Thursday 26 April 2012

திமிலைத்துமிலன்


திமிலைத்துமிலன்
திமிலைத்துமிலன் (சின்னயா கிருஷ்ணபிள்ளை) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். மூத்த கவிஞர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், ஓவியர், ஆய்வாளர், நாடகாசிரியர். இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார்.
குடும்பவிபரம்

இலங்கையில் மட்டக்களப்பில் திமிலைத்தீவில் பிறந்தவர். இவர் காலஞ்சென்ற கவிஞர்களான திமிலை மகாலிங்கம், திமிலைக் கண்ணன் ஆகியோரின் சகோதரர். இவரும் இவரது சகோதரர்களும் 1960 களில் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தவர்கள்.
விருதுகளும் பட்டங்களும்

இவரது கவித் திறனுக்காக இவர் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கவிமணி, கவியரசு, தமிழ் ஒளி, கவிதல பாஸ்கரன், கலாபூஷணம் ஆளுநர் விருது, கலைக்கழக விருது என்பன அவற்றுட் சிலவாகும். இவரது கவித்துறை ஆற்றலுக்காக 2009 மார்ச் 30 ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. கனடியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 2009 நவம்பர் 9 ம் திகதி நிகழ்த்திய இவரது பவள விழாவிலே இவருக்கு செந்தமிழ்க் கவிமாமணி பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. இவர் சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். ‘ஆனந்த விகடன்’ நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
ஓவியம்

இவர் ஈழத்துச் சஞ்சிகைகள் பலவற்றில் ‘கிருஷ்ணா’ என்ற பெயரில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்துள்ளார். வீரகேசரியில் 1950 களில் தாரா என் தங்கை என்ற கவிதைச் சித்திரத் தொடர்கதையை வரைந்துள்ளார். கண்ணாடியில் இவர் வரைந்த ஓவியங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் நடைபெற்றது.


வெளிவந்த நூல்கள்

நீரர மகளிர்
கொய்யாக்கனிகள்
நெஞ்சம் மலராதோ?
அழகுமுல்லை
மஞ்சுநீ மழைமுகில் அல்ல
எல்லம் எங்கள் தாயகம்
முத்தொள்ளாயிரம்
அணில்வால்
யாப்பும் அணியும்
தமிழ் இலக்கியம் கற்பித்தல்
திமிலைத்துமிலன் கவிதைகள் - காதல்
திமிலைத்துமிலன் கவிதைகள் - சமூகம்
பாவலர் ஆகலாம்
கருமணியிற் பாவாய்
ஈழத்துக் கல்விமரபில் எண்ணெய்ச் சிந்து
மேடையேற்றிய நாடகங்கள்

முத்தொள்ளாயிரம்
ஈடிபஸ்

இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன்




கிழக்கிலங்கையின் மூத்த தமிழறிஞர் இலக்கிய கலாநிதி வித்துவான் கமலநாதன்.கிழக்குப்பல்கலைக்கழகம் கலைகலாசார பீடத்தின் பரிந்துரையின் பேரில் இலக்கிகியகலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது.பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீளுருவாக்க முயற்சிகளுக்கு பக்க துணையாய் இருந்தவர் .வித்துவான் கமலநாதன் அவர்கள்.வித்துவான் என்ற பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்.சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் மூலம் விபுலானந்தரின் ஆக்கங்களை மீள்கண்டுபிடிப்பு செய்து வெளிக்கொணர்ந்த பெருந்தகையாளன்.இவரது மட்டக்களப்பு பூர்வசரித்திரம் என்ற நூல் கிழக்குமாகாண வரலாற்றின் திறவுகோல்