Thursday 3 April 2014

அன்புமணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி-01 கிராமத்தில் வசித்த நாகலிங்கம் அவர்கள் வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராவார். மட்டக்களப்பு ஆரயம்பதி இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார். இலங்கை நிர்வாகசேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவரின் மனைவி பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாரிய கல்லூரி ஆசிரியை. பிள்ளைகள்: நா.அன்புச்செல்வன், நா. அருட்செல்வன், நா. சிவச்செல்வன், நா. தீரச்செல்வன, நா. பொன்மனச் செல்வன், நா. பூவண்ண செல்வன்

1952ல் கல்வித்திணைக்கள இலிகிதராக தனது தொழிலை ஆரம்பித்து 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகப் பணிபுரிந்தார். ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களின் செயலாளராக பணியாற்றினார்.

இராசையா நாகலிங்கம் ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் இந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் 1954இல் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் இலங்கை வானொலி போன்றவற்றிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியவர்.

இவரால் இதுவரை சுயமாக ஏழு புத்தகங்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

இல்லத்தரசி (சிறுகதை) 1980 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 – அன்பு வெளியீடு
தமிழ் இலக்கிய ஆய்வு 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
 

அன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

மகோன் வரலாறு – தங்கேஸ்வரி
குள கோபடன் தரிசனம் – தங்கேஸ்வரி
நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர்
மேலும் கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-

சீ. மந்தினி புராணம் – வித்துவான் ச. பூபாலலிங்கம்
மாமங்கேஸ்வர பதிகம் – வித்துவான் அ. சரவணமுத்தன்
சனிபுராணம் – வித்துவான் அ. சரவணமுத்தன்
அன்புமணி அவர்கள் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலகட்டங்களில் சைவமாமணி விஸ்வலிங்கம் எழுதிய ‘மண்டூர் பிள்ளைத் தமிழ்’ எனும் நூலினையும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் சு. ஸ்ரீகந்தராசா எழுதிய ‘சந்ததி சுவடுகள்’ எனும் நூலினையும் ஆரையூர் நல். அலகேசமுதலியார் எழுதிய ‘ஆரையூர் கோவை’ எனும் நூலினையும் வெளியிட காரணகர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல இலங்கையில் மூத்த பெண் எழுத்தாளர் ந. பாலேஸ்வரி எழுதிய ‘தத்தை விடு தூது’ எனும் நூலினையும், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய ‘மக்கத்து சால்வை’ எனும் நூலினையும் மட்டக்களப்பு செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

அன்புமணியின் கலை இலக்கிய சேவையின் இவரால் வெளியிடப்பட்ட ‘மலர்’ இலக்கிய சஞ்சிகை ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை ‘மலர்’ பத்து இதழ்கள் விரிந்தன. ஈழத்து சஞ்சிகை வரலாற்றில், ‘மலர்’ கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.

அன்புமணியின் நாடகப் பணியும் குறிப்பிட்டுக் காட்டக் கூடியதொன்றாகும். கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல கல்லூரி காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நடிப்பு ஆர்வம் பிற்காலத்தில் இவரை ஒரு நடிகராக, நெறியாள்கையாளராக, நாடக ஆசிரியராக இனம்காட்டியது. இந்த அடிப்படையில் ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, ‘பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.

1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு ‘சாகித்தியமண்டலப்’ பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் ஜனரஞ்சகத் தன்மை பெற்றிருந்தது.

962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியதன் மூலம் தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு நடிகர், நெறியாள்கையாளர், நாடக ஆசிரியர் ஆகிய ‘அன்புமணி’ ஒரு நாடக விமர்சகருமாவார். அதுமட்டுமன்றி பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

‘தமிழ்மணி’ – இந்து சமய விவகார அமைச்சு – 1992
வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது – 2001
‘கலாபூசணம்’ – 2002
‘பல்கலை வித்தகர்’ – சிந்தனைவட்டம் 2008
இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன - See more at: http://www.arayampathy.com/news.php?id=2944#_

