்.



கட்டைபறிச்சான் மதுரன்
2010.10.11

இலவங் கிளியும் நாங்களும்

இலவங் கிளியும் நாங்களும்

by Pathiniyan Sujanthan on 07 அக்டோபர் 2010, 17:24 க்கு
முற்றத்தில் பெருத்து வளர்ந்த
இலவை மரத்தில்
காலங்காலமாய்க் கிளிகள்
இலவம் பழம் தின்ன……!

அன்று
தாய்க்கிளி காத்திருந்து
ஏமாந்த போக
நேற்று மகள் கிளியும் ஏமாந்து போனது
அசட்டுத்தனமான நம்பிக்கையில்
 இன்று
மகள் கிளி பொரித்த குஞ்சுக்கிளி கிளையில்
நாளைக்காய்
கூட்டில்குஞ்சிக் கிளி பொரித்த முட்டை
இப்படியே தெடர்கிறது
கிளிச் சந்ததியின் இலவை காத்தல்………

நேற்றுத்தான் அறிந்தேன்
முப்பாட்டனும் பாட்டனும்
ஏன் அப்பாவும்
குந்தியிருந்த இலவை மரத்தின் கீழ்
நானும் இருப்பதாய்

நாளை
என் பிள்ளையும் குந்தியிருக்க முன்
இப்போதே சொல்லி வைக்க வேண்டும்
என் பாட்டன் முப்பாட்டன் கதையை அவனிடம்……

காணமல் போன கடவுள்கள்

காணமல் போன கடவுள்கள்

by Pathiniyan Sujanthan on 15 அக்டோபர் 2010, 17:20 க்கு


அமைதி உறைந்து கிடந்த
அன்றைய பின்னிரவில்
கடவுளைத்க் காலம் முழுக்கத் தேடி
தோற்றுப் போன களைப்பில்
வேருத்து விருவிருக்க
பிரமாவும் திருமாலும் என் கனவில் தோன்றினர்………


கடவுள் இல்லாத உலகில்
தேடுதல் பொய்த்துப் போனதால்…?
இருவரும் நிறையக்கதைத்து
இறுதியாய் ஒரு முடிவெடுத்தனர்.
இலங்கையில் காணாமல் போனோரை
பன்றியாயும் பறவையாயும் மாறித்தேடுவதென்று…!


மகிழ்ச்சியில்
அழகுத் தூக்கம் கலைத்து
விழித்துப் பார்த்தேன்
இருவரையும் காணவில்லை…..!