Friday 15 October 2010

இலவங் கிளியும் நாங்களும்

இலவங் கிளியும் நாங்களும்

by Pathiniyan Sujanthan on 07 அக்டோபர் 2010, 17:24 க்கு
முற்றத்தில் பெருத்து வளர்ந்த
இலவை மரத்தில்
காலங்காலமாய்க் கிளிகள்
இலவம் பழம் தின்ன……!

அன்று
தாய்க்கிளி காத்திருந்து
ஏமாந்த போக
நேற்று மகள் கிளியும் ஏமாந்து போனது
அசட்டுத்தனமான நம்பிக்கையில்
 இன்று
மகள் கிளி பொரித்த குஞ்சுக்கிளி கிளையில்
நாளைக்காய்
கூட்டில்குஞ்சிக் கிளி பொரித்த முட்டை
இப்படியே தெடர்கிறது
கிளிச் சந்ததியின் இலவை காத்தல்………

நேற்றுத்தான் அறிந்தேன்
முப்பாட்டனும் பாட்டனும்
ஏன் அப்பாவும்
குந்தியிருந்த இலவை மரத்தின் கீழ்
நானும் இருப்பதாய்

நாளை
என் பிள்ளையும் குந்தியிருக்க முன்
இப்போதே சொல்லி வைக்க வேண்டும்
என் பாட்டன் முப்பாட்டன் கதையை அவனிடம்……

No comments:

Post a Comment