Thursday 26 March 2020

கிழக்கின் தொல்லியல், வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் நங்கை செல்வி தங்கேஸ்வரி கதிராமன்

அஞ்சலி

கிழக்கின் தொல்லியல்,
வரலாற்று ஆய்வாளர்
தொல்லியல் நங்கை
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்



பெண்ணியம் பேசாத பெண்ணியவாதி


கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்கள் வரிசையில் முன்னணி வகித்த பெரும் ஆளுமை அவர்.
வரலாறு,தொல்லியல் ,இலக்கியம் ,சமூகம் ,அரசியல் என எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்த ஒரு பெண்மணி என்றால் அதில் மிகை இருக்காது.
கன்னங்குடா எனும் கிராமத்தில் பிறந்து தன் ஆளுமையால் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறியப் பட்டவர்.துணிச்சல் மிகுந்த பெண் ஆளுமை அவர்
பரணவிதான போன்றோரின் தன்னிச்சையான தொல்லியல் முடிவுகளை கேள்விகளுக்கு உள்ளாக்கியவர்.வாதிடுவதில் வல்லவர்.
கலாசார உத்தியோகத்தராக இருந்த காலத்தில் மட்டக்களப்பு கூத்தை ஆவணப் படுத்துதலில் முன்னின்று உழைத்தவர்.
நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்த காலை அவரோடு இணைந்து பணியாற்றிய பல சந்தர்ப்பங்கள் நினைவில் நீங்கா இடம் கொண்டுள்ளன.
அரசியலில் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தடம் பதித்த ஒரு சாதனைப் பெண் மணி
பல துறை சார்ந்து அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் அவரது நிலைத்த புகழுக்கு தொல்லியல் ஆய்வுகள் துணை நிற்கின்றன.
திருகோணமலையில் அரசு செய்த குளக்கோட்டன், பற்றிய ஆய்வுகளும் மட்டக்களப்பு மாகோன் பற்றிய ஆய்வுகளும் தங்கேஸ்வரி அவர்களுக்கு புகழ் சேர்த்த நூல்கள் .மட்டக்களப்பு மீது மிகுந்த பற்ற்க் கொண்ட ஒரு ஆளுமையை இன்று இழந்திருக்கிறது.
அவரது நூல்கள்
1.விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982
2.குளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985
3.மாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995
4.மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007
5.கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007
6.கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007
பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ள வேளை பல ஆய்வு மகா நாடுகளில் மட்டக்களப்பின் தொன்மை கலாசாரம் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது
அஞ்சலித்து நிற்கிறேன்
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்
இலங்கை

No comments:

Post a Comment