திருமலை தந்த மூத்த பெண் படைப்பாளி

காயத்திரி நளினகாந்தன்
அண்மையில் நாம் இழந்த ஈழத்து இலக்கியவாதி எழுத்தாளர் ந.பாலேஸ்வரி அவர்கள் பற்றிய சிறப்புப் பதிவுகள் ஈழத்து இலக்கிய வரலாற்றின் வளர்ச்சிக்கு பெரும்பங்களிப்பையும் ஈழத்து நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகவும் வாழ்ந்தவர்“தமிழ்மணி”யும்இசிறுகதைச்சிற்பியுமான அமரர் நல்லரெட்ணசிங்கன்; பாலேஸ்வரி ஆவார். .அன்னார் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 12 நாவல்களையும் படைத்துள்ளார்.1929.12.07 இல் அவதரித்த இவர் அந்நாட்களில் வீரகேசரி தினகரன் கல்கி குங்குமம் சுடர் மித்திரன் ஈழநாடு போன்ற பத்திரகைளிலும்இகோணைத்தென்றல் போன்ற பல சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்களை வெளியிட்டிருந்தார். திருக்கோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியராக உருவாகி திருக்கோணமலையின் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியதோடு திருக்கோணமலை விக்னேஷ்வரா கல்லூரியின் உதவி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார். அம்மையாரின் இலக்கிய பிரவேசமானது 1957 ஆம் ஆண்டு ‘வாழ்வளித்த தெய்வம்” எனும் சிறுகதையை தினகரன் பத்திரிகையில் எழுதியதன் மூலம் ஆரம்பமானது இவரது முதலாவது சிறுகதைத்;தொகுதியான “சுமைதாங்கி” 1973 ஆம் ஆண்டு வெளிவந்தது. வீரகேசரி சிந்தாமணி கல்கி தமிழின்பம் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஆறு கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ‘சுமைதாங்கி” “இது தான் உலகம”; “டெரலின்ஷேட்” “nஐந்தியின் தந்தி” ஆகிய ஆறு கதைகள் கொண்;ட தொகுப்பாக இது வெளிவந்திருந்தது. இதில் சுமைதாங்கி எனும் சிறுகதை மலேசியாவில் இருந்து வெளிவரும் “தமிழ்மலர்’பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டு பாரட்டு பெற்ற சிறுகதையாகும். இவரது கதைகள் இலங்கையில்மட்டுமின்றி இந்தியா மலேசியா பாரிஸ் முதலியநாடுகளின் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவந்தன. இதில் இது தான் உலகம் என்னும் சிறுகதை கல்கி நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்று பாராட்டப்பட்டமை இவருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது. மேலும் இவரது இன்னொரு சிறுகதைத்தொகுதியான “தெய்வம் பேசுவதில்லை”(2000) சென்னை காந்தளகம் பதிப்பாக வெளிவந்திருந்தது இச்சிறுகதைத்தொகுதியில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டு வரை பாலேஸ்வரி எழுதிய 29 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.”தொடுவானம”; “தெய்வம் பேசுவதில்லை” “வைராக்கியம்” “நெஞ்சில் நிறைந்தவள்” “போய்விடுங்கள்” “எழுதவேமாட்டேன்” என்பன மேற்கூறப்பட்ட தொகுதியில் அடங்கும் முக்கியமான சிறுகதைகளாகும்.சஞ்கைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த கதைகளை இவர் இதில் தொகுத்து வெளியிட்டிருந்தார். இவரது நாவல் இலக்கியப்படைப்புக்களை நோக்கும் இடத்து இலங்கையின் முதலாவது பெண் நாவலாசியரியர் என்ற பெருமைக்குரியவரான இவர் 12க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளமை குறிப்பிடதக்கது. இவர் “சுடர் விளக்கு”(1966) என்னும் நாவலை முதல் முதலில் வீரகேசரியில் எழுதியதன் மூலமாக நாவல் இலக்கியத்துறையில் தடம் பதித்தார். சுடர் விளக்கு(1966) பூiஐக்கு வந்தமலர் (1972) உறவுக்கப்பால்(1975)கோவும் கோயிலும் (1980) உள்ளக்கோயில் (1983) பிராயச்சித்தம் (1984) உள்ளத்தினுள்ளே (1990) தத்தை விடுதூது (1992) மாது என்னை மன்னித்து விடு (1993)எங்கே நீயோ நானும் அங்கே(1993) அகிலா உனக்காக(2002)நினைவு நீங்காதது(2003) ஆகியவை இவர் எழுதிய நாவல்களாகும். இதில் பூசைக்கு வந்த