Tuesday 14 September 2010

கண்ணகி வழக்குரை காவியம்'

சகவீரன்

இவராற் பாடப்பட்ட நூல் 'கண்ணகி வழக்குரை காவியம்' என்பதாகும். இந்நூல் வரம்பெறுகாதை முதலாகப் பதினைந்து காதைகள் கொண்டது. கண்ணகி பாண்டியனுக்கு வழக்குரைப்பதோடு நூல் முற்றுப் பெறுகியது. 2219 பாடல்கள் கொண்ட இந்நூல் அகவல், வெண்பா, சிந்து முதலிய யாப்புக்களால் ஆனது. நூற் காதைகள், பாடல்கள் என்பனவற்றின் எண்ணிக்கை பல ஏடுகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

அரங்கேற்று காதையில் உள்ள பின்வருஞ் செய்யுள்களிலிருந்து இந்நூலாசிரியரின் பெயர் சகவீரன் என்பத பெறப்படுகின்றது :


தரங்கேற்றும் வெண்டிரைசூழ் தரளமெறி புவியதனில்
அரங்கேற்றும் கதைபாட அவனியுளோர் கேட்டருள
இரங்கேற்று நல்லோர்முன் யானுரைத்த புன்சொலெனும்
அரங்கேற்றுகதைகள் தன்னை அவனியுள்ளோர்கேளுமெல்லாம்.

அவனிபயில் குடிநயினாப் பணிக்கனெனும் பவமிகுந்த
கவளமதக் களிற்றண்ணல் காங்கேசன் தேவையர்கோன்
தவனெனவி ளங்குபுகழ் சகவீரன் தாரணியில்
சிவனருளா லிக்கதைக்குச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்.


கண்ணகி வழக்குரை

வரம்பெருகாதை

இரவிகுலத் தேயுதித்த எண்ணரிய நரபாலன்
கரைபுரள நதிபெருஞ் காவிரிநன் னாடுடையோன்
வருகலியும் மருவலரும் வாழ்மனையிற் புகுதாமல்
அரசுநெறி தவறாமல் அவனிதனை ஆற்நாளில் 1

நாளவமே போகாமல் நல்லறங்க ளவைமுயன்று
காளைநெறிப் பூங்குழலார் கற்புநெறி யதுகாத்து
ஆளுகின்ற படிபுரக்கும் ஆராய்ச்சி மணிதூக்கிக்
காளமுகில் போலுதளங் கரிகாலன் திருநாட்டில். 2

நாட்டுகின்ற பூம்புகாரில் நற்குடியில் உள்ளவரின்
ஈட்டுகின்ற யால்மிகுந்த இல்வணிகர் மாசாத்தார்
கோட்டுசிலை வாணுதலார் கொடியிடையார் மனைவியுடன்
வாட்டமற வுடன் மகிழ்ந்தே வாழ்ந்திருக்குங் காலையிலே. 3


கப்பல்வைத்தகாதை

திருந்துபுகழ் வளர்வர்பிரான் திண்புயஞ்சேர் துங்கவேடன்
துரந்துசெல்லும் புறவினுக்குத் துணிந்துடலை யரிந்தபிரான்
பரிந்துதான் கன்றிழந்த பசுவினுக்குத் தன்மகனைப்
பொருந்தவுறு மனுவேந்தன் புரக்குமந்தப் புகார்நகரே. 4

புரக்குமந்தப் புகார்நகரிற் புரவலனுக் கொப்பா
இருக்குமந்த வசியர்தம்மில் இயல்புடைய வணிகேசன்
திரக்குலவு மானாகர் திருமங்களாங் கண்ணகையைப்
பரக்குபுகழ் மாசாத்தார் பாலகற்குப் பேசிவந்தார். 5

கப்பல்வைக்க வேணமென்று கட்டுரைக்க மீகாமன்
செப்புநீ பலகையுள்ள திசையைஎன்றார் மாநாகர்
அப்பொழுதே பரதவனும் ஆய்ந்துரைப்பான் தென்னிலங்கை
மெய்ப்படவே கொல்லமீழம் மிகுபலகை உள்ளதென்றான் 6


கடலோட்டுகாதை

வடவேட்டிற் பாரதத்தை மருப்பொன்றால் எழுதிமுன்னர்
அடலோட்டுக் கயமுகனை அமர்க்களத்திற் கொன்றபிரான்
படவோட்டு மீகாமன் பையரவின் மணிகொணர்ந்த
கடலோட்டுக் கதைபாடக் கரிமுகனே காத்தருள்வாய். 7

விடுவதென்றான் மீகாமன் வெகுண்டேது வார்த்தைசொல்வான்
கடலசரசன் என்றென்னைக் காசினியோ ரறியாரோ
கெடுகருமங் கருதிவந்தாய் கிளையோடு முனைவானில்
படமலைவேன் மீகாமா பாயைவிடாய் என்றுரைத்தான். 8


