Monday 30 March 2020

குலராஜ் எனும் ஓவிய ஆளுமை

குலராஜ் எனும் ஓவிய ஆளுமை


தமிழ் சார்ந்த ஓவியர் குலராஜ்.ஓவியம் தமிழர்கள் மத்தியில் பல்லாயிரம் வருச மரபு சார்ந்ததாக இருந்தாலும் ஓவியம் பற்றி பேசிய தமிழ் ஓவியர்கள் பலர் மேலைத்தேய ஓவியங்களின் வழி வந்தவர்களை மட்டுமே கொண்டாடினர்.தமிழ் மரபு சார்ந்து பேசியோர் மிக மிக குறைவு.நவீன ஓவியம் என பேசியோர் மனதுக்கு உற்சாகம் தராத வண்ணங்களையே பயன் படுத்தினர் ஒருவகையான. அழிந்த வண்ணங்களாய் இருந்தன.தமிழ் மரபு இந்திய மரபு வான வில் போன்ற வண்ணக் கலவை மிக்கது ஒளிரும் வண்ணங்களாய் அவை நம்மை மகிழ்ச்சிப் படுத்தும்.

குலராஜ் நம் மண் சார்ந்த சிந்தனை வயப் பட்ட ஓவியர் ஓவியத்தை உயிராய் நினைப்பவர் ஓவியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர் அல்ல.தமிழ் நாட்டின் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியத்தின் சாயலில் ஈழத் தமிழர் பண்பாடு வரலாறு ஆகியவற்றை ஓவியங்ஜளில் கொண்டு வந்தவர் குலராஜ்.
குலராஜ்ஜின் ஓவியங்கள் கிழக்கு மண்ணின் சடங்குகளை பேசின தான் வாழ்ந்த சூழலின் பண்பாட்டை தன் வரை கலையில் கைகளுக்குள் களி நடம் புரிந்தன அவர் ஓவியங்கள்.

நம் கூத்தும் பறை மேளமும் வசந்தனும் கொக்கட்டி சோலையும் தோரணமும் குலராஜ்ஜின் ஓவியங்கள் வழி புது கலா பூர்வமான அர்த்தத்தை பெற்றன.எத்தனை வண்ணம் கொண்டாய் என அதிசயிக்க வைக்கும் ஓவியர் அவர்.

மட்டக்களப்பின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் அவர் ஓவியங்களின் புதிய அர்த்தம் பெற்றன.நம் மரபின் அடையாளங்களை ஓவியங்களின் வழி உலகுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் குலராஜ்.

மரபு வழி ஓவியத்தை நவீன தமிழ் ஓவிய செல் நெறியாய் மாற்றலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் குலராஜ் அவர்கள்.சுனாமி பற்றிய அவரது ஓவியங்கள் அன்றைய சூழலை.நம் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
ஈழத் தமிழ் நவீன ஓவியத்தின் தமிழ் முகம் குலராஜ்.
ஈழத் தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய நம் ஓவியர் குலராஜ்.அவரது ஓவியக் கண் காட்சிகள் பரவலாய் நடத்தப் பட வேண்டும்.
புலம் பெயர் நாடுகளில் அவரது ஓவியங்களின் கண்காட்சியையும் பயில் அரங்குகளையும் நடத்த முடியும்

