Saturday 28 March 2020

கிராமம் எங்கும் வீசிய அக்கினிச் சுவாலை வில்லுப்பாட்டு வீரசிங்கத்தார்

கிராமம் எங்கும் வீசிய அக்கினிச் சுவாலை
வில்லுப்பாட்டு வீரசிங்கத்தார்
---------------------------------------------------
குடத்துள் விளக்கு, குன்றின் மேலிட்ட தீபம் என இரு சொற்றொடர் தமிழில் உண்டு.
குடத்துள் விளக்கு என்பதன் அர்த்தம் குடத்துக்குள் மற்றவர்க்குத் தெரியாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்கு என்பதாகும்.

குன்றின்மேலிட்ட தீபம் என்பது மலைக்குமேலிருந்து அனைவரும் காண ஒளி வீசும் விளக்காகும்
.ஒன்றை விளக்கு என்பர்
மற்றதைத் தீபம் என்பர் ,
இந்தச் சொற் பிரயோகத்தைக்கவனிக்க வேண்டும்
விளக்கு எனும் சொல் தீபம் என்பதைவிடக் குணாம்சத்தில் சற்றுக் குறைவுடையதாயினும் இரண்டிலும் காணப்படுவது நெருப்பு,அது சார்ந்த ஒளி எனும் பொதுப்பண்பே
குடத்துள் விளக்காக இருந்து மறைந்து விடும் கலைஞர்களுமுண்டு
.
குன்றின் மேல் தீபம் என ஒளிர் விடும் கலைஞர்களுமுண்டு
கொட்டியாரப்பற்றில் உதித்து அங்கு புகழோடு வாழ்ந்த வீரசிங்கத்தை நாம் இதற்குள் எதற்குள் அடக்கலாம்?
விளக்கா?
தீபமா?
அவரது வாலாயமான துறை அவரைப் பிரபல்யப்படுத்திய துறை வில்லுப்பாட்டுத்தான்
,அவரது சிறப்பான வில்லுபாட்டிற்கு அவரது இனிமையான குரல் திறனும்,நடிப்புத் திறனும் பாட்டுக்கட்டும் திறனும் உறுதுணையாக இருந்துள்ளன
நான் அவரது வில்லுப்பாட்டினைக் கேட்டதில்லை.
ஆனால் பால சுகுமார் அவர் திறனை என்னிடம் வெகுவாகச் சிலாகிப்பார்
அவரது வில்லுப்பாட்டில் மக்கள் கிறங்கிப்போய் இருப்பர்களாம்
பால சுகுமாரின் மகள் அனாமிகாவின் நினைவு நாள் ஒன்றில் வீரசிங்கம் தானே ஒரு பாட்டுக்கட்டி அதற்குத் தானே இசையமைத்து உடனே பாடினார்’
அவர் திறனை நேரடியாகத் தரிசித்த கணங்கள் அவை
சிறப்பான சொற்கள்,
கணீர் என்ற குரல் வளம்
பாவம்,அசைவு கமகம் நிறைந்த இசை
உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே காட்டும் அவரது முகபாவம்
அனைத்தும் அப்பாடலைப் பாடும்போது தெரிந்தன
அவர் குரல் நடித்தது
அவர் வில்லுப்பாட்டு எத்தனை சிறப்பாக இருந்திருக்கும் என்பதை பதச் சோறாகக் காட்டிய நிகழ்ச்சி அது
அவர் ஊரில் ஒரு வைத்தியர்
அத்தோடு ஒரு மந்திரவாதி,
ஊர்க்கோவில் பூசாரியார்.
தெய்வங்களுக்குரிய கிராமிய மெட்டில் அமைந்த அம்மானை,கும்மி பாடல்களை அழகாகப்பாடும் ஓர் இசைகலைஞர்
இத்தனைக்கும் மேலால் .ஒரு மேடை நாடக நடிகர்
பூசாரியார் குரல் வளமும்,நடிப்புத் திறனும் கொண்டவராக இருந்து விட்டால் பூசாரித்தனம் மேலும் சுடர் வீட்டு பிரகாசிக்கும்.
மந்திர உச்சாடனங்களைத் தெளிவாகச் சொல்லி உருவேற்றும் பூசாரிகள் மீது தெய்வம் ஏறி உருக்கொண்டு ஆடுவோருக்குப் பெரு விருப்பு ஏற்படும்,மக்களிடையே அவருக்கு மிகுந்த மரியாதையும் இருக்கும்
தெய்வம் ஏறி ஆடுவோரிடமும் மக்களிடமும் பெரு மதிப்பும் மரியாதையும் பெற அவரிடம் காணப்பட்ட இத்திறன்களே காரணமாகும்
வீரசிங்கத்தாருக்கும்
பூசாரித்தனமும்
குரலும் குடும்பமுதுசம்
அவரது தந்தையாரும் ஓர் பூசாரியே அண்ணனாரும்
ஓர் பூசாரியே.