வெண்பா

போகவிடா தந்தப் போரில் வெடியரசை
வாகைபுனை மீகாமன் வாள்வலியால் - ஆகமுற
ஆர்த்துப் பொருமவரை ஆஞ்சவமர் வந்து
சேர்த்துக் கொடுவந்தான் சென்று. 9


கலியாணக்காதை

இட்டமுடன் கண்ணகையார் இனியமணம் முடிப்பதற்க
பட்டணத்தி லுள்ளவர்க்கும் பலதிசையி லுள்ளவர்க்கும்
மட்டவிழும் சீரகத்தார் வணிகேசர் தங்களுக்கும்
ஒட்டமுடன் வெள்ளிலைபாக் கொழுங்குறத்தா மிட்டனரே. 10

தானமிக்க கோவலரைத் தக்கநல்ல மணக்கோலம்
ஆனதிரு வாசியுமீட் டாபரண வகையணிந்து
கானமருஞ் சீரகத்தார் கழுநீர்த்தா மம்புனைந்து
ஈனமில்லா நன்னெறியே இசைந்தவித மிருந்னிரே. 11


மாதவி அரங்கேற்றம்

கதித்தெழுந்த வனைமுலைமேற் கதிர்முத்தின் கச்சணிந்து
பதித்தபொன்னின் நவரெட்ணப்பணிவகைகள் பல பூண்டு
மதித்தகருங் குழல்முடித்து வயிரநெற்றி மாலையிட்டு
எதிர்த்தவரை வெல்லுமணி மேகலையு மிறுக்கினளே. 12

தாளம்வல் லாசிரியன் தண்டமிழ்க்கு மாசிரியன்
மூழுமிய லாசிரியன் முத்தமிழ்க்கு மாசிரியன்
தோளுந் துணையுமென்னத் துடியிடையார் புடைசூ‘ப்
பாளைசெறி குழலிலங்கப் பலகைஉற்ற களரிதன்னில். 13


வேறு

தானே இயலிசை வாரமும் பாடித்
தன்னிசை யின்வழி நின்றுமி யாழே
தேனார் குழல்வழி நின்ற குழலும்
சிறந்து நின்றதோர் தாமந் திரிகை
நானா விதமன்னர் அந்தரங் கொட்ட
நன்னூல் வழியிந்த சீராகம் நிற்கத்
கானார் குழலவள் மாதவி சற்றே
கையோடு மெய்கால் அசைத்துநின் றாளே. 14.

தத்தித் தோம் ததிக்கிண தோம்
தக்குண தக்குண தக்குண தோம்
தத்தித் ததிகுதி செய்கிட தங்கிட
செங்கிட செங்கிட தாகிட தோம்
ஒற்றைச் சுற்றுடன் உய்ப்ப முழாவொடு
உற்ற கிடக்கை உடன் விதமும்
வைத்துச் சித்திர வுற்ற நடிப்பொடு
மாதவி சோழன்முன் னாடி ளே. 15.


இரங்கிய காதல்

கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிறங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்கு
தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார்
தானிரங்க கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமேல்லாம். 16


வயந்தமாலை தூது

இங்கேதான் வந்ததுவும் யானுரைக்க நீர்கேளும்
அங்கேதான் மாதவியை ஆணதனில் வைத்தன்றீர்
சங்கேருங் கைமடவாள் தான்தந்த ஓலையிது
கொங்காருந் தாரானே கோவலரே எனக்கொடுத்தார். 17


வழிநடைக்காதை

போயினரே கோவலரும் பூவைநல்லாள் கண்ணகையும்
வேயனைய தோளசைய மென்காந்தள் விரல்தடிப்பத்
தூயநுதல் வேர்வரும்பத் துணைமுலைகுங் குமமழிப்பத்
தீயிலிடு மெழுகெனவே திருந்திழையார் சென்றனரே. 18


அடைக்கலக்காதை

அடைக்கலங்கா ணுமக்கென்று அருள்வணிகர் உரைத்ததன்பின்
இடைக்குலங்கள் விளங்கவரு மேந்திழையு மேதுரைப்பான்
மடைக்குள்வரால் குதிபாயும் வளம்புகார் வணிகேசா
தொடைக்கிசைந்த தோளாளே செல்லுவதேன் இவைகளெல்லம்.