மலர் குறுகிய காலத்தினுள் மீள்பிரசுரம் செய்யப்பட்டமை இவருடைய நாவலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழக பெண் எழுத்தாளர்களான லக்சுமி சிவசங்கரி போன்றவர்களுடன் சமமாக மதிக்கப்படடுகின்ற ஈழத்துப்பெண்ணெழுத்தாளர்களில் முதலானவரும் முதன்மையானவருமான அம்மையார் அவர்கள்; தென்னிந்தியாவில் நாவல் இலக்கியத்தில் பெண்ணியம் பற்றிய பேசப்படுவதற்கு முன்னரே பெண்ணியம் பற்றி தமது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டிய அம்சமாகும் இவரது சிறுகதைகளும் நாவல்களும் இவர்காலத்து சமூகத்தின் வெட்டு முகமாக அமைந்த காதல் தியாகம் சமூகத்திற்கு தொண்டு செய்ய நினைப்பது தமது பிரதேச புலம் மற்றும் யுத்தத்தின் அவலம்இ மறுமணம் ஆணாதிக்கச்; சிந்தனை மற்றும் பெண் சுதந்தரம் போன்றவற்றை தமது இலக்கியத்தினூடாக பதிவாக்கியுள்ளதோடு சிறப்பாக “ஆசியNஐhதி” சிறுகதையின் மூலம் திருக்கோணமலை நகரில் நடந்த இனப்படுகொலையினை நாசுக்காகவும் புத்திசாதுரியமாகவும் ஆவணப்படுத்தியுள்ளமை ஆசிரியரின் புலமையையும் சாதுரியத்தையும் பறைசாற்றியுள்ளது மேலும் பாத்திரவார்ப்புக்ளிலும் யுத்தத்தின் கொடூரங்களை சித்தரித்துள்ளார் இது தான் உலகம் எனும் இவரின் படைப்பானது பல்கலைக்கழக மாணவர்களினால் ஆய்விற்குட்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடதக்கது. இவரது படைப்புக்களில் இவரின் ஆழமான அனுபவமும்; கலையுணர்வும்; இழையோடியிருப்பதை காணலாம். மேலும்; இலக்கியப்படைப்புக்களுக்காக பல விருதுகளையும் இவர் தனதாக்கி கொண்டார் குறிப்பாக 1992ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம் இவருக்கு “தமிழ் மணி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது 1999 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறுகதைச்சிற்பி கலாபூசணவிருது ஆகியவற்றுடன் 2010 இல் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய ‘தமிழியல் விருது” என்பன இவரை கௌரவித்துள்ளது. மேலும் அன்னார் இலக்கியத்துறையுடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது சமூகப்பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டமை இவரது சிறப்பாகும். இலங்கையில் 1947 முதல் மூத்த இசை வரலாறு கொண்ட திருமலை தெட்சணகானா சபையின் ஸ்தாபகர் இராNஐஸ்வரி அவர்;களின் சகோதரியும் ஆன இவர் அவரின் மறைவுக்கு பின்னர் 1981 ஆம் ஆண்டு முதல் தெட்சணகானா சபையின் தலைவியாக இறுதிவரை சேவை ஆற்;றினார். இவரது காலத்திலேயே தெட்சணகானா சபை பெருவளர்ச்சி கண்டது குறிப்பாக நிலையத்திற்கானகட்டிடத்தை பெற்றுத்தருவதில் அரும்பாடுபட்டு உழைத்தார்.பல வருடங்களாக திருகோணமலையின் இசை நடன ஆசிரியர்கள் பலர் இவ்நிறுவனத்தின் மூலமாகவே உருவாகிவருகின்றமை குறிப்பிடதக்கது. .மேலும் இவரது சகோதரனே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நேமிநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு ஈழத்தின் முதல் நாவலான மோகனாங்கியை படைத்த தி.த சரவணமுத்துப்பிள்ளையின் உறவினரான இவர் ஈழத்து பெண் நாவலாசிரியர்களில் முதன்மையானவர் என்பது சிறப்பான வரலாற்றுப்பதிவு ஆகும். இவ்வாறு பல சாதனைகளையும் சேவைகளையும் செய்த ந.பாலேஸ்வரி அம்மையார் அவர்கள் 27.02.2014 அன்று சிவபதமடைந்தார்.இவரின் இழப்பு இவரது கணவரான நல்லரெட்ணசிங்கன் அவர்களுக்கும் திருகோணமலைக்கும் மட்டுமின்றி இலங்கையின் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். இவரது மறைவை ஓட்டி இவரது ஆத்மசாந்தி பிராத்தனையும் நினைவுப்பேருரையும் எதிர்வரும் 30.03.2014 அன்று ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரியில் நடைபெற குளக்கோட்டன் இதழகம் திருக்கோணமலை தமிழ் சங்கம் மற்றும் தெட்சணகானா சபையும் இணைந்து நடைபெற்றது

