Thursday 3 April 2014

திருமலை தந்த மூத்த பெண் படைப்பாளி

காயத்திரி நளினகாந்தன்
அண்மையில் நாம் இழந்த ஈழத்து இலக்கியவாதி எழுத்தாளர் ந.பாலேஸ்வரி அவர்கள் பற்றிய சிறப்புப் பதிவுகள் ஈழத்து இலக்கிய வரலாற்றின் வளர்ச்சிக்கு பெரும்பங்களிப்பையும் ஈழத்து நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகவும் வாழ்ந்தவர்“தமிழ்மணி”யும்இசிறுகதைச்சிற்பியுமான அமரர் நல்லரெட்ணசிங்கன்; பாலேஸ்வரி ஆவார். .அன்னார் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 12 நாவல்களையும் படைத்துள்ளார்.1929.12.07 இல் அவதரித்த இவர் அந்நாட்களில் வீரகேசரி தினகரன் கல்கி குங்குமம் சுடர் மித்திரன் ஈழநாடு போன்ற பத்திரகைளிலும்இகோணைத்தென்றல் போன்ற பல சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்களை வெளியிட்டிருந்தார். திருக்கோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியராக உருவாகி திருக்கோணமலையின் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியதோடு திருக்கோணமலை விக்னேஷ்வரா கல்லூரியின் உதவி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார். அம்மையாரின் இலக்கிய பிரவேசமானது 1957 ஆம் ஆண்டு ‘வாழ்வளித்த தெய்வம்” எனும் சிறுகதையை தினகரன் பத்திரிகையில் எழுதியதன் மூலம் ஆரம்பமானது இவரது முதலாவது சிறுகதைத்;தொகுதியான “சுமைதாங்கி” 1973 ஆம் ஆண்டு வெளிவந்தது. வீரகேசரி சிந்தாமணி கல்கி தமிழின்பம் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஆறு கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ‘சுமைதாங்கி” “இது தான் உலகம”; “டெரலின்ஷேட்” “nஐந்தியின் தந்தி” ஆகிய ஆறு கதைகள் கொண்;ட தொகுப்பாக இது வெளிவந்திருந்தது. இதில் சுமைதாங்கி எனும் சிறுகதை மலேசியாவில் இருந்து வெளிவரும் “தமிழ்மலர்’பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டு பாரட்டு பெற்ற சிறுகதையாகும். இவரது கதைகள் இலங்கையில்மட்டுமின்றி இந்தியா மலேசியா பாரிஸ் முதலியநாடுகளின் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவந்தன. இதில் இது தான் உலகம் என்னும் சிறுகதை கல்கி நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்று பாராட்டப்பட்டமை இவருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது. மேலும் இவரது இன்னொரு சிறுகதைத்தொகுதியான “தெய்வம் பேசுவதில்லை”(2000) சென்னை காந்தளகம் பதிப்பாக வெளிவந்திருந்தது இச்சிறுகதைத்தொகுதியில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டு வரை பாலேஸ்வரி எழுதிய 29 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.”தொடுவானம”; “தெய்வம் பேசுவதில்லை” “வைராக்கியம்” “நெஞ்சில் நிறைந்தவள்” “போய்விடுங்கள்” “எழுதவேமாட்டேன்” என்பன மேற்கூறப்பட்ட தொகுதியில் அடங்கும் முக்கியமான சிறுகதைகளாகும்.சஞ்கைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த கதைகளை இவர் இதில் தொகுத்து வெளியிட்டிருந்தார். இவரது நாவல் இலக்கியப்படைப்புக்களை நோக்கும் இடத்து இலங்கையின் முதலாவது பெண் நாவலாசியரியர் என்ற பெருமைக்குரியவரான இவர் 12க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளமை குறிப்பிடதக்கது. இவர் “சுடர் விளக்கு”(1966) என்னும் நாவலை முதல் முதலில் வீரகேசரியில் எழுதியதன் மூலமாக நாவல் இலக்கியத்துறையில் தடம் பதித்தார். சுடர் விளக்கு(1966) பூiஐக்கு வந்தமலர் (1972) உறவுக்கப்பால்(1975)கோவும் கோயிலும் (1980) உள்ளக்கோயில் (1983) பிராயச்சித்தம் (1984) உள்ளத்தினுள்ளே (1990) தத்தை விடுதூது (1992) மாது என்னை மன்னித்து விடு (1993)எங்கே நீயோ நானும் அங்கே(1993) அகிலா உனக்காக(2002)நினைவு நீங்காதது(2003) ஆகியவை இவர் எழுதிய நாவல்களாகும். இதில் பூசைக்கு வந்த மலர் குறுகிய