தன் இளம் வயதிலிருந்தே அவர்கள் அருகிலிருந்து இக்கிரியைகளைப் பார்த்து வளர்ந்தவர் விஸ்வலிங்கம் என அறிகிறோம்,
கிராமக் கோவில்களில் மடை வைத்தல் என்பது முக்கியமான ஒருகிரியை\
.மடை வைக்கும் முறை பல வகைப்படும்.
வெற்றிலை,கமுகம் பாளை,வாழைப்பழம்,வேப்பிலை பலவித பல வித பூக்கள் பொங்கல் கொண்டு அமைக்கப்படும் இம்மடைகள் மடை அமைப்போரின் திறனுக்கும் கற்பனைக்கும் ஏற்ப அலங்காரமாக அமையும்.
மடை கிராமக் கோவில்களின் ஓர் அடையாளம்
ஒரு வகையில் இது அடுக்குச் சாத்துதலுக்கு நிகரானது
.
ப்ல்வேறு
பூக்களையும்
இலைகளையும்
சேலைகளையும் இணைத்து அம்மன் முகக்களைக்குஅல்லது தெய்வச் சிலைகளுக்கு அடுக்குச் சாத்துவர் பூசாரிமர்
இது பெரும் கோவிகளில் சாத்துப்படி எனவும்
வழங்கப்படும்,அங்கு இதனைச் செய்பவர்கள் அங்கு பூசை புரியும் பிராமணர்களே
இது அவர் அவரவர் அனுபவத்தையும் கற்பனையும் பொறுத்துள்ளது
வீரசிங்கத்தார் மடை வைத்தலில் ஒரு தேர்ச்சி பெற்றவராகத் திகழந்தார் என அறிகிறோம் அவர் வைக்கும் மடைகள் தெய்வம் ஏறி ஆடுவோரைக் குளிர வைக்கும், பக்தர்களின் கண்களை விரிய வைக்கும் .
குலவித்தை கல்லாமல் பாகம் படும் என்பார்கள்.
சிறு வயதிலிருந்தே தந்தை அண்ணன் வைத்த மடைகளைப்பார்த்து வளர்ந்த இவர் அவர்களையும் விடச் சிறப்பான மடைகள் வைத்தார் என அறிகிறோம் அவர் வைக்கும் காத்தவராயர் மடை வீரபாகு மடை என்பன முக்கியமும் பிரசித்தமும் வாய்ந்தவை.
இவற்றை அழகாகவும் சிறப்பாகவும் செய்யக்கூடிய ஒரே ஒரு பூசாரி என்ற பெயரையும் அவர் கிராமத்தில் பெற்றிருந்தார்
வீரசிங்கத்தாரின் இரத்தம் நாடி நரம்பு சதைகள் எல்லாம் இந்த மந்திரம் கிரியைகள் மடை வைத்தல் என்பன ஊறிக்கிடந்தன
,
வீடுகள் தோறும் நடக்கின்ற கும்பம் வைத்தல்,பத்தினிஅம்மன் வேள்வி,, வீரபத்திர வேள்வி மற்றும் கிராமத்தின் வீடுகள் தோறும் நடக்கின்ற கரையல் படையல் ஆகியவற்றில் ஊரவரின் பெரு நம்பிக்கைக்கும் அபிமானத்திற்குமுரியவராக இருந்தார்
கிராமத்து நாடக மன்றங்களுக்குக் கிரமத்தில் ஓர் தனி மவுசு உண்டு
,கிராமத்து நாடகங்களில் புகழ்பூத்த ந்டிகனாக வலம் வந்தார் என அறிகிறோம்,
இவரது பாட்டுத் திறனும் நடிப்புத் திறனும் கற்பனைத்திறனும் நல்லதோர் ந்டிகனாக வர இவருக்கு உதவின
வில்லிசையே இவரின் அடையாளமாயிற்று
வில்லிசை வீரசிங்கம் என்ச்ப் பிரபல்லியம் பெற்றார்
இத்திறமையினால் பட்டங்கள் பலவும் பெற்றார்
.வில்லுப்பாட்டில்
தமிழுணர்வுக் கருத்துக்கள்,
சமூக முன்னேற்றக் கருத்துக்கள்
சீர் திருத்தக் கருத்துக்கள் என்பனவற்றை பாடி அவற்றை மக்கள் மத்தியில் விதைத்து ஒரு சமூக நலனாட்டக் கலைஞராகப் பிரகாசித்தார்
அப்பிரகாசம் அண்மையில் அடங்கி விட்டது
வீரசிங்கத்தார் குடத்துள் விளக்கா?
குன்றின் மேலிட்ட தீபமா?
அக்கினிக்குஞ்சின் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ? எனக் கேட்டான் பாரதி
வீரசிங்கத்தார் கிராமத்தில் வாழ்ந்த ஒரு அக்கினிக் குஞ்சு
,அதன் சுவாலை கிராமம் ந்கரம் எங்கு வீசியது
நாம் அவரைக் கிராமம் எனும் குன்றின்மேலிட்ட தீபம் என அழைக்கலாம்
மௌனகுரு

No comments:

Post a Comment