Saturday 15 July 2017

கல்வியாளரும் இலக்கிய வாதியுமான திருமிகு.D.G.சோமசுந்தரம்

கல்வியாளரும் இலக்கிய வாதியுமான திருமிகு.D.G.சோமசுந்தரம்

மூதூர் பிரதேசத்தில் கல்வி மறு மலர்ச்சிக்கு வித்திட்டவர்களில்
ஒருவர்.சம்பூர் மகாவித்தியாலையத்தின் பெருமை மிகு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
மட்டக்களப்பு குறுமண் வெளியில் சோமசுந்தரத் தேசிகர் அவர்களின் மகனாக பிறந்த அன்னார் களுதாவளை மகா வித்தியாலையம்,பட்டிருப்பு மகா வித்தியாலையம் ஆகியவற்றில் ஆசிரியராகவும் பின்னர் தோப்பூர் மகாவித்தியாலையம் ,மூதூர் மத்திய கல்லூரி,சம்பூர் மகா வித்தியாலையம் திருகோணமலை புனித வளனார் வித்தியாலையம் ,ஆகியவற்றில்அதிபராக சிறப்பாக பணியாற்றி கல்வியதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்
இவர் ஒரு இலக்கிய வாதியும் கூட மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர்.செய்யுள் இலக்காணத்தின் அடிப்படையில் முறை சார் இலக்கியம் படைக்கும் திறன் மிக்கவர்.
அன்றைய தினபதி,சிந்தாமணி பத்திரிககளில் இவரது இலக்கியப் படைப்புகள் பல வெளி வந்துள்ளன.''வெற்றியின் வழி'' எனும் இவரது கவிதைத் தொகுப்பு ஈழத் தமிழ் இலக்கிய மரபில் ஒரு வேறுபட்ட முகம் காட்டி நிற்கிறது.

No comments:

Post a Comment