Monday 30 March 2020

தர்சி எனும் நர்த்தகி

தர்சி எனும் நர்த்தகி


Image may contain: 2 people
நான் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிய காலங்களில் விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவர் சிவ தர்சினி அவர் படிக்கும் காலங்களில் அவரின் திறமை மேடையில் பளிச்சென மின்னும்.பரத நாட்டியம் கதகளி இவற்றில் கற்பனையோடு புத்தாக்க்கம் செய்திறன் வாய்க்கப் பெற்றவர் தர்சி.
ஒரு குழு நடனமாக இருந்தாலும் அதில் அவர் திறமை தனித்து தெரியும் .இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் நடன ஆசிரியராக இருக்கும் தர்சி தனித்துவமான தன் படைப்புகளால் திருகோணமலை கலை வரலாற்றில் நடன நாட்டியத் துறையில் வித்தியாசமான நடன அளிக்கைகளால் தனி முத்திரை பதிக்கும் ஒருவராக கணிக்கப் படுகிறார்.
Image may contain: 5 people, people smiling அண்மைக் காலமாக அவர் படைப்புகளை வீடியோ வழி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தமை பெரிதும் மகிழ்ச்சிக்குரியது.
வேல் ஆனந்தன் ஆசிரியர் வழியாக கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து திருமலை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.
Image may contain: 4 people
இலங்கை இந்தியா புலம் பெயர் நாடுகள் என பல நூறு நடன கலைஞர்களின் படைப்புகளை கண்டு களித்திருக்கிறேன் ஆனாலும் தர்சியின் ஆடலும் அபி நயமும் பாவமும் தனித்து தெரிபவை.
தர்சியின் படைப்புகள் கண்டு மகிழ்வதோடு தமிழர் நடன வரலாற்றில் சாதனைகள் படைக்க வேண்டும் என வாழ்த்தி நிற்கிறேன்
இந்த வேளையில் தர்சியின் தகப்பனார் சுப்ரமணியம் அவர் மனைவி திருமகள் இருவரையும் நினைத்துப் பார்க்கிறேன் .(படங்களுக்கு நன்றி சசிகுமார்)

பாலசுகுமார்


No comments:

Post a Comment