Wednesday 25 August 2010

கிழக்கில் ஏறு கெழுத்தியும்-கண்டலின் அழகும்

பருவ கால முதல் மழை ஆரம்பித்தாலே ஊரெல்லாம் "ஏறு கெளுத்தி" என்ற பேச்சு.
மிக ருசியானது ஏறு கெளுத்தி நம்ம அம்மாட சமையலில் வந்தா....இந்த மீன் கறியில் விசேசம் என்னண்டா அதன் சினை தான் (பாவம் அதன் இனப் பெருக்கத்தின் முட்டைகள் தான் இந்த சினைகள்). அதனை வேறாக எடுத்து குழம்பு சமைக்க (உண்மையில் ஆணம் பேச்சு வழக்கில் குழம்ப்புக் கறி) ச்சோ .... வாய் ஊறும் நாக்கில் அதாவது எச்சில் ஊறும்.....

கெளுத்தி என்பதன் ஆங்கில பெயர் Cat fish.

ஆம் நமக்கு பக்கத்தில தான் நமது மட்டக்களப்பு வாவி இதுவே மட்டக்களப்பின் பெரிய நன்னீர் ஏரி. இதுலதான் பாடுமீன்களும் (நீரர மகளீர்) கச்சேரி நடத்துவதும் நீங்கள் அறிந்ததே.

நிற்க, நம்மட மக்களுக்கு நல்ல மீன் இனங்களை வாரி வழங்கும் இங்கு தான் இந்த கெளுத்தி இனங்களின் படைஎடுப்பு.
மழைக் காலங்களில் ஊர்களில் இருந்து வாய்க்கால் வழியே பெருக்கு நீர் வாவியை சென்றடைய, அந்த ஓடும் நீரில் இந்த கெளுத்தி மீன்கள் வாவியிலிருந்து வரம்புகளுக்கு எதிர் நீச்சல் போடும் அப்போது தான் அவை ஏறும் கெளுத்தி "ஏறு கெளுத்தி" என்று பொருள்படும். அப்படி ஏறும் பொழுது அவற்றை ஒரு வலையில் பிடித்து எடுப்பர்.(அந்த வலையை "அத்தாங்கு" என்று சொல்லுவர்)

அத்தாங்கில் சிக்கும் கெளுத்திகள்













பிடித்த மீன்கள் ஒரு பார்வைக்கு






ஆனா நம்ம பிள்ளைகள் இப்போ சற்று வித்தியாசமாக அவற்றை எப்படி பிடிக்கிறாங்க எண்டு பாருங்க.







இப்படி வாவி நீரை வயல் வரம்புகளில் கட்டி வைத்து அத இரவுப் பொழுதுகளில் திறக்க விடும் போது இந்த கெளுத்தி மீன்கள் வரம்புகளுக்கு ஏறும் போது அவற்றை பிடித்துக் கொள்ளுவார்கள்.

சரி இப்ப பாப்போம், நம்ம மட்டக்களப்பு வாவி + கண்டல் தாவரங்கள் + மீன் பிடித்தல் + அழகு


















No comments:

Post a Comment