Monday 16 August 2010

ரூபராணி ஜோசப்

பிறந்த இடம்:  மட்டக்களப்பு (05.09.1935)


படைப்பாற்றல்: சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல்ஈ கட்டுரை

படைப்புகள்:

    * ஏணியும் தோணியும் - சிறுவர் இலக்கியம்
    * அம்மாவின் ஆலோசனைகள் - சிறுவர் இலக்கியம்
    * இல்லை,  இல்லை – நாடகத் தொகுதி
    * ஒரு வித்தியாசமான விளம்பரம் - சிறுகதைத் தொகுதி
    * ஒரு தாயின் மடியில் - குறுநாவல்
    * நான் கண்ட துறவி – சிறு கைநூல்
    * கதைகள் அல்ல நிஜங்கள்

விருதுகள்:

    * மலையக கலையகப் பேரவை – சிறந்த இலக்கிய விருது
    * மத்திய மாகாண அரசின் சிறந்த கலைஞருக்கான விருது
    * சிறந்த கட்டுரைக்கான தேசிய விருது
    * சமய, சமூக அமைப்பின் சிறந்த கட்டுரைக்கான விருது
    * மட்டக்களப்பு கல்லூரி – சிறந்த நடிகைக்கான விருது
    * தமிழர் சிங்கள இணைப்பு – ரத்ன தீப விருது
    * தேசிய சாகித்திய பரிசு – ஏணியும் தோணியும்
    * மத்திய மாகாண சாகித்தியப் பரிசு – ஒரு தாயின் மடியில்
    * மத்திய மாகாண சாகித்தியப் பரிசு –  ஒரு வித்தியாசமான விளம்பரம்
    * வட கிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு - இல்லை இல்லை
    * நோர்வேயில் உலக ரீதியான சிறுகதைப்  போட்டி – முதற்பரிசு
    * கத்தோலிக்க தேசிய சங்கச் சிறுகதைப் போட்டி – பரிசு
    * இதுதவிர சொல்லின் செல்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி போன்ற பல பட்டங்களையும் பெற்றவர் இவர்.

இவர் பற்றி:

    * மலையக மக்களுக்காக கலை, இலக்கிய, சமூகப் பணிகளை ஆற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களைப் படைத்தும், நடித்தும், நெறிப்படுத்தியும் உள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி, இலக்கிய, அரசியல் சார்ந்த மேடைப்பேச்சுக்களை ஆற்றியவர்.
      23.04.2009 இல் காலமானார்

No comments:

Post a Comment