கொலைக்களக்காதை

சொன்னமொழி எப்படியோ சொல்லாய்நீ தட்டானே
கன்னமிடுங் கள்வனெனிற் கண்காணத் திரிவானோ
இன்னபடி யென்றறியேன் இன்னானென் றறிவதற்கு
அன்னவனை நம்மிடத்தே அழைத்துவர வேணுமென்றார். 20

கொண்டுசென்று கைதொழுத கொலையானைப் பாகர்தமைக்
கண்டுமனம் களிகூர்ந்து காவலனு மேதுசொல்வான்
தண்டரளச் சிலம்பெடுத்துச் சாதித்த கள்வன்மிசை
உண்டிசையும் தான்மதிக்க யானைதனை யேவுமென்றான். 21

குஞ்சரமு மப்பொழுது கொல்லாமல் அவனுடைய
அஞ்சனத்தால் மிகவெருண்ட அணுகாமற் போனதுகாண்
வஞ்சமற்ற பேருடைய மாலகனே மழுவதனால்
விஞ்சைமிகுங் கள்வனுடன் வெட்டிவைக்க வேணுமென்றான். 22

உயிர்மீட்புக்காதை

பார்த்தாள் பயமுற்றாள் பங்கயச்செங் கைநெரித்தாள்
வேர்த்தாள் விழுந்தழுதாள் விதனப்பட் டீரோவென்றாள்
சேர்த்தாள் குறைப்பிணத்தைச் சேறுபடத் திருமுலைமேல்
ஆர்த்தாள் விழுந்தழுதாள் ஆருனக்குத் துணையென்றாள். 23

பண்ணாருந் தமிழ்தெரியும் பட்டினத்தில் வாழாமல்
மண்ணாளும் வாள்மாறன் மாமதுரை தன்னில்வந்து
எண்ணாதா ரியலிடத்தே என்னையுமே தனியிருத்திக்
கண்ணாலும் பாராமற் கைவிட்ட கன்றீரோ. 24

* உறங்கி விழித்தாற்போல் உயர்வணிகன் எழுந்திருந்து
என்னைநீ ரறியிரோ என்னுடைய எம்பெருமான்
உன்னைநா னறியேனோ என்னுடைய ஒண்ணுதலே
கண்ணுங் கறுப்புமெந்தன் காரிகையைப் போலிருப்பீர். 25

(* இப்பாடல் சில ஏடுககளில் இல்லை)

வழக்குரைத்தகாதை

கொடியிடையார் கண்ணகையும் கோவலரை விட்டகன்று
கடிகமழும் குழல்விரித்துக் கையில்ஒற்றைச் சிலம்பேந்தி
படியிலுள்ளோர் மிகவிரங்கப் பங்கயமாம் முகம்வாட
வடிபயிலும் மேல்மாறன் மதுரைமறு கேநடந்தாள். 26

மீனநெடுங் கொடிவிளங்க வெற்றிமன்னர் புடைசூ‘ச்
சோனைமத கரிபரியும் துங்கமணித் தேர்படையும்
தேனமரும் தொடைபுனைந்து செங்கனக முடியிலங்கை
மானபங்கம் பாராத வழுதிதிரு வாசலிலிதோ. 27

ஊரும் மதிக்குல மன்னா உலகா ளஅறியா ததென்னா
தாரு மனக்குவேம் பானாற் தடங்கா வும்வேம் பாய்விடுமோ
காருந் தருவும் நிகர்க்கும் கைக்கோ வலரை யேவதைத்தாய்
பாரி லரசர் கள்முன்னே பழிப டைத்தாய் பாண்டியனே. 28

சோரனென்று சொன்னாய்நீ தொல்வணிகர் பெருமானை
ஏரணியுங் கனகமுடி இரத்தினவித் தாரகனைக்
காரனைய கொடையானைக் காவலனைக் கள்வனென்றாய்
வாரிதலை யாகநின்ற வையகத்தோ ரறியாரோ. 29

மீனவனே என்றுசொல்ல வேல்வேந்தன் முகம்வாடி
மானபங்கம் மிகவாகி மதியழிந்து மன்னவனும்
ஆனபெரும் பழியெமக்கு அறியாமல் வந்ததென்று
தேனமருந் தொடைவழுதி செம்பொன்முடி சாய்ந்திருந்தான். 30


குளிர்ச்சிக்காதை

மாகனலை விலக்கியந்த மாதுநல்லாள் வழிநடந்து
கோபாலர் தெருவில்வரக் கொடியிடையா ரிடைச்சியர்கள்
தாமாகத் திரண்டுவந்து தையல்நல்லார் இடைச்சியர்கள்
வேல்விழியார் முலைதனக்கு வெண்ணெய்கொணர்ந் தப்பினரே.


வேறு

பாராய்நி யென்தாயே பராசக்தி ஆனவளே
ஆராலும் செய்தபிழை யத்தனையும் தான்பொறுப்பாய்
நேராக இவ்வுலகை நீகாத்துக் கொள்ளெனவே
நேராகப் புரமெரித்த நிமலனிட முள்ளவளே. 32

உள்ளவளே ஐவருக்கும் ஊழிமுத லானவளே
வள்ளஇடைப் பாகம்வைத்த வாணுதலே வாள்மாறன்
தெள்ளுதமிழ் மதுரைசுட்ட தேன்மொழியே யென்தாயே (யுன்)
பிள்ளைகள்தான் செய்தபிழை பேருலகில் நீ பொறுப்பாய். 3

No comments:

Post a Comment