வாழ்த்துகள் குலராஜ்

பாலசுகுமார்


ஓவியர் குலராஜின் அண்மைக்கால ஓவியங்கள் இரண்டு
-----------------------------------------------------------------------------
ஓவியர் குலராஜின் அண்மைக் கால ஓவியங்கள் இரண்டைக்காணும் சந்தர்ப்பம் கிடைத்தது
.மனதையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் அவை
ஒன்று சக்தி சிவனோடு இணைந்து அர்த்தநாரியாக காட்டும் தோற்றம்
மற்றது அதேசக்தி சிவனை விட்டுபிரிந்து காதலியாக அவருக்கு அன்பு ஊட்டுவதும்,தாயாகி மகனுக்கு பாலூட்டுவதும்
No photo description available.
பெண்மையின் இரண்டு நிலைகள் என தன் கருத்தியலை கலையாக்கியுள்ளார் குலராஜ்
பெணமை இணந்தும் பிரிந்தும் செயற்படும்,அந்தச் செயற்பாட்டில் பல அர்த்தங்கள் இருக்கும்
குலராஜின் சிவன் அல்லது ஆண் என்றும் கரும் பச்சை நிறமானவன்,
அவரது சக்தி அல்லது பெண் சிவந்த நிறமுடையள்
அர்த்த நாரியாகக் காட்சிதரும் சக்தியின் சிவனின் கண்கள் காட்டும் பாவம் வேறு,.
குடும்பமாகக் காட்சிதரும்
சக்தியின்
சிவனின் கண்கள் காட்டும் பாவம் வேறு
முன்னையதில் கொடுமைகளைப் பொசுக்கும் அல்லது அழிக்கும் கோப உணர்வை-ரௌத்ர உணர்வை அக்கண்கள் வெளிப்படுத்துகின்றன
குடும்பப்பெண்ணாகக் காட்சிதரும் சக்தி கணவனை நோக்குகையில் அவள் கண்களிலே காதல் கொப்புளிக்கிறது.
சிவனின் கண்களிலும் அதே காதல் கொப்புழிக்கிறது
. குழந்தையை அணைக்கும் அவளது வலது கரத்தில் பாசம் தெரிகிறது
பாசம் பொழிகிறது
ஆண்களைக் கருமை நிறத்திலும்
பெண்களைச் சிவந்த நிறத்திலும்
படைத்திருக்கிறார் குலராஜ்
ஆணையும் பென்ணையும் குலராஜ் நிறம் கொண்டு வேறுபடுத்துகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது
அதற்கான வலுவான காரணங்கள்
அவரிடம் இருக்கவும் கூடும்
குலராஜுக்கு கிளிகள் மீது ஒருகாதல்
எங்கு நோக்கினும் கிளிகள்
முதல் படத்தில்
அம்மையின் கையிலே கிளி
,இர்டண்டாம் படத்தில்
அம்மையப்பனின் காதலை யும் பாசத்தையும் ரசிக்கும் கிளிகள்
குலராஜின் பாணியலமைந்த கோடுகளும்,வர்ணங்களும் எம்மைக் கவருகின்றன
இந்திய சிற்பங்களில் காணப்படும்
அழகு
,மென்மை
,நளினம்
ஆழம்
என்பன இவ்வுருக்களில் தோன்றி மரபை எமக்கு அழுத்தமாக உணர்த்துகின்றன
நன்றாக உற்றுப்பாருங்கள்
ரசியுங்கள்
இவ் ஓவியங்கள் இன்னும் பல உணர்வுகளைக் கருத்துக்களை உங்களுக்குத் தரக்கூடும்
ஓவியம் பேசுவது என்பது இதுதான்
ஓவியம் பேசாது
,ஆனால் அது நமக்குள் நம்மை பேச வைக்கும்
குலராஜின் இவ் ஓவியங்கள் மரபாகத் தோன்றும் அதே வேளை
நவீனமாகவும் காட்சிதருகிறது
மரபினடியாக இவர் உருவாக்கும் நவீனம் இது
இந்த தனித்துவம்தான் குலராஜிடம் எனக்கு மிகப் பிடித்த அம்சம்
அவர் கால்களும் சிந்தனையும் மிக அழுத்தமாக மண்ணில் ஊன்றி நிற்பதனால் இத்தகைய புதுமைகளை அவரால் படைக்க முடிகிறது
அவரிடமிருந்து நமது ஓவிய மாணவர்கள் கற்பதற்கு நிறைய இருக்கிறது
இந்த மரபுவ்ழி ஓவிய உணர்வையும்,சிந்தனையையும் குலராஜ் மாணவர்க்கு ஊட்ட வேண்டும்
உயர்கல்வி நிறுவனங்கள் அவரை நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்


மௌனகுரு

No comments:

Post a Comment