Thursday 26 March 2020

கீழடியிலிருந்து சேனையூர் வரை உறை கிணறும் கொட்டுக் கிணறும்

கீழடியிலிருந்து சேனையூர் வரை


உறை கிணறும் கொட்டுக் கிணறும்

கீழடி இன்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பேசு பொருளாய் மாறியுள்ளது கீழடி எப்படி தொன்மைத் தமிழின் அடையாளங்களை சொல்லி நிற்கிறதோ அது போலவே ஈழமும் தமிழர் வாழ்வியலின் தொன்மை அடையாளங்களை கொண்டுள்ளது .
கீழடியில் உறை கிணறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது உறை கிணறு என்பது மணற்பாங்கான இடங்களில் கிணறு தோண்டும் போது மணல் சரியாமல் கிணற்றின் ஆழம் வரை ஊடுருவி சுட்ட மண் வளையங்களால் கட்டமைக்கப் படுவது .இது மழை காலங்களில் நீர்ச் சேகரிப்பாகவும் இருக்கலாம் .
கீழடிச் சமூகம் மிக நாகரிகம் அடைந்த சம்ழுகம் என்பதை இந்த உறை கிணறுகள் அறிவுறுத்தி நிற்கின்றன.கிணற்று வளையங்கள் மிகவும் நேர்த்தியான சுடு மண் வளையங்களாய் காட்சியளிக்கின்றன கீழடி வீடியோ காட்சிகளும் ஒளிப் படங்களும் தெளிவுறுத்தும் நம் நாகரிகத்தின் செழுமையின் நீட்சி இது.
என் சிறு வயதில் எங்கள் ஊரில் கொட்டுக் கிணறு அமைக்கும் முறைமையை கண்டிருக்கிறேன் கிணறு வெட்டும் போது கொட்டிறக்குதல் என்பார்கள்.மரத்தினால் செய்யப் பட்ட வட்டமான கொட்டுகள் கீழே இறக்கப் பட்டு நீரின் ஊற்றைக் கட்டுப் படுத்தவும் கிணற்றுச் சுவர் சரியாமல் இருக்கவும் இது பயன் படும் .
தம்பலகாமத்திலும் இந்த வகை கொட்டுக் கிணறுகளை கண்டிருக்கிறேன்.
மட்டக்களப்பிலும் இந்த கொட்டுக் கிணறுகள் முன்னர் அமைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது அண்மையில் மட்டக்களப்பில் மிகப் பழமையான சுடு மண் கொட்டுக் கிணறு கண்டு பிடிக்கப் பட்டமையும் இதனோடு பொருத்திப் பார்க்க முடியும்
தமிழர்கள் எங்கிருந்தாலும் ஒரு தொடர் பண்பாட்டு கலாசார நீட்சியை பெற்றுள்ளார்கள்.
நம் நதிக் கரைகளில் தொல்லியல் ஆய்வுகள் முன்னெடுக்கப் படும் போது குறிப்பாக வெருகல் கழி முகம் திருக்கரசை மாவலி ஆற்றுப் படுக்கை என்பன வரலாற்றின் தொட்டில்கள்

No comments:

Post a Comment