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா எனும் சகாப்தம்: பாலநாதன் மகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட பாலு மகேந்திரா இலங்கை மட்டக்களப்பு அருகே உள்ள அமிர்தகழி கிராமத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த பாலுமகேந்திரா, பின் திரைப்பட ஒளிப்பதிவாளராக உருவெடுத்தார். புணே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பை முடித்தார்.
1973-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன் கலைப் பயணத்தை தொடங்கினார்  பாலுமகேந்திரா. "பனிமுடக்கு', "கலியுகம்', "பிரயாணம்' ஆகிய தொடக்க கால படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. 
பாலுமகேந்திராவுக்கு திரைக்கதை எழுதுவதிலும் அதீத ஆர்வம் இருந்தது. 1978-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் "கோகிலா' எனும் திரைப்படத்தை கன்னடத்தில் இயக்கி, ஒளிப்பதிவு செய்தார். தமிழகத்தில் கன்னட மொழியிலேயே வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழகத்தில் 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் கன்னடப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு திறனை கண்டு வியந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மகேந்திரனிடம் "முள்ளும் மலரும்' படத்துத்தில் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை சிபாரிசு செய்தார். 1978-ஆம் ஆண்டில் வந்த இப்படம் இன்றளவும் தமிழின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை என பல துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பாலுமகேந்திரா, பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில்  1979-ஆம் ஆண்டு "அழியாத கோலங்கள்' என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை தொடர்ந்து "மூடுபனி', "மூன்றாம் பிறை', "வீடு', "சந்தியா ராகம்', "வண்ண வண்ண பூக்கள்', "நீங்கள் கேட்டவை', "உன் கண்ணில் நீர் வழிந்தால்' "ரெட்டைவால் குருவி' "ராமன் அப்துல்லா', "மறுபடியும்', "ஜூலி கணபதி', "சதிலீலாவதி', "தலைமுறைகள்' என தமிழ், தெலுங்கு, கன்னடம் என 22 படங்களை இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்ற இயக்குநர்களின் உருவாக்கத்தில் தயாரான 28 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 
5 முறை தேசிய விருதுகள்: ரசனை மிக்க சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பல படங்களை இயக்கிய பாலுமகேந்திரா, தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை "கோகிலா', "மூன்றாம் பிறை' ஆகிய இரு படங்களுக்கும் பெற்றார். "வண்ண வண்ண பூக்கள்', "வீடு' இரு படங்களும் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பாலுமகேந்திராவுக்கு பெற்றுத் தந்தன. குடும்ப நலம் சார்ந்த சிறந்த திரைப்படத்துக்கான விருதை "சந்தியா ராகம்' தேடித் தந்தது.
இதைத் தவிர ஃபிலிம்பேர் விருதுகள், கர்நாடக மாநில அரசின் விருதுகள், கேரள அரசின் மாநில விருது, ஆந்திர அரசின் நந்தி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் இயக்குநர் பாலுமகேந்திரா.
சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என எழுத்துலகிலும் தன் கவனத்தை செலுத்தி வந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமாக வைத்து உருவான "கதை நேரம்' சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி பரவலான பாராட்டுகளை பெற்றது.
சினிமா பட்டறை என்ற பெயரில் சென்னை, சாலிகிராமத்தில் சினிமா குறித்த பயிற்சி பள்ளியை தொடங்கி ஏராளமான மாணவர்களை உருவாக்கி வந்தார் பாலுமகேந்திரா. பாலா, வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் என பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள், தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளிகளாக விளங்கி வருகின்றனர்.
கடைசிப் படம்: ஒளிப்பதிவு, இயக்கத்தில் மட்டுமே இதுவரை கவனம் செலுத்தி வந்த பாலுமகேந்திரா, முதல்முறையாக நடிக்கவும் செய்தார். இயக்குநர் சசிகுமார் தயாரித்த "தலைமுறைகள்' படத்தை இயக்கியதோடு, அதன் முதன்மை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் வெளிவந்த இப்படத்தின் கடைசி காட்சியில் வயோதிகம் காரணமாக பாலுமகேந்திரா இறப்பதாக காட்சி அமைந்திருக்கும்.
இறுதிச் சடங்கு: சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா சினிமா பட்டறை வளாகத்தில் பாலுமகேந்திராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாலுமகேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் போரூர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை நடைபெறுகிறது. பாலுமகேந்திராவுக்கு மனைவி அகிலா, மகன் ஷங்கி மகேந்திரா ஆகியோர் உள்ளனர். ஷங்கி மகேந்திராவும் ஒளிப்பதிவாளராக உள்ளார்