Saturday 15 July 2017

பல்கலைச் செம்மல் கலாபூசணம் வில்லுப்பாட்டு.கா.வீரசிங்கம்

பல் கலைச் செம்மல் என்று சொல்வதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர்

சேனையூர் கிராமம் தந்த மா கலைஞன்


நடிப்பு,நாடக எழுத்து,ஒப்பனை,நாடக இயக்கம் என நாடக அரங்கின் எல்லாத் துறைகளும் அவருக்கு அத்துப் படி.
பாரம்பரியமான புலவர் பரம்பரையின் வாரிசு வைத்தியர் பூசாரி என தொடரும் பரம்பரை அறிவின் தொடர்ச்சி .
மூதூர் பிரதேசத்தில் முதன் முதல் வில்லுப் பாட்டை அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும்.அன்றய நாட்களில் இவர் வில்லுப் பாட்டு இல்லாமல் கோயில் திருவிழாக்கள் நடந்ததில்லை எனலாம்.
நடிகனாக மேடையில் ஏற்ற பாத்திரங்களில் சிவாஜிக்கு சவால் விடும் நடிப்பாற்றல்,கர்ணனாக,அரிச்சந்திரனாக,சிவனாக என எத்தனை பாத்திரங்கள் என்றும் நடிப்பின் மூல பாடமாய்.
கவிஞர்,பாடகர் ஆடல் வல்லாளர்.நாதஸ்வரம் வாசிக்கும்திறன் தச்சு வேலை,மேசன் வேலை கற்றவர்.சிற்பங்கள் படைக்கும் கலைஞன்.
என்ன தெரியாது இவருக்கு இத்தனை ஆற்றல் கொண்டவர்கள் பிறப்பது அரிது
கோடியில் ஒருவருக்குத்தான் இத்தகைய திறன்கள் வாய்க்கும்.
கண்பார்த்தால் கை செய்யும் என்ற நம்பிக்கை கொண்ட படைப்பாளி .நடிப்பில் சிவாஜியாய் பாட்டில் செளந்தரராஜனாய்,கவியில் கம்பனாய் வாழும் மகா கலைஞன்.
கலாபூசணம்,ஆளுனர் விருது என பல விருதுகளுக்கு சொந்தக் காரர்

No comments:

Post a Comment