Thursday 26 March 2020

பத்தினிக்குப் பெரு விழா

பத்தினிக்குப் பெரு விழா

சம்புக்களி பத்தினி அம்மன் வேள்வி


''வைகாசித் திங்கள் வருவேன் என்று வரிசைக்கிசைந்து விடை கொடுத்தார்''
உரைசால் பத்தினி உரைத்துச் சென்றதன் வழி ஒவ்வொரு வைகாசி விசாகத்தை அடுத்து வரும் திங்கள் கிழமை எங்கள் சம்புக்களி பதி வருவதான ஐதீகத்தின் அடிப்படையில் வருடந்தோறும் நிகளும் பத்தினி அம்மன் வேள்வி.
பத்தினி பற்றி இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னர் எழுந்த நற்றிணைப் பாடல்
''துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே; 5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும், 10
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே''
ஒரு முலையறுத்த திருமாவுன்ணி என சிறப்பித்து நிற்கிறது.
"ஒரு மா பத்தினி வந்தாள்
உலகேழும் தழைத்திட வந்தாள் வந்தாள்
திரு மா மணி நங்கை வந்தாள்
தேசம் தழைத்திட வந்தாள் வந்தாள்"
ஈழத்தில் பத்தினி வழி பாடு இராண்டாயிரம் வருசம் பழமை வாய்ந்தது அந்த மரபில் சம்புக்களி பத்தினி அம்மன் வழிபாடும் முக்கியம் பெறுகிறது.
"இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து
ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி’"
என சிலப்பதிகாரம் உரைக்க
அந்த மரபில் திரு மா மணியாய் போற்றப் படும் பத்தினி இதைத்தான்
சிலப்பதிகாரம்
"உரைசால் பத்தினி" என்றும் விழித்து சொல்கிறது
பத்தினி என்று பலரும் போற்ற
பத்தினிக்கு பெரு விழா
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயிலிலிருந்து மடைப் பெட்டி எடுத்து ஊர்வலமாக சென்று கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மன் ஆலயத்தை அடையும் இரவிரவாக சடங்குகள் பத்ததி முறையில் தொடங்கி
பத்தினி மதுரையை எரித்து ஈழம் வந்த போது தன்னைக் குழிர்விக்க அரிந்த முலையில் தயிரும் வெண்ணையும் தடவி ஆற்றுப் படுத்த சொன்னதாக தொடரும் கதையோடு தானே உப்பு நீர் எடுத்து வரச் சொல்லி விழக்கெரித்ததாகவும் நம்பும் மரபில் சம்புக்களி பத்தினி வேள்வியில் இன்றும் உப்பு நீர் எடுத்து வந்து விழக்கெரிக்கும் சடங்கு இங்கு முக்கியம் பெறுகிறது.
படையலில் முக்கியம் பெறும் தையிரும் வெண்ணையும் பூசனைப் பொருளாய் அமைவதும் இதன் சிறப்புகளில் ஒன்று.
குளிர்த்தி பாடுதலும் குளிர்த்தி ஆடுதலும் என இப் பெரு வேள்வி நிறைவுறும்
"மன்று தளைக்க மனுவெல்லாம் ஈடேற ''
மக்கள் வாழ்வோடு ஒன்று கலந்த பத்தினிப் பெரு விழா

No comments:

Post a Comment