காலத்தினுள் மீள்பிரசுரம் செய்யப்பட்டமை இவருடைய நாவலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழக பெண் எழுத்தாளர்களான லக்சுமி சிவசங்கரி போன்றவர்களுடன் சமமாக மதிக்கப்படடுகின்ற ஈழத்துப்பெண்ணெழுத்தாளர்களில் முதலானவரும் முதன்மையானவருமான அம்மையார் அவர்கள்; தென்னிந்தியாவில் நாவல் இலக்கியத்தில் பெண்ணியம் பற்றிய பேசப்படுவதற்கு முன்னரே பெண்ணியம் பற்றி தமது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டிய அம்சமாகும் இவரது சிறுகதைகளும் நாவல்களும் இவர்காலத்து சமூகத்தின் வெட்டு முகமாக அமைந்த காதல் தியாகம் சமூகத்திற்கு தொண்டு செய்ய நினைப்பது தமது பிரதேச புலம் மற்றும் யுத்தத்தின் அவலம்இ மறுமணம் ஆணாதிக்கச்; சிந்தனை மற்றும் பெண் சுதந்தரம் போன்றவற்றை தமது இலக்கியத்தினூடாக பதிவாக்கியுள்ளதோடு சிறப்பாக “ஆசியNஐhதி” சிறுகதையின் மூலம் திருக்கோணமலை நகரில் நடந்த இனப்படுகொலையினை நாசுக்காகவும் புத்திசாதுரியமாகவும் ஆவணப்படுத்தியுள்ளமை ஆசிரியரின் புலமையையும் சாதுரியத்தையும் பறைசாற்றியுள்ளது மேலும் பாத்திரவார்ப்புக்ளிலும் யுத்தத்தின் கொடூரங்களை சித்தரித்துள்ளார் இது தான் உலகம் எனும் இவரின் படைப்பானது பல்கலைக்கழக மாணவர்களினால் ஆய்விற்குட்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடதக்கது. இவரது படைப்புக்களில் இவரின் ஆழமான அனுபவமும்; கலையுணர்வும்; இழையோடியிருப்பதை காணலாம். மேலும்; இலக்கியப்படைப்புக்களுக்காக பல விருதுகளையும் இவர் தனதாக்கி கொண்டார் குறிப்பாக 1992ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம் இவருக்கு “தமிழ் மணி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது 1999 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறுகதைச்சிற்பி கலாபூசணவிருது ஆகியவற்றுடன் 2010 இல் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய ‘தமிழியல் விருது” என்பன இவரை கௌரவித்துள்ளது. மேலும் அன்னார் இலக்கியத்துறையுடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது சமூகப்பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டமை இவரது சிறப்பாகும். இலங்கையில் 1947 முதல் மூத்த இசை வரலாறு கொண்ட திருமலை தெட்சணகானா சபையின் ஸ்தாபகர் இராNஐஸ்வரி அவர்;களின் சகோதரியும் ஆன இவர் அவரின் மறைவுக்கு பின்னர் 1981 ஆம் ஆண்டு முதல் தெட்சணகானா சபையின் தலைவியாக இறுதிவரை சேவை ஆற்;றினார். இவரது காலத்திலேயே தெட்சணகானா சபை பெருவளர்ச்சி கண்டது குறிப்பாக நிலையத்திற்கானகட்டிடத்தை பெற்றுத்தருவதில் அரும்பாடுபட்டு உழைத்தார்.பல வருடங்களாக திருகோணமலையின் இசை நடன ஆசிரியர்கள் பலர் இவ்நிறுவனத்தின் மூலமாகவே உருவாகிவருகின்றமை குறிப்பிடதக்கது. .மேலும் இவரது சகோதரனே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நேமிநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு ஈழத்தின் முதல் நாவலான மோகனாங்கியை படைத்த தி.த சரவணமுத்துப்பிள்ளையின் உறவினரான இவர் ஈழத்து பெண் நாவலாசிரியர்களில் முதன்மையானவர் என்பது சிறப்பான வரலாற்றுப்பதிவு ஆகும். இவ்வாறு பல சாதனைகளையும் சேவைகளையும் செய்த ந.பாலேஸ்வரி அம்மையார் அவர்கள் 27.02.2014 அன்று சிவபதமடைந்தார்.இவரின் இழப்பு இவரது கணவரான நல்லரெட்ணசிங்கன் அவர்களுக்கும் திருகோணமலைக்கும் மட்டுமின்றி இலங்கையின் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். இவரது மறைவை ஓட்டி இவரது ஆத்மசாந்தி பிராத்தனையும் நினைவுப்பேருரையும் எதிர்வரும் 30.03.2014 அன்று ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரியில் நடைபெற குளக்கோட்டன் இதழகம் திருக்கோணமலை தமிழ் சங்கம் மற்றும் தெட்சணகானா சபையும் இணைந்து நடைபெற்றது

No comments:

